ரமேஷ் கல்யாணம் முடிந்துவிட்டது.
பொண்ணாத்துக்காரா, நன்னா, நிறைவா கல்யாணத்தை பண்ணினா. வந்தவா எல்லோரும் சந்தோஷமா வாழ்த்திட்டுப் போனா.
கல்யாணி மாமிக்குப் பெருமை பிடிபடலை. ஒரே பையன்! கண்ணுக்கு அழகா, மாட்டுப் பொண்ணு வந்தாச்சு. ஆத்துக்காரர் ஃபோட்டோக்கு முன்னாடி நின்னுண்டு கண் கலங்க அவர்கிட்ட நடந்த விவரத்தையெல்லாம் சொல்றா.
'நீங்க இல்லாமலேயே ரமேஷ் கல்யாணம் நடந்துடுத்து. நம்ம மாட்டுபொண்ணு பேரு என்ன தெரியுமோ? விமலா! அழகா சமத்தா இருக்கா.நன்னா சிரிச்சு பேசறா.
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்னிக்கு நான் ஒரு மாமியார்! மாமியார்னாலே கொடுமைக்காரின்னுதானே எல்லாரும் நினைக்கறா. நான் பாருங்கோ! அத மாத்தி காமிக்கப்போறேன். என்ன! நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வரப்போறா! அவள உக்காத்தி வச்சு நான் சமச்சு சாப்பாடு போடப் போறேன் 'வேலை நிறைய பண்ணச் சொல்றா'ங்கறதுதான எல்லா மாட்டுப் பொண்களோட கொறையா இருக்கும்? அவள வேலை எதுவும் செய்யவிடாம மகாராணி மாதிரி பாத்துக்கப்போறேன்.
அதேமாதிரி.... எப்பவும் ரமேஷோடவே இரு, பேசு'ன்னு நானே சந்தோஷமா சொல்லப்போறேன். 'அவரோட பேசவே விட மாட்டேங்கறா... அவரோட நான் வெளில போனாலே பிடிக்க மாட்டேங்கறது...' ன்னுதானே எல்லாராத்து மாட்டுப் பொண்களும் புலம்புவா... ஏன்? எனக்கேகூட இந்த குறையெல்லாம் இருந்ததே! எவ்வளவு உடம்புன்னாலும்.. எங்க வெளில போயிட்டு எப்போ வந்தாலும் நானேதானே சமையல் வேலை, பாத்திரம் அலம்பறதுன்னு எல்லா வேலயும் பண்ணணும்! உடம்பு எத்தனை நாள் ஆடிப்போயிருக்கு! இந்த குறை நம்ம விமலாவுக்கு வரக் கூடாது!
நாம கொஞ்சம் சிரிச்சு பேசினாலே உங்கம்மாவுக்கு கோபம் வந்துடுமே! அது மாதிரியெல்லாம் நான் நடந்துக்காம, 'நல்ல மாமியார்'ன்னு நிச்சயம் பேர் எடுக்கணும்'
கணவன் முன் சபதம் எடுத்துண்டு கண்ணைத் துடச்சுக்கறா கல்யாணி மாமி.
சபதத்துக்கு ஏத்தமாதிரியே, 'நீ போய் டீ.வி பாரும்மா, புக்ஸ் ஏதாவது படி, கைவேலை பண்ணு' ன்னு சொல்லி தானே சமையலை கவனித்தாள்.
ரமேஷ் வந்தவுடனும், 'ஏண்டா.. இன்னிக்கு விமலாவ சினிமாவுக்கு கூட்டிண்டு போயேன்... வெளில நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுங்கோ. புடவை அல்லது சூடிதார் வாங்கிக் குடேண்டா விமலாவுக்கு' இப்படி எதாவது சொல்லி இருவரையும் ஒன்றாக வெளியே போக வைத்து ஆனந்தப்பட்டாள்.
தான் ஒரு நல்ல மாமியாராக செயல்படறதுல தனக்குத்தானே சந்தோஷப்பட்டு ஆத்துக்காரரிடமும் அவ்வப்போது கூறி தன் சந்தோஷத்த பரிமாறிக்கறா.
ஒரு நாள், 'கோவிலுக்குப் போய்ட்டு வரேன்மா.. கதவ தாழ்ப்பாள் போட்டுக்கோ' ன்னு விமலாகிட்ட சொல்லிட்டுப் போறா மாமி. கொஞ்ச தூரம் போனதும் செருப்பு அறுந்துபோச்சு. நடக்க முடியலெ. சரி ஆத்துக்கே போயிடலாம்னு திரும்பி வந்தா. ஆத்துக்கிட்ட வந்த உடனே, விமலா யாரிடமோ பேசிண்டிருந்தது ஜன்னல் வழியா காதுல விழறது.
அறுந்த செருப்புடன் வேகமா நடக்க முடியாம கால தேச்சு தேச்சு மெதுவா நடக்கறா மாமி. விமலா அவ அம்மா கூடதான் ஃபோன்ல பேசிண்டிருந்தா.
"என்னம்மா இது! என்னக் கிச்சனுக்குள்ளயே விடலைன்னா என்னம்மா? என்னம்மா அர்த்தம்? நிர்வாகப் பொறுப்ப விட மனசில்லைதானேம்மா! எனக்கு ஏதாவது புதுசா என் கையால பண்ணி அவருக்கு சர்பிரைஸ் குடுக்கணும்னு ஆசையா இருக்காதா!! நான் இந்த வீட்டுல என்ன பண்ணட்டும்? எப்போ பாத்தாலும் இவர் கிட்ட இங்க கூட்டிண்டு போ1 அங்க கூட்டிண்டு போ! ன்னு ஒரு ப்ரொக்ராம் லிஸ்ட்டே ஒப்பிச்சுடறா! இவரும் 'பூம்பூம் மாடு' மாதிரி தலய ஆட்டறார்மா! ஏன் நாங்களே ஏதாவது டிசைட் பண்ணி எங்கயாவது போறோம்... இதெல்லாம் இவாளுக்கு எதுக்கும்மா.... போயிட்டு வந்த உடனேயே அது எப்படி இருந்தது, இது பிடிச்சுதான்னு ஒரே கேள்விதான்........
சொல்லிக்கொண்டிருந்தாள் விமலா! பிய்ந்த செருப்பால் அடி வாங்கியது போல் துடி துடித்துப் போனாள் கல்யாணி மாமி. இப்படி ஒரு 'கோணமா'? செய்வதறியாது நின்றாள்.

பொண்ணாத்துக்காரா, நன்னா, நிறைவா கல்யாணத்தை பண்ணினா. வந்தவா எல்லோரும் சந்தோஷமா வாழ்த்திட்டுப் போனா.
கல்யாணி மாமிக்குப் பெருமை பிடிபடலை. ஒரே பையன்! கண்ணுக்கு அழகா, மாட்டுப் பொண்ணு வந்தாச்சு. ஆத்துக்காரர் ஃபோட்டோக்கு முன்னாடி நின்னுண்டு கண் கலங்க அவர்கிட்ட நடந்த விவரத்தையெல்லாம் சொல்றா.
'நீங்க இல்லாமலேயே ரமேஷ் கல்யாணம் நடந்துடுத்து. நம்ம மாட்டுபொண்ணு பேரு என்ன தெரியுமோ? விமலா! அழகா சமத்தா இருக்கா.நன்னா சிரிச்சு பேசறா.
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்னிக்கு நான் ஒரு மாமியார்! மாமியார்னாலே கொடுமைக்காரின்னுதானே எல்லாரும் நினைக்கறா. நான் பாருங்கோ! அத மாத்தி காமிக்கப்போறேன். என்ன! நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வரப்போறா! அவள உக்காத்தி வச்சு நான் சமச்சு சாப்பாடு போடப் போறேன் 'வேலை நிறைய பண்ணச் சொல்றா'ங்கறதுதான எல்லா மாட்டுப் பொண்களோட கொறையா இருக்கும்? அவள வேலை எதுவும் செய்யவிடாம மகாராணி மாதிரி பாத்துக்கப்போறேன்.
அதேமாதிரி.... எப்பவும் ரமேஷோடவே இரு, பேசு'ன்னு நானே சந்தோஷமா சொல்லப்போறேன். 'அவரோட பேசவே விட மாட்டேங்கறா... அவரோட நான் வெளில போனாலே பிடிக்க மாட்டேங்கறது...' ன்னுதானே எல்லாராத்து மாட்டுப் பொண்களும் புலம்புவா... ஏன்? எனக்கேகூட இந்த குறையெல்லாம் இருந்ததே! எவ்வளவு உடம்புன்னாலும்.. எங்க வெளில போயிட்டு எப்போ வந்தாலும் நானேதானே சமையல் வேலை, பாத்திரம் அலம்பறதுன்னு எல்லா வேலயும் பண்ணணும்! உடம்பு எத்தனை நாள் ஆடிப்போயிருக்கு! இந்த குறை நம்ம விமலாவுக்கு வரக் கூடாது!
நாம கொஞ்சம் சிரிச்சு பேசினாலே உங்கம்மாவுக்கு கோபம் வந்துடுமே! அது மாதிரியெல்லாம் நான் நடந்துக்காம, 'நல்ல மாமியார்'ன்னு நிச்சயம் பேர் எடுக்கணும்'
கணவன் முன் சபதம் எடுத்துண்டு கண்ணைத் துடச்சுக்கறா கல்யாணி மாமி.
சபதத்துக்கு ஏத்தமாதிரியே, 'நீ போய் டீ.வி பாரும்மா, புக்ஸ் ஏதாவது படி, கைவேலை பண்ணு' ன்னு சொல்லி தானே சமையலை கவனித்தாள்.
ரமேஷ் வந்தவுடனும், 'ஏண்டா.. இன்னிக்கு விமலாவ சினிமாவுக்கு கூட்டிண்டு போயேன்... வெளில நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுங்கோ. புடவை அல்லது சூடிதார் வாங்கிக் குடேண்டா விமலாவுக்கு' இப்படி எதாவது சொல்லி இருவரையும் ஒன்றாக வெளியே போக வைத்து ஆனந்தப்பட்டாள்.
தான் ஒரு நல்ல மாமியாராக செயல்படறதுல தனக்குத்தானே சந்தோஷப்பட்டு ஆத்துக்காரரிடமும் அவ்வப்போது கூறி தன் சந்தோஷத்த பரிமாறிக்கறா.
ஒரு நாள், 'கோவிலுக்குப் போய்ட்டு வரேன்மா.. கதவ தாழ்ப்பாள் போட்டுக்கோ' ன்னு விமலாகிட்ட சொல்லிட்டுப் போறா மாமி. கொஞ்ச தூரம் போனதும் செருப்பு அறுந்துபோச்சு. நடக்க முடியலெ. சரி ஆத்துக்கே போயிடலாம்னு திரும்பி வந்தா. ஆத்துக்கிட்ட வந்த உடனே, விமலா யாரிடமோ பேசிண்டிருந்தது ஜன்னல் வழியா காதுல விழறது.
அறுந்த செருப்புடன் வேகமா நடக்க முடியாம கால தேச்சு தேச்சு மெதுவா நடக்கறா மாமி. விமலா அவ அம்மா கூடதான் ஃபோன்ல பேசிண்டிருந்தா.
"என்னம்மா இது! என்னக் கிச்சனுக்குள்ளயே விடலைன்னா என்னம்மா? என்னம்மா அர்த்தம்? நிர்வாகப் பொறுப்ப விட மனசில்லைதானேம்மா! எனக்கு ஏதாவது புதுசா என் கையால பண்ணி அவருக்கு சர்பிரைஸ் குடுக்கணும்னு ஆசையா இருக்காதா!! நான் இந்த வீட்டுல என்ன பண்ணட்டும்? எப்போ பாத்தாலும் இவர் கிட்ட இங்க கூட்டிண்டு போ1 அங்க கூட்டிண்டு போ! ன்னு ஒரு ப்ரொக்ராம் லிஸ்ட்டே ஒப்பிச்சுடறா! இவரும் 'பூம்பூம் மாடு' மாதிரி தலய ஆட்டறார்மா! ஏன் நாங்களே ஏதாவது டிசைட் பண்ணி எங்கயாவது போறோம்... இதெல்லாம் இவாளுக்கு எதுக்கும்மா.... போயிட்டு வந்த உடனேயே அது எப்படி இருந்தது, இது பிடிச்சுதான்னு ஒரே கேள்விதான்........
சொல்லிக்கொண்டிருந்தாள் விமலா! பிய்ந்த செருப்பால் அடி வாங்கியது போல் துடி துடித்துப் போனாள் கல்யாணி மாமி. இப்படி ஒரு 'கோணமா'? செய்வதறியாது நின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக