தேசம் காக்க-
தேகம் தந்து - உயிர்த்
தியாகம் செய்த
உயர்ந்தோனே...!
நாடும் வீடும்
உனக்களித்த
வீரவணக்கம்
வந்து சேர்ந்ததா...?
பெற்றோரும், உற்றோரும்
கதறிய கதறல் - உன்
காதில் விழுந்ததா...?
பனி மழையில்,
குகை இருளில்,
மலைச் சரிவில்,
புதர் மறைவில் - என
எத்தனை முறை
போராடியிருப்பாய்....?
இன்றும் கூட
புற முதுகிட்டு ஓடவில்லை நீ!
போர்க்களத்திலே,
மார்பிலே குண்டு பாய்ந்து
வீரமாய் அன்றோ
மாண்டு போனாய்!
நாட்டுக்காக பலர் செய்த
நற்செயல் பற்றியெல்லாம்
ஏட்டினில் மட்டுமே
கண்டதுண்டு! - அதை நம்
வீட்டினில் கண்டதும்
இறுமாந்து போகிறோம்
இதயத்து வேதனையை
இயல்பாக மறைத்துவிட்டு!
பெற்ற தாய் தந்தை
பற்றற்று பரிதவிக்க,
கட்டிய இளம் மனைவி
கண்ணீரில் தத்தளிக்க,
பால் மணம் மாறா
பச்சிளம் பிஞ்சு
பரிதாபமாய் தனித்திருக்க,
நீயோ....
கடமையை கருத்துடனே
கண்ணியமாய் செய்துவிட்டு,
கற்பூரமாய் காற்றில் கலந்து
காலமாகிப் போனாயே...!
அன்று...!
ஆங்கிலேயன் போட்ட விலங்கை
அகற்றி எறிந்துவிட
தன் நலனைத் தள்ளி வைத்து
தள்ளாத வயதிலும்
துவளாமல் போராடி
'மகாத்மா' ஆனார்
பொக்கைவாய் காந்தி!
இன்றோ....
வாழ்ந்து களிக்க
வயதும், வருடமும்
ஏராளம் எஞ்சியிருக்க-
சின்னஞ்சிறு வயதில்
தீவிரவாதியுடன்
போராடி மறைந்த
'ஷ்யாம் சுந்தர்'
நீயும் ஒரு மகாத்மா தான்!
ஆம்!
நீயும் ஒரு மகாத்மாதான்!
தேகம் தந்து - உயிர்த்
தியாகம் செய்த
உயர்ந்தோனே...!
நாடும் வீடும்
உனக்களித்த
வீரவணக்கம்
வந்து சேர்ந்ததா...?
பெற்றோரும், உற்றோரும்
கதறிய கதறல் - உன்
காதில் விழுந்ததா...?
பனி மழையில்,
குகை இருளில்,
மலைச் சரிவில்,
புதர் மறைவில் - என
எத்தனை முறை
போராடியிருப்பாய்....?
இன்றும் கூட
புற முதுகிட்டு ஓடவில்லை நீ!
போர்க்களத்திலே,
மார்பிலே குண்டு பாய்ந்து
வீரமாய் அன்றோ
மாண்டு போனாய்!
நாட்டுக்காக பலர் செய்த
நற்செயல் பற்றியெல்லாம்
ஏட்டினில் மட்டுமே
கண்டதுண்டு! - அதை நம்
வீட்டினில் கண்டதும்
இறுமாந்து போகிறோம்
இதயத்து வேதனையை
இயல்பாக மறைத்துவிட்டு!
பெற்ற தாய் தந்தை
பற்றற்று பரிதவிக்க,
கட்டிய இளம் மனைவி
கண்ணீரில் தத்தளிக்க,
பால் மணம் மாறா
பச்சிளம் பிஞ்சு
பரிதாபமாய் தனித்திருக்க,
நீயோ....
கடமையை கருத்துடனே
கண்ணியமாய் செய்துவிட்டு,
கற்பூரமாய் காற்றில் கலந்து
காலமாகிப் போனாயே...!
அன்று...!
ஆங்கிலேயன் போட்ட விலங்கை
அகற்றி எறிந்துவிட
தன் நலனைத் தள்ளி வைத்து
தள்ளாத வயதிலும்
துவளாமல் போராடி
'மகாத்மா' ஆனார்
பொக்கைவாய் காந்தி!
இன்றோ....
வாழ்ந்து களிக்க
வயதும், வருடமும்
ஏராளம் எஞ்சியிருக்க-
சின்னஞ்சிறு வயதில்
தீவிரவாதியுடன்
போராடி மறைந்த
'ஷ்யாம் சுந்தர்'
நீயும் ஒரு மகாத்மா தான்!
ஆம்!
நீயும் ஒரு மகாத்மாதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக