ஆயிரம் திருநாள்....!
பூமியில் வரலாம்... வரலாம்...!
இதுபோல் வருமா....!?
ஆயிரம் மலர்கள்.....
பூமியில் உளதாம்.... உளதாம்....!
குறிஞ்சி போல் வருமா...!?
வானில் நீந்தும் மேகங்களே.....!
வாழ்த்துக் கூறுங்களேன்.....!
நேரில் வந்து தெய்வங்களே....!
பூவைத் தூவுங்களேன்....!
(ஆயிரம் திருநாள்)
இயற்க்கை படிக்கும் கவிதைகளெல்லாம் ....
இதயம் இனிக்கச் செய்திடுதே...!
சிரிக்கும் விண்மீன் கூட்டங்களெல்லாம்
சேர்ந்து வாழ்த்து படிக்கிறதே...!
வாசத்தை வீசும் மலர்ச் செண்டும்...
நேசத்தைப் பாசத்தைப் பொழிகிறதே...!
அசைகின்ற பூங்காற்றும்,
ஒளிர்கின்ற வெண்ணிலவும்,
வாழ்த்தைத் தூவி மகிழ்கிறதே...!
(ஆயிரம் திருநாள்)
இறைவன் படைத்த உயிரினம் யாவும்...
இணைந்தே வாழ்த்து படிக்கிறதே...!
வாழ்க, வளர்க, ஆயிரம் ஆண்டு..
வாழ்த்துக்கள் பலநெஞ்சம் சொல்கிறதே...!
வாழ்வே எந்நாளும் வளர் பிறையே....
பாசம் நம் வாழ்வின் பதவுரையே..!
உலகினர் எல்லோரும்
உறவெனக் கொண்டோமே...!
அன்பெனும் ராஜாங்கம்
அமைத்திடச் செய்தோமே...!
இனிமை.., வசந்தம் தொடரட்டுமே.....!
(ஆயிரம் திருநாள்)
பூமியில் வரலாம்... வரலாம்...!
இதுபோல் வருமா....!?
ஆயிரம் மலர்கள்.....
பூமியில் உளதாம்.... உளதாம்....!
குறிஞ்சி போல் வருமா...!?
வானில் நீந்தும் மேகங்களே.....!
வாழ்த்துக் கூறுங்களேன்.....!
நேரில் வந்து தெய்வங்களே....!
பூவைத் தூவுங்களேன்....!
(ஆயிரம் திருநாள்)
இயற்க்கை படிக்கும் கவிதைகளெல்லாம் ....
இதயம் இனிக்கச் செய்திடுதே...!
சிரிக்கும் விண்மீன் கூட்டங்களெல்லாம்
சேர்ந்து வாழ்த்து படிக்கிறதே...!
வாசத்தை வீசும் மலர்ச் செண்டும்...
நேசத்தைப் பாசத்தைப் பொழிகிறதே...!
அசைகின்ற பூங்காற்றும்,
ஒளிர்கின்ற வெண்ணிலவும்,
வாழ்த்தைத் தூவி மகிழ்கிறதே...!
(ஆயிரம் திருநாள்)
இறைவன் படைத்த உயிரினம் யாவும்...
இணைந்தே வாழ்த்து படிக்கிறதே...!
வாழ்க, வளர்க, ஆயிரம் ஆண்டு..
வாழ்த்துக்கள் பலநெஞ்சம் சொல்கிறதே...!
வாழ்வே எந்நாளும் வளர் பிறையே....
பாசம் நம் வாழ்வின் பதவுரையே..!
உலகினர் எல்லோரும்
உறவெனக் கொண்டோமே...!
அன்பெனும் ராஜாங்கம்
அமைத்திடச் செய்தோமே...!
இனிமை.., வசந்தம் தொடரட்டுமே.....!
(ஆயிரம் திருநாள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக