தொலைத்துவிட்டாய் மனிதனே! - நீ
தொலைத்துவிட்டாய்!
உன் ஆணவத்தாலும், அகம்பாவத்தாலும்,
அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும்,
அழகான ஓர் உறவை
அகாலமாய் இழந்துவிட்டாய்.
அதனால்தான் இன்று,
முதியோர் இல்லங்களும்,
மழலையர் காப்பகங்களும்
மூலைக்கு மூலை
முளைத்துள்ளன!
மறக்காதே! மறுக்காதே!
எங்கோ பிறந்து, வளர்ந்தாலும்,
உன்னையும், உன் உறவுகளையும்
தன்னதாய்க் கொள்ள,
எவ்வளவு
தயாள குணம் வேண்டுமென்பதை நீ
எள்ளளவும் எண்ணவில்லையே!
மூன்று முடிச்சுக்கு
முக்கியத்துவம் தந்து
முழு நேரமும்
மூச்சுவிடாமல் உழைத்திட
எத்தகைய
தாராள மனம் வேண்டுமென்பதை நீ
ஏறெடுத்தும் பார்க்கவில்லையே!
தாயாய், தாசியாய்
சேவகியாய், செவிலியாய்,
தோட்டியாய், துப்புரவாளராய்,
மேலாளராய், காசாளராய்,
பல்வேறு பொறுப்புகளையும்
எளிதாகக் கையாண்டதை நீ
ஏளனப்படுத்திவிட்டாயே!
திறமையாய் திட்டமிடுவோருக்குத்
தட்டிக்கொடுத்தல் தேவையென்பதையும்,
செம்மையாய் செயல்படுவோருக்கு
அங்கீகாரம் அவசியமென்பதையும்,
அறிந்தும் நீ
அலட்சியப்படுத்திவிட்டாயே!
அத்தனைப் பொறுப்புகளை
அநாயாசமாய் கையாள்பவர்
அநீதியைப் பொறுப்பரோ?
பொறுமையிழந்து
பொங்கியெழுந்து விட்டனர்
பூவினும் மிக மெல்லியர்.
படிக்கிறார்கள் -
பெரும் பதவி வகிக்கிறார்கள்.
உழைப்புக்குத் தகுந்த
ஊதியமும், உன்மத்தமும் கிடைக்கையில்
மூன்று முடிச்சு கூட வெறும்
சடங்காகிப் போனதில்
வியப்பென்ன இருக்கிறது?
விலைமதிப்பற்ற தன்
மூளையையும், உழைப்பையும்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பணயம் வைக்கிறார்கள்.
நீ இன்னமும்
'நீ'யாகவே இருக்கிறாய்!
உறவுகளையும், உணர்வுகளையும்
உதாசீனப்படுத்துகிறாய்!
இந்த கட்டமைப்பு
உறுதிப்பட்டுவிட்டது.
பெண்கள் வெளியில் சென்று
வேலை பார்ப்பதையே
பெரிதும் விரும்புகின்றனர்..
வலியையும், வயோதிகத்தையும்
வளரும் பிள்ளைகளையும்
வருடிக்கொடுக்க
விரல்களே இன்று இல்லை.
நினைவில் கொள்!
உன்னோடு இன்று வாழ்வது
உன்
மனைவி மட்டுமே!
'துணைவி'யைத் தான் நீ
தொலைத்துவிட்டாயே!
தொலைத்துவிட்டாய்!
உன் ஆணவத்தாலும், அகம்பாவத்தாலும்,
அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும்,
அழகான ஓர் உறவை
அகாலமாய் இழந்துவிட்டாய்.
அதனால்தான் இன்று,
முதியோர் இல்லங்களும்,
மழலையர் காப்பகங்களும்
மூலைக்கு மூலை
முளைத்துள்ளன!
மறக்காதே! மறுக்காதே!
எங்கோ பிறந்து, வளர்ந்தாலும்,
உன்னையும், உன் உறவுகளையும்
தன்னதாய்க் கொள்ள,
எவ்வளவு
தயாள குணம் வேண்டுமென்பதை நீ
எள்ளளவும் எண்ணவில்லையே!
மூன்று முடிச்சுக்கு
முக்கியத்துவம் தந்து
முழு நேரமும்
மூச்சுவிடாமல் உழைத்திட
எத்தகைய
தாராள மனம் வேண்டுமென்பதை நீ
ஏறெடுத்தும் பார்க்கவில்லையே!
தாயாய், தாசியாய்
சேவகியாய், செவிலியாய்,
தோட்டியாய், துப்புரவாளராய்,
மேலாளராய், காசாளராய்,
பல்வேறு பொறுப்புகளையும்
எளிதாகக் கையாண்டதை நீ
ஏளனப்படுத்திவிட்டாயே!
திறமையாய் திட்டமிடுவோருக்குத்
தட்டிக்கொடுத்தல் தேவையென்பதையும்,
செம்மையாய் செயல்படுவோருக்கு
அங்கீகாரம் அவசியமென்பதையும்,
அறிந்தும் நீ
அலட்சியப்படுத்திவிட்டாயே!
அத்தனைப் பொறுப்புகளை
அநாயாசமாய் கையாள்பவர்
அநீதியைப் பொறுப்பரோ?
பொறுமையிழந்து
பொங்கியெழுந்து விட்டனர்
பூவினும் மிக மெல்லியர்.
படிக்கிறார்கள் -
பெரும் பதவி வகிக்கிறார்கள்.
உழைப்புக்குத் தகுந்த
ஊதியமும், உன்மத்தமும் கிடைக்கையில்
மூன்று முடிச்சு கூட வெறும்
சடங்காகிப் போனதில்
வியப்பென்ன இருக்கிறது?
விலைமதிப்பற்ற தன்
மூளையையும், உழைப்பையும்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பணயம் வைக்கிறார்கள்.
நீ இன்னமும்
'நீ'யாகவே இருக்கிறாய்!
உறவுகளையும், உணர்வுகளையும்
உதாசீனப்படுத்துகிறாய்!
இந்த கட்டமைப்பு
உறுதிப்பட்டுவிட்டது.
பெண்கள் வெளியில் சென்று
வேலை பார்ப்பதையே
பெரிதும் விரும்புகின்றனர்..
வலியையும், வயோதிகத்தையும்
வளரும் பிள்ளைகளையும்
வருடிக்கொடுக்க
விரல்களே இன்று இல்லை.
நினைவில் கொள்!
உன்னோடு இன்று வாழ்வது
உன்
மனைவி மட்டுமே!
'துணைவி'யைத் தான் நீ
தொலைத்துவிட்டாயே!