மான் கூட்டம் ஒன்றை
நோட்டம்விட்ட வேடன்,
மறைந்து நின்று அம்புவிட
மருண்டு ஓடின மான்கள்
குறி சிறிதும் தப்பாமல்
குட்டி மானை அம்பு தாக்க....
மற்ற மான்கள் ஓடுகையில்
பெற்ற மான் பின்னடைந்ததாம்
கண்ணீருடன்!
அம்மா...!
அன்பைப் பொழிபவள்
அரவணைத்துச் செல்பவள்!
புத்திமதி சொல்பவள்
பொத்தி பொத்தி வளர்ப்பவள்!
கருவறையில் சுமந்தவள்!
குருதி தந்து வளர்த்தவள்.
பாசத்தைச் சொரிபவள்
பாராட்டி மகிழ்பவள்.
இவை மட்டும் போதுமா என்ன...?
'அட்சய பாத்திரம் ' அவள் என்ன..!
சான்றுக் கதையொன்று கூறுகின்றேன்
கட்டுக் கதையல்ல உணர்வீர்.
பெற்றவளின் இதயத்தைப்
பகீரங்கமாய் பிய்த்தெடுத்து
படையலாய்த் தரச்சொன்னாள்
பேய் மனம் கொண்ட காதலிஒருத்தி
இனியவளைத் திருப்திக்க - பெற்றவள்
இதயத்தைப் பெயர்த்தெடுத்தான்
இரு கரங்களில் ஏந்திய அவன் - அதை
இயல்பாக எடுத்துவந்தான்
வருகின்ற வழிதனிலே
கருங்கல்லில் கால்பட்டுத்
தெரியாமல் இடறியதால்
தடுமாறி விழப்போனான்
'பார்த்துப் போப்பா மகனே'- என்ற
வார்த்தைகள் விம்மி விழ,
பரிதவித்துப் போனதாம்
விதிர் விதிர்த்துப் போனதாம்
'தாயிதயம்'
அள்ள அள்ளக் குறையாதாம் 'அட்சயபாத்திரம்'
கிள்ளி எறிந்தாலும், தள்ளி வைத்தாலும்
வெள்ளை மனத்தினளாம் அம்மா
முல்லை மணத்தினளாம் அம்மா
ஆம்! உண்மை!
அம்மா ஒரு அட்சயபாத்திரம்.
நோட்டம்விட்ட வேடன்,
மறைந்து நின்று அம்புவிட
மருண்டு ஓடின மான்கள்
குறி சிறிதும் தப்பாமல்
குட்டி மானை அம்பு தாக்க....
மற்ற மான்கள் ஓடுகையில்
பெற்ற மான் பின்னடைந்ததாம்
கண்ணீருடன்!
அம்மா...!
அன்பைப் பொழிபவள்
அரவணைத்துச் செல்பவள்!
புத்திமதி சொல்பவள்
பொத்தி பொத்தி வளர்ப்பவள்!
கருவறையில் சுமந்தவள்!
குருதி தந்து வளர்த்தவள்.
பாசத்தைச் சொரிபவள்
பாராட்டி மகிழ்பவள்.
இவை மட்டும் போதுமா என்ன...?
'அட்சய பாத்திரம் ' அவள் என்ன..!
சான்றுக் கதையொன்று கூறுகின்றேன்
கட்டுக் கதையல்ல உணர்வீர்.
பெற்றவளின் இதயத்தைப்
பகீரங்கமாய் பிய்த்தெடுத்து
படையலாய்த் தரச்சொன்னாள்
பேய் மனம் கொண்ட காதலிஒருத்தி
இனியவளைத் திருப்திக்க - பெற்றவள்
இதயத்தைப் பெயர்த்தெடுத்தான்
இரு கரங்களில் ஏந்திய அவன் - அதை
இயல்பாக எடுத்துவந்தான்
வருகின்ற வழிதனிலே
கருங்கல்லில் கால்பட்டுத்
தெரியாமல் இடறியதால்
தடுமாறி விழப்போனான்
'பார்த்துப் போப்பா மகனே'- என்ற
வார்த்தைகள் விம்மி விழ,
பரிதவித்துப் போனதாம்
விதிர் விதிர்த்துப் போனதாம்
'தாயிதயம்'
அள்ள அள்ளக் குறையாதாம் 'அட்சயபாத்திரம்'
கிள்ளி எறிந்தாலும், தள்ளி வைத்தாலும்
வெள்ளை மனத்தினளாம் அம்மா
முல்லை மணத்தினளாம் அம்மா
ஆம்! உண்மை!
அம்மா ஒரு அட்சயபாத்திரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக