இரண்டு நாட்களாக அவள் ஞாபகமாகவே இருக்கிறது. இதே போன்ற பிரிவு சமீப காலமாக பல முறை ஏற்பட்ட போதிலும், இம்முறை மனம் அலை பாய்கிறது. அதே நேரம் அவளும் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பாளா ..? அல்லது என் நினைவே அவளுக்குத் தோன்றாததுபோல் நடந்து கொள்வாளா..? தெரியவில்லை.
ஆனால் நான் ஒவ்வொரு நிமிடமும் , இப்போது அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்? என்ன நிற உடை உடுத்திக்கொண்டிருப்பாள், என்ன சாப்பிட்டிருப்பாள், என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
தொலைபேசியோ, கைபேசியோ ஒலித்தால், அவளோ, அவளோ என்று ஆவலுடன் பார்க்கிறேன். இதோ.... இதோ.... என் கைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ' என்று படபடப்புடன் கூறும் என்னை இவர் கேலியாகப் பார்க்கிறார்.
"ஹலோ அம்மா, சாரி மா ரெண்டு நாளா போன் பண்ணவேயில்ல. ரூம்ல திங்க்ஸ்லாம் அடிக்கிவேச்சுட்டேன். ம்ம் அம்மா எங்க மெஸ்ல கேடரர்ஸ் மாறியாச்சும்மா. சாப்பாடு செம டேஸ்டியா இருக்கு.. என்னம்மா பேசவே மாட்டேங்கறே .அழறியா என்ன....?" பேசிக்கொண்டேயிருந்தாள் என் செல்ல மகள்.
ஆனால் நான் ஒவ்வொரு நிமிடமும் , இப்போது அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்? என்ன நிற உடை உடுத்திக்கொண்டிருப்பாள், என்ன சாப்பிட்டிருப்பாள், என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
தொலைபேசியோ, கைபேசியோ ஒலித்தால், அவளோ, அவளோ என்று ஆவலுடன் பார்க்கிறேன். இதோ.... இதோ.... என் கைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ' என்று படபடப்புடன் கூறும் என்னை இவர் கேலியாகப் பார்க்கிறார்.
"ஹலோ அம்மா, சாரி மா ரெண்டு நாளா போன் பண்ணவேயில்ல. ரூம்ல திங்க்ஸ்லாம் அடிக்கிவேச்சுட்டேன். ம்ம் அம்மா எங்க மெஸ்ல கேடரர்ஸ் மாறியாச்சும்மா. சாப்பாடு செம டேஸ்டியா இருக்கு.. என்னம்மா பேசவே மாட்டேங்கறே .அழறியா என்ன....?" பேசிக்கொண்டேயிருந்தாள் என் செல்ல மகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக