இராவணனின்
துறவி வேடம்
மைத்துனன்
அகன்றதும் மூப்பினைத் தரித்த இராவணன்,
பத்துத்தலை
துறந்து, ஒற்றைத் தலை ஏற்றான்.
இளைத்த
உடலுடன், இடுங்கிய கண்ணுடன்,
பூணூல்
மார்புடன், கூனனாய்த் தோன்றினான்.
பண்ணசாலையின்
முன்வாயில் வந்தான் முதியவன்.
‘உள்
உறைவார் யாரெ’ன் றழைத்தான் இப்புதியவன்.
‘எழுந்தருள்க’
யென்றபடி எதிர்ப்பட்ட வடிவினள்,
பிரம்பு
ஆசனத்தில் ‘இருந்தீரெ’ன வணங்கினள்.
அழகுக்கு
அணிகலனாய், புகழுக்குப் பிறப்பிடமாய்,
கற்புக்குப்
பொருளுரையாய், கற்பனையின் முகவுரையாய்
விழிகளுக்கு
விருந்தான எழிலரசியைக் கண்டதும் - அவன்
வீரத்தோள்கள்
இரண்டும் வீங்கி விறைத்தன.
கட்டவிழ்த்த
சிலையான கலைப்பெட்டகம் ஒன்றினைக்
கண்டுபிடித்துத்
தந்த இளையவளுக்கு ‘நன்றி’யென்றான்.
‘திரிதண்டமெ’னும்
முக்கோலை அப்பால் வைத்தவன்
பண்ணசாலைக்குள்
குனிந்து பணிந்து நுழைந்தான்.
(திரிதண்டம் : இது மூன்று மூங்கிற்
கம்புகளை ஒன்றாக இணைத்துக் கட்டப்பெற்ற தண்டு. காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பகைகளை
அடக்கியதற்கு அடையாளமாக இத் திரிதண்டை, துறவிகள் கொள்வர்.)
கடுந்தொழி
லரக்கனின் வஞ்சக வருகையல்
நடுங்கி,
நின்றன மலைகளும், மரங்களும் – கூவாது
அடங்கி
அமர்ந்தன பறவைகளும் குருவிகளும்
படத்தை
ஒடுக்கின பாம்புகளும், நாகர்களும்.
இராவணன் பிராட்டியை வினாவுதல்
‘இருப்பவர்
யார்? இங்கு தவத்தோர் யாரென?’
விருத்தனாய்
வந்த அரக்கன் வினவினான்;
விருந்தினராய்
வந்த இவர் விகல்பம் அற்றவரென
விவரங்களை
விளக்கமாய்க் கூறினாள் வைதேகி
‘மன்னவனாம்
என்னவனை அறிவீர் அன்றோ?’ என்ன
‘கேட்டனன்
காதுகளால், கண்டிலன் கண்களால்’ என்றவன்,
‘காட்டிடை
இரவு பகல் அரிது இருக்கின்றீரே!
யாருடை
மகள்?’ என்ன, ‘ஜனகன் மகள் ஜானகி’யென்றாள்.
‘எவ்விடமிருந்து
இவ்விடம் எய்தினீர்?’ கேட்டாள்,
‘முக்காலமும்
தவம்செய்து, வனத்தில் வசித்த நான்
வல்லவ
வேந்தன் ஆளும் இலங்காபுரி சென்று,
நல்லுபதேசங்கள்
நல்கியபடி இருந்ததும் நன்று.
பத்துத்
தலைகள் கொண்ட இராவணேஸ்வரன் புகழ்
எட்டுத்
திக்கும், பாதாளம், வானுலகும் எதிரொலிக்கும்.
நாற்கடல்
சூழ் இலங்கை தீவுக்கு அவன் அதிபதி. - அவனுடை
பெருமை
இயம்பிடும் சொற்களோ தமிழில் குறைமதி.
பிரம்மனின்
வழிவந்தவன்; மூவுலகையும் ஆள்பவன்.
இந்திரனின்
தலைவனவன்; எழுதவொண்ணா ஆணழகன்.
வேதமிசைக்கும்
நாவான்; கயிலை மலையெடுத்த தோளான்.
இதமான
துணைதேடி இளைத்துவிட்ட வாளான்’ என்றான்.
‘தவச்செயல் புரிந்த நீவீர், வேதியருடன் வசிக்காமல்,
அவச்செயல்
புரியும் அரக்கருடன் வசிக்கிறீரே?’ என்ன
‘தேவரைப்போல்
கொடியவரல்லர் நிருதர்கள்’
தவசியரை விட நிருதரே நல்லார் போலும்’ என்றான்.
‘கேடுகெட்ட
அரக்கரெல்லாம் வேண்டுமுரு எடுக்கவல்லார்.
பாடுபட்ட
பயனையெல்லாம் மாயையினால் தடுக்கவல்லார்.
காடுதனில்
தவமுனிக்குக் காலனாக இருந்திடுவார்.
‘கெட்டாரைச்
சேர்ந்த நல்லாரும் கெட்டாரே’ யென்றவள்.,
‘அறம்தரும்
வள்ளலாம் எம்பெருமான் இவ்வனத்துள்ளே
அரும்தவம்
புரிந்தவண்ணம் இருக்கின்ற தினத்துள்ளே
அல்லல்கள்
பல செய்து, அதர்மங்கள் புரிகின்ற
அரக்கர்கள், தம் வருக்கத்தோடு இறப்பர்’ என்றாள்.
அவளுரை
கேட்டு இருளடைந்த இராவணன்
‘யானையின்
இனத்தை இளமுயல் கொல்லுமா?
ஆண்சிங்கங்களை
அழித்திடுமா புள்ளிமான்?
வைக்கோல்கள்
வாட்களாவது அதிசயம்தான்’ சினந்தான்.
(தொடர்ந்து வரும்)