வியாழன், 28 ஏப்ரல், 2016

வெற்றுத்தாள் - வரதட்சணைக் கொடுமை.

உன்னை-
எதிர் காலக் காவலனாய்
எங்கிருக்கிறாய் என்றே அறியாமல்....

கவிதையில் பல்லவியாய்        
கற்பனையில் நாயகனாய்
நினைத்திருந்த எனக்கு
பருவம் வந்ததும்
பலவற்றைக் கேட்டு,
பார்த்து, உணர்ந்ததால்
புரிந்தது....

நீ நாயகனுமல்ல,
நல்முத்துமல்ல...
விலைபோக
விலாசம் தேடும்
விளம்பரப்படுத்தப்பட்ட
வேற்றுத்தாளென்று!

நீ
சம்யுக்தையை மணக்கப்போகும்
ப்ருத்விராஜனல்ல !
சம்சாரக் கடலில்
நீ மூழ்கி - நீ முத்தெடுக்க
மூச்சடக்க மட்டும்
மாமனார் முகம் பார்க்கும்
கோழையென்று.!

நீ
வில்லொடித்து சீதையை
மணக்க வந்த ஸ்ரீராமனல்ல !
கல்யாண சந்தையின்
ஏலப்பொருளென்று !

கவிதையாய் நான் காலமெல்லாம்
இருக்க சம்மதிக்கையில்
வேற்றுத்தாளுக்கென்ன .
இத்தனை வீறாப்பு ?

ஒன்றுமட்டும் புரிந்துகொள்
கன்னிகள் போராடத் துவங்கினால்
புவியில் எஞ்சுவது
புல்லினங்கள் மட்டுமே என்று.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக