ஒரு வாரமாக ராமசாமி மில்லுக்கு வாடிக்கையாளர்கள் வருவதும் ஏதாவது அரைத்துக்கொண்டு போவதுமாக இருந்தனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.
"அண்ணே! ஈர அரிசி ரெண்டு கிலோ அதிரசத்துக்குண்ணே! கொஞ்சம் சீக்கிரண்ணே! பசங்க ஸ்கூல்லேர்ந்து வந்துடுவாங்க"
"ஏம்பா.... முறுக்குக்கு அரைக்கணும்!
"ஏங்க.... எவ்ளோ நேரமா நிக்கறேன்... சாம்பார் பொடிக்கு!"
இப்படி அங்கங்கிருந்து குரல்கள் வந்து கொண்டிருந்தன.
ராமசாமி பம்பரமாக சுழன்று, ஈர அரிசி மிஷினை ஓட விட்டு அரைப்பார். "கொஞ்சம் இருங்க மாமி....ஈர மாவு அரைச்சுட்டு முறுக்குக்கு அரைச்சு தரேன்" என்பார். "ஏங்க... தீபாவளி பலகார மாவு அரைக்க எவ்ளோ பேர் வந்திருக்காங்க.. சாம்பார் பொடியெ வைச்சுட்டு போங்க.. கடைசியா அரைச்சு வைக்கறேன்" என்று அவரவர்களுக்கு பதில் கூறிவிட்டு சுறுசுறுப்பாக வேலை பார்த்தபடி இருந்தார்.
தீபாவளி நேரமானதால் அவரின் மருமகளும் இந்த பத்து நாட்களாக மில்லுக்கு வந்து, அரைகூலி வாங்கி வைத்து, அரவையை, வருசைப்படுத்தி, அவருக்கு உதவியாக இருந்தாள். இன்று சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவானதால் பேத்தி சரசா, தாத்தாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.
மிஷின் ஓடும் 'கடக் கடக்' சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. ராமசாமி அரைக்க வந்த சாமான்களைத் தூக்கி, அதன் வாய்ப் பகுதியில் கொட்டினார். மாவு அரைபட்டு வெளியே கொட்டும் குழாயின் வாயை நீளமான வெள்ளைத் துணியால் குழாய் போலவே உருளை வடிவில் கட்டியிருந்தார். அதிலிருந்து கொட்டும் மாவை பிடிக்க வைத்திருந்த வேறொரு டின்னில் பாதி அரைபட்டிருந்த மாவைப் பிடித்து, மீண்டும் அதை வாய்ப் பகுதியில் கொட்டினார். இம்முறை நன்கு அரைபட்ட மாவை அரைக்கக் கொண்டுவந்திருந்த தூக்கில் கொட்டி வைத்தார். சரசா சம்மந்தப்பட்டவருக்கு தூக்கைக் கொடுத்து அரை கூலி வாங்கி, சில்லறை தந்து.. என்று வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு மூன்று டப்பாக்களை எடுத்துக் கொண்டு ஒரு பெண்மணி இறங்கிக் கொண்டிருந்தார். அவர் வாடிக்கையாக இந்த மிஷினில் அரைத்துப் போவார். வாடிக்கையாளர்களிடம் அதிக மதிப்பும், மரியாதையும் தாத்தா வைத்திருப்பது சரசாவுக்குத் தெரியும். அதனால் அவளும் தன் அம்மாவைப் போலவே தாத்தா விரும்பும்படியே நடந்து கொள்வாள்.
'அக்கா! வாங்கக்கா! " என்றபடி ஆட்டோவை நோக்கி ஓடி "நீங்க இருங்க அக்கா.. நான் சம்படத்தையெல்லம் எடுத்துக்கறேன்" என்றி கூறிய அவள், முதலில் ஒரு தூக்கையும், ஒரு டப்பாவையும் அரை மிஷினுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு மீண்டும் ஓடி, மூன்றாவது டப்பாவையும், தானே எடுத்துவந்தாள்.
'தாத்தா! அக்கா வந்திருக்காங்க பாருங்க!' என்று சத்தமாகக் கூறினாள். ராமசாமியும் புன்னகை முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். மிஷின் 'கடக், கடக்' என்று ஓடிக்கொண்டிருந்தது.
சரசா அந்த அக்காவுக்கு உட்கார தன் நாற்காலியை விட்டுக்கொடுத்தாள். "என்னம்மா அரைக்கணும்" என்றபடி அவளின் டப்பா மற்றும் தூக்கை உள்ளே எடுத்துச் சென்றார் ராமசாமி.
மூன்று வித மாவையும் ஒன்றன்பின் ஒன்றாக அரைத்து அந்தந்த பாத்திரங்களில் போட்டுவிட்டு, 'அம்மாடி! மூணையும் அரைச்சுட்டேன். சரசா... அக்காகிட்ட கணக்கு சொல்லு" என்றபடி மீண்டும் மிஷினை ஓடவிட்டார்.
"அக்கா! இது ரெண்டுக்கும் பத்து பத்து ரூவா.. ஈர அரிசிக்கு பதினஞ்சு ரூவா அக்கா" என்றாள் சரசா.
பர்சைத் திறந்த அந்தப் பெண்மணி, போன தடவ அரைச்சப்ப பாக்கி தரலியாமேமா. அத கழிச்சுக்கலாமா?' என்றாள்.
'இல்லையே அக்கா... பாக்கி எதுவும் இல்லயே"
'இல்ல சரசா! போன தடவ எம் பொண்ணை அனுப்பியிருந்தேன். 60 ரூபா ஆச்சாம். 100ரூபா கொடுத்தாளாம். பாக்கி நாப்பது ரூபா அடுத்தவாட்டி கழிச்சுக்கறேன்' னு சொன்னியாமேமா.
இல்ல அக்கா.. அது மாதிரி எதுவுமே நடக்கலியே!'
'பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன்! முளச்சு மூணு இல விடலெ... உனக்கு இருக்கற திமிரப் பாரு! உங்க தாத்தவ கூப்பிடு' உரக்கக் கத்தினாள் அந்தப் பெண்.
'அது இல்லக்கா...! அம்மா சொல்லியிருப்பாங்களோ...!"
' மரியாதயா இப்ப பாக்கிய கழிக்கப்போறியா இல்லயா!"
அதற்குள் சத்தம் கேட்ட ராமசாமியும் மிஷினை ஆஃப் செய்துவிட்டு' 'என்னம்மா! என்ன ஆச்சு?' என்றபடி வெளியில் வந்தார்.
'இங்க பாருங்க... உங்க பேத்தியெ கண்டிச்சு வைங்க! போன தடவ அரைச்சபோது சில்லறை இல்லனு சொன்னாளாம்.. இப்போ அதெ கழிச்சுக்கறியான்னா..... என்னவோ அப்படி எதுவுமே நடக்கலெங்கறா'
அரைக்க வந்திருந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது. வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.
ராமசாமிக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.
"அவ்வளவுதானே! மறந்துபோயிருப்பா.. இப்போ கழிச்சிட்டா போவுது"
'கண்ணு சரசா இப்போ எவ்வளவு ஆச்சு?"
'தாத்தா... போன தடவ மீதி எதுவுமில்ல தாத்தா;
"இந்தா.. அது போனா போவுது கண்ணு... இப்போ 35ரூபாயெ எடுத்திட்டு அஞ்சு ரூபா குடுத்து அனுப்பு தாயி'
"இல்ல தாத்தா.." என்று ஆரம்பித்த சரசாவை 'இத பாரு நான் சொன்னா கேக்கணும்' என்றுகூறி, ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு ,;நீ போய் வா அம்மணி' என்று கையெடுத்து கும்பிட்டார் ராமசாமி.
கண் கலங்கியது சரசாவுக்கு.....
அரைத்த மாவு சம்படங்களை இம்முறை சரசா ஆட்டோவரை கொண்டு தரவில்லை. அந்த அம்மா ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு போய் ஆட்டோவில் வைத்துவிட்டு ஆட்டோ ட்ரைவரை மீதி இரண்டையும் எடுத்துவரச் சொன்னாள்.
அவமானத்தால் சுருங்கிய சரசாவின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டு வந்தது.
"தாத்தா....நான் பொய் சொல்லலெ. மீதி எதுவும் இல்ல தாத்தா..."
"அட.... நீ பொய் சொன்னனு நான் சொல்லவேயில்லயே கண்ணு.... போ! அடுத்து எத அரைக்கணும்னு பாரு" என்ற ராமசாமியின் முகமும் சிந்தனை வயப்பட்டு சிறுத்துப் போனது.
கூடியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சைக்கிளில் ஒரு பெண் வந்து இறங்கினாள்.
"மன்னிச்சுக்கோங்க... அம்மா இந்த 35 ரூபாய கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.. பாக்கி இங்க இல்ல மளிகைக் கடையில! என்றபடி சரசாவின் கைகளில் நீட்டினாள்.
"இப்படி வைச்சுட்டு போங்க..."
அந்த சில்லறையை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சரசா. அவற்றை கல்லாவில் போட கூட அவளுக்கு மனம் வரவில்லை.
சில்லறையாலோ, சில்லறைத் தனமான பேச்சாலோ, அந்த சின்ன மனது சிதைந்து போய்விட்டது. சிதைந்தது அவள் மன்ம் மட்டுமல்ல.. அந்த உறவும் தான்.
தீபாவளி நேரமானதால் அவரின் மருமகளும் இந்த பத்து நாட்களாக மில்லுக்கு வந்து, அரைகூலி வாங்கி வைத்து, அரவையை, வருசைப்படுத்தி, அவருக்கு உதவியாக இருந்தாள். இன்று சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவானதால் பேத்தி சரசா, தாத்தாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.
மிஷின் ஓடும் 'கடக் கடக்' சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. ராமசாமி அரைக்க வந்த சாமான்களைத் தூக்கி, அதன் வாய்ப் பகுதியில் கொட்டினார். மாவு அரைபட்டு வெளியே கொட்டும் குழாயின் வாயை நீளமான வெள்ளைத் துணியால் குழாய் போலவே உருளை வடிவில் கட்டியிருந்தார். அதிலிருந்து கொட்டும் மாவை பிடிக்க வைத்திருந்த வேறொரு டின்னில் பாதி அரைபட்டிருந்த மாவைப் பிடித்து, மீண்டும் அதை வாய்ப் பகுதியில் கொட்டினார். இம்முறை நன்கு அரைபட்ட மாவை அரைக்கக் கொண்டுவந்திருந்த தூக்கில் கொட்டி வைத்தார். சரசா சம்மந்தப்பட்டவருக்கு தூக்கைக் கொடுத்து அரை கூலி வாங்கி, சில்லறை தந்து.. என்று வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு மூன்று டப்பாக்களை எடுத்துக் கொண்டு ஒரு பெண்மணி இறங்கிக் கொண்டிருந்தார். அவர் வாடிக்கையாக இந்த மிஷினில் அரைத்துப் போவார். வாடிக்கையாளர்களிடம் அதிக மதிப்பும், மரியாதையும் தாத்தா வைத்திருப்பது சரசாவுக்குத் தெரியும். அதனால் அவளும் தன் அம்மாவைப் போலவே தாத்தா விரும்பும்படியே நடந்து கொள்வாள்.
'அக்கா! வாங்கக்கா! " என்றபடி ஆட்டோவை நோக்கி ஓடி "நீங்க இருங்க அக்கா.. நான் சம்படத்தையெல்லம் எடுத்துக்கறேன்" என்றி கூறிய அவள், முதலில் ஒரு தூக்கையும், ஒரு டப்பாவையும் அரை மிஷினுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு மீண்டும் ஓடி, மூன்றாவது டப்பாவையும், தானே எடுத்துவந்தாள்.
'தாத்தா! அக்கா வந்திருக்காங்க பாருங்க!' என்று சத்தமாகக் கூறினாள். ராமசாமியும் புன்னகை முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். மிஷின் 'கடக், கடக்' என்று ஓடிக்கொண்டிருந்தது.
சரசா அந்த அக்காவுக்கு உட்கார தன் நாற்காலியை விட்டுக்கொடுத்தாள். "என்னம்மா அரைக்கணும்" என்றபடி அவளின் டப்பா மற்றும் தூக்கை உள்ளே எடுத்துச் சென்றார் ராமசாமி.
மூன்று வித மாவையும் ஒன்றன்பின் ஒன்றாக அரைத்து அந்தந்த பாத்திரங்களில் போட்டுவிட்டு, 'அம்மாடி! மூணையும் அரைச்சுட்டேன். சரசா... அக்காகிட்ட கணக்கு சொல்லு" என்றபடி மீண்டும் மிஷினை ஓடவிட்டார்.
"அக்கா! இது ரெண்டுக்கும் பத்து பத்து ரூவா.. ஈர அரிசிக்கு பதினஞ்சு ரூவா அக்கா" என்றாள் சரசா.
பர்சைத் திறந்த அந்தப் பெண்மணி, போன தடவ அரைச்சப்ப பாக்கி தரலியாமேமா. அத கழிச்சுக்கலாமா?' என்றாள்.
'இல்லையே அக்கா... பாக்கி எதுவும் இல்லயே"
'இல்ல சரசா! போன தடவ எம் பொண்ணை அனுப்பியிருந்தேன். 60 ரூபா ஆச்சாம். 100ரூபா கொடுத்தாளாம். பாக்கி நாப்பது ரூபா அடுத்தவாட்டி கழிச்சுக்கறேன்' னு சொன்னியாமேமா.
இல்ல அக்கா.. அது மாதிரி எதுவுமே நடக்கலியே!'
'பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன்! முளச்சு மூணு இல விடலெ... உனக்கு இருக்கற திமிரப் பாரு! உங்க தாத்தவ கூப்பிடு' உரக்கக் கத்தினாள் அந்தப் பெண்.
'அது இல்லக்கா...! அம்மா சொல்லியிருப்பாங்களோ...!"
' மரியாதயா இப்ப பாக்கிய கழிக்கப்போறியா இல்லயா!"
அதற்குள் சத்தம் கேட்ட ராமசாமியும் மிஷினை ஆஃப் செய்துவிட்டு' 'என்னம்மா! என்ன ஆச்சு?' என்றபடி வெளியில் வந்தார்.
'இங்க பாருங்க... உங்க பேத்தியெ கண்டிச்சு வைங்க! போன தடவ அரைச்சபோது சில்லறை இல்லனு சொன்னாளாம்.. இப்போ அதெ கழிச்சுக்கறியான்னா..... என்னவோ அப்படி எதுவுமே நடக்கலெங்கறா'
அரைக்க வந்திருந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது. வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.
ராமசாமிக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.
"அவ்வளவுதானே! மறந்துபோயிருப்பா.. இப்போ கழிச்சிட்டா போவுது"
'கண்ணு சரசா இப்போ எவ்வளவு ஆச்சு?"
'தாத்தா... போன தடவ மீதி எதுவுமில்ல தாத்தா;
"இந்தா.. அது போனா போவுது கண்ணு... இப்போ 35ரூபாயெ எடுத்திட்டு அஞ்சு ரூபா குடுத்து அனுப்பு தாயி'
"இல்ல தாத்தா.." என்று ஆரம்பித்த சரசாவை 'இத பாரு நான் சொன்னா கேக்கணும்' என்றுகூறி, ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு ,;நீ போய் வா அம்மணி' என்று கையெடுத்து கும்பிட்டார் ராமசாமி.
கண் கலங்கியது சரசாவுக்கு.....
அரைத்த மாவு சம்படங்களை இம்முறை சரசா ஆட்டோவரை கொண்டு தரவில்லை. அந்த அம்மா ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு போய் ஆட்டோவில் வைத்துவிட்டு ஆட்டோ ட்ரைவரை மீதி இரண்டையும் எடுத்துவரச் சொன்னாள்.
அவமானத்தால் சுருங்கிய சரசாவின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டு வந்தது.
"தாத்தா....நான் பொய் சொல்லலெ. மீதி எதுவும் இல்ல தாத்தா..."
"அட.... நீ பொய் சொன்னனு நான் சொல்லவேயில்லயே கண்ணு.... போ! அடுத்து எத அரைக்கணும்னு பாரு" என்ற ராமசாமியின் முகமும் சிந்தனை வயப்பட்டு சிறுத்துப் போனது.
கூடியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சைக்கிளில் ஒரு பெண் வந்து இறங்கினாள்.
"மன்னிச்சுக்கோங்க... அம்மா இந்த 35 ரூபாய கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.. பாக்கி இங்க இல்ல மளிகைக் கடையில! என்றபடி சரசாவின் கைகளில் நீட்டினாள்.
"இப்படி வைச்சுட்டு போங்க..."
அந்த சில்லறையை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சரசா. அவற்றை கல்லாவில் போட கூட அவளுக்கு மனம் வரவில்லை.
சில்லறையாலோ, சில்லறைத் தனமான பேச்சாலோ, அந்த சின்ன மனது சிதைந்து போய்விட்டது. சிதைந்தது அவள் மன்ம் மட்டுமல்ல.. அந்த உறவும் தான்.