அன்புமிகு சித்தப்பாவிற்கு -அடியேனின்
ஆசைமிகு நமஸ்காரங்கள்.
இங்கனைவரும் நலம்.
அங்ஙனமே அங்குமிதை
அறிவதற்கே ஆசை கொண்டேன்.
அன்பினிலே மூழ்கி வந்த
பண்பான கட்டளைக்காய்
சட்டத்தின் சட்டத்திலே
கட்டுப்படா புத்தம்புது
புதுக்கவிதை புனைகின்றேன்.
சிந்தனையை கோவிலாக்கி
கருவை தெய்வமாக்கி
சொல்லையே பூவாக்கி
பல்வேறு பூசனைகள்
செய்வதற்கே குருக்களானேன் .
பூவில் பிழையிருந்தால்
மன்னிக்க வேண்டுகிறேன்.
கருவே சரியில்லையெனில்
திருத்திடவே விரும்புகின்றேன்.
கல்வி கற்க கன்னி நான்
கல்லூரிக்கு வந்தபின்
கலைகள் சிலவற்றிலே
கலந்துகொண்டேன் வழக்கம் போல்.
பாரதியார் போட்டியில்
பாடலொன்று பாடினேன்.
முதலாக வந்தேனே
பரிசதனைப் பெற்றேனே....!
ஓவியத்தில் பங்கு கொண்டு
உய்வதனைப் பெற்றேனே!
முதலதனை நழுவவிட்டு
இரண்டாவதாக வந்தேனே!
தனி நடிப்பு என்பதிலே
நரிக்கதையை சொன்னேனே
இரண்டாம் பரிசொன்று கிட்டியது
பறந்து சென்று பெற்றேனே!
படிப்பில் சில குறைஇருப்பினும்
விடிய சில காலம்தான்
முடிவில் நல்ல பலனையே
நாடி நானும் படிக்கிறேன்.
இந்தியாவின் பாஷையான
ஹிந்தியையும் ஓரளவு
பக்குவமாய் எழுதியுள்ளேன்
பொறுத்திருந்தால் பலன் தெரியும்.
குமரச் சகோதரர்கள்
அபிராம சுந்தரியுடன்,
நித்தம் பல புத்தம் புது
தித்திக்கும் கலை
கற்றே புகழ்
எட்டுத் திசை
மட்டும் இன்றி
அண்டம் எங்கும்
பெற்றால் மனம்
மட்டற்றஆ னந்தத்தை
அனுபவிக்கும்.
தகவலில்லை ஊரிலிருந்து
பொறுமையில்லை காத்திருந்து
கோபம் ஒன்றே வடிகாலாய்
பாவை இவள் எண்ணுகையில்
கோவை இதழ் விரித்து
கோதை ஒருத்தியின்
இளங்குயிலின் குரலிலே
இசையதனைக் கேட்டதுபோல்
கண்டேன் தங்கள் கடிதத்தை
வரைந்தேன் காகிதத்தில் எண்ணியதை.
கல்லூரி பத்திரிகையில் - என்
கவிதையொன்று கண்சிமிட்டும்
மின்மினியா? நட்சத்திரமா?
பண்பாய் தாங்கள் படித்துவிட்டு
உண்மைதனை உரைக்கவேண்டும்.
முடிவெடுக்கும் பொறுப்பதனை
சித்திக்கும் கொடுக்கிறேன்
பக்குவமாய் சத்தியத்தை
பாங்காய் உரைக்கக் கோருகின்றேன்.
லக்ஷ்மி ராஜாராம்.
ஆசைமிகு நமஸ்காரங்கள்.
இங்கனைவரும் நலம்.
அங்ஙனமே அங்குமிதை
அறிவதற்கே ஆசை கொண்டேன்.
அன்பினிலே மூழ்கி வந்த
பண்பான கட்டளைக்காய்
சட்டத்தின் சட்டத்திலே
கட்டுப்படா புத்தம்புது
புதுக்கவிதை புனைகின்றேன்.
சிந்தனையை கோவிலாக்கி
கருவை தெய்வமாக்கி
சொல்லையே பூவாக்கி
பல்வேறு பூசனைகள்
செய்வதற்கே குருக்களானேன் .
பூவில் பிழையிருந்தால்
மன்னிக்க வேண்டுகிறேன்.
கருவே சரியில்லையெனில்
திருத்திடவே விரும்புகின்றேன்.
கல்வி கற்க கன்னி நான்
கல்லூரிக்கு வந்தபின்
கலைகள் சிலவற்றிலே
கலந்துகொண்டேன் வழக்கம் போல்.
பாரதியார் போட்டியில்
பாடலொன்று பாடினேன்.
முதலாக வந்தேனே
பரிசதனைப் பெற்றேனே....!
ஓவியத்தில் பங்கு கொண்டு
உய்வதனைப் பெற்றேனே!
முதலதனை நழுவவிட்டு
இரண்டாவதாக வந்தேனே!
தனி நடிப்பு என்பதிலே
நரிக்கதையை சொன்னேனே
இரண்டாம் பரிசொன்று கிட்டியது
பறந்து சென்று பெற்றேனே!
படிப்பில் சில குறைஇருப்பினும்
விடிய சில காலம்தான்
முடிவில் நல்ல பலனையே
நாடி நானும் படிக்கிறேன்.
இந்தியாவின் பாஷையான
ஹிந்தியையும் ஓரளவு
பக்குவமாய் எழுதியுள்ளேன்
பொறுத்திருந்தால் பலன் தெரியும்.
குமரச் சகோதரர்கள்
அபிராம சுந்தரியுடன்,
நித்தம் பல புத்தம் புது
தித்திக்கும் கலை
கற்றே புகழ்
எட்டுத் திசை
மட்டும் இன்றி
அண்டம் எங்கும்
பெற்றால் மனம்
மட்டற்றஆ னந்தத்தை
அனுபவிக்கும்.
தகவலில்லை ஊரிலிருந்து
பொறுமையில்லை காத்திருந்து
கோபம் ஒன்றே வடிகாலாய்
பாவை இவள் எண்ணுகையில்
கோவை இதழ் விரித்து
கோதை ஒருத்தியின்
இளங்குயிலின் குரலிலே
இசையதனைக் கேட்டதுபோல்
கண்டேன் தங்கள் கடிதத்தை
வரைந்தேன் காகிதத்தில் எண்ணியதை.
கல்லூரி பத்திரிகையில் - என்
கவிதையொன்று கண்சிமிட்டும்
மின்மினியா? நட்சத்திரமா?
பண்பாய் தாங்கள் படித்துவிட்டு
உண்மைதனை உரைக்கவேண்டும்.
முடிவெடுக்கும் பொறுப்பதனை
சித்திக்கும் கொடுக்கிறேன்
பக்குவமாய் சத்தியத்தை
பாங்காய் உரைக்கக் கோருகின்றேன்.
லக்ஷ்மி ராஜாராம்.