நானா இது...? எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லையே! என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் இப்படி மாறிவிட்டேன்?
அச்சச்சோ ! விஜி...... எனக்கு உன் ஞாபகம் வருகிறதே! நீ என்னைப் பார்த்துவிட்டாயா என்று தெரியவில்லை! என்னைப் பார்த்தால் நீ என்ன நினைப்பாய்? என்ன செய்வாய் என்ற எண்ணமே எனக்கு உதறலாக இருக்கிறதே!.
'விஜி, என்னை வெறுத்துவிடதே! நான் உனக்கே சொந்தம். என்னை நம்பு விஜி. இது என் தவறல்ல.' என்று உள்ளம் உரத்துக் கூவுகிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே எப்பொழுதும் போலவே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? நான் என்ன செய்வேன்?
எத்தனை அழகானவள் விஜி! தன அழகின் மேல்தான் அவளுக்கு எத்தனை கர்வம்.! 'விஜி...! விஜி....! எனக்கு துக்கம் பீறிடுகிறது.
அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை. பார்த்தபின்...... அப்படியே என்னை ஏற்றுக்கொள்வாளா ? அல்லது என் இந்த மாற்றத்தை சரி செய்ய முயற்சி செய்வாளா..? என்று எனக்குத் தெரியவில்லை.
இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசிக்கத் தொடங்கிய விஜியின் பார்வை என் மீது பட்டது. ஆம்... நான் எந்த தருணத்தைப் பீதியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேனோ அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது.
அதிர்ச்சி அவளை ஆட்கொண்டது!
கண்களை அகல விரித்து - பதற்றமாய் என்னைப் பார்த்தாள்.
முகம் பேயறைந்ததைப் போல ஆனது.
கார் மேகம் போன்ற அவளின் அடர்ந்த கூந்தலில் வெள்ளி கம்பி போல், காதருகில் உருமாறிவிட்ட - என்னை - ஒற்றை நரை முடியை தன் விரல்களால் உயர்த்திப் பார்த்தாள் .
அவள் இதயம் விம்மத் தொடங்கியது.
உடனே சுதாரித்துக்கொண்டு , சட்டென எழுந்து கத்திரிக்கோல் கொண்டுவந்து என்னை - என்னை அடியோடு கத்தரித்து அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள்.
நீங்களே சொல்லுங்கள்! அவள் செய்தது சரியா...? இந்த மாற்றம் என் குற்றமா என்ன...? எவ்வளவு வழி முறைகள் உள்ளன உலகத்தில்! இப்படி வெட்டி எடுத்து விலக்கலாமா..? யாராவது சொல்லுங்களேன்...!
அச்சச்சோ ! விஜி...... எனக்கு உன் ஞாபகம் வருகிறதே! நீ என்னைப் பார்த்துவிட்டாயா என்று தெரியவில்லை! என்னைப் பார்த்தால் நீ என்ன நினைப்பாய்? என்ன செய்வாய் என்ற எண்ணமே எனக்கு உதறலாக இருக்கிறதே!.
'விஜி, என்னை வெறுத்துவிடதே! நான் உனக்கே சொந்தம். என்னை நம்பு விஜி. இது என் தவறல்ல.' என்று உள்ளம் உரத்துக் கூவுகிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே எப்பொழுதும் போலவே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? நான் என்ன செய்வேன்?
எத்தனை அழகானவள் விஜி! தன அழகின் மேல்தான் அவளுக்கு எத்தனை கர்வம்.! 'விஜி...! விஜி....! எனக்கு துக்கம் பீறிடுகிறது.
அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை. பார்த்தபின்...... அப்படியே என்னை ஏற்றுக்கொள்வாளா ? அல்லது என் இந்த மாற்றத்தை சரி செய்ய முயற்சி செய்வாளா..? என்று எனக்குத் தெரியவில்லை.
இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசிக்கத் தொடங்கிய விஜியின் பார்வை என் மீது பட்டது. ஆம்... நான் எந்த தருணத்தைப் பீதியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேனோ அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது.
அதிர்ச்சி அவளை ஆட்கொண்டது!
கண்களை அகல விரித்து - பதற்றமாய் என்னைப் பார்த்தாள்.
முகம் பேயறைந்ததைப் போல ஆனது.
கார் மேகம் போன்ற அவளின் அடர்ந்த கூந்தலில் வெள்ளி கம்பி போல், காதருகில் உருமாறிவிட்ட - என்னை - ஒற்றை நரை முடியை தன் விரல்களால் உயர்த்திப் பார்த்தாள் .
அவள் இதயம் விம்மத் தொடங்கியது.
உடனே சுதாரித்துக்கொண்டு , சட்டென எழுந்து கத்திரிக்கோல் கொண்டுவந்து என்னை - என்னை அடியோடு கத்தரித்து அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள்.
நீங்களே சொல்லுங்கள்! அவள் செய்தது சரியா...? இந்த மாற்றம் என் குற்றமா என்ன...? எவ்வளவு வழி முறைகள் உள்ளன உலகத்தில்! இப்படி வெட்டி எடுத்து விலக்கலாமா..? யாராவது சொல்லுங்களேன்...!