யானை
இந்துக்களின் முதன்மைக் கடவுளான 'வினாயகர்' யானை முகம் கொண்டவர்.
'ஐந்து கரத்தனை, யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
என்று வினாயகர் துதி பாடி, வழிபடுகிறோம்.
யானை ஒருமுறை குளத்து நீரில் குளிக்க இறங்குகையில், அதன் காலை முதலை ஒன்று கவ்வ, 'ஆதிமூலமே!' என்று இறைவனை உதவிக்கு அழைக்க, உடனே மகாவிஷ்ணு, விரைந்து வந்து தன் சக்கரத்தால் முதலையை இரு துண்டுகளாக்கினார் என்று ஒரு புராணக் கதை உண்டு.
குறத்தியான வள்ளியை மணம் முடிக்க விரும்பிய முருகன், கிழ வேடமிட்டு, வள்ளி இருந்த வனத்திற்குப் போய், அவளிடம் யாசகம் கேட்க, திணைமாவைத் தருகிறாள். அதனை உண்ணும்போது விக்கல் ஏற்படுகிறது. உடனே வள்ளி, முருகனை, ஒரு நீர்ச்சுனைக்கு அழைத்துச் செல்கிறாள். காட்டில் வாழும் வள்ளிக்கு, யானை மட்டுமே பயப்படுத்தும் மிருகம் என்பதை அறிந்து கொண்டு, 'யானை அண்ணா' என்று பெருங்குரலெடுத்து அழைக்க, உடனே பிள்ளையார் யானை உருகொண்டு அவ்விடம் வந்து, முருகன் வள்ளி திருமணத்தை நிகழ்த்தினார்.
யானையைப் பற்றிய பழமொழிகள்.
1. யானை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.
2. யானை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும்.
3. யானை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?
4. யானை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.
5. யானை உண்ட விளாங்கனியைப் போல.
6. யானை ,ஒரு திட்டி வாசலில் நுழைவதைப் போல.
7. யானை ஒரு குட்டி போடுவதும், பன்னி பல குட்டி போடுவதும்.ஒன்றாகுமா?
8. யானை தன்னைக் கட்ட சங்கிலியை தானே எடுத்துக் கொடுத்தாற் போல.
9. யானை கண்ட குருடர் அடித்துக் கொண்டதைப் போல.
10. யானை காணாமற் போனால் குண்டுச் சட்டியில் தேடினால் அகப்படுமா?
11. யானை குட்டி போடும் என்று பார்த்தால் லத்தியல்லவா போடுகிறது?
12. யானை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்பதா?
13. யானைக்கில்லை கானலும், மழையும்.
14. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
15. யானைக்கு சிட்டுக்குருவி மத்தியஸ்தம் செய்தாற்போல்
16. யானைக்கு தீனியிடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
17. யானைக்கும் அடி சறுக்கும்.
18. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
19. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல.
20. யானை யைப் பார்க்க வெள்ளெழுத்தா?
21.யானை போன வழியிலே ஆட்டுக்குட்டியா போக முடியாது?
22. யானை மேல் இருக்கிற பாரத்தை பூனை மேல் இடலாமா?
23.யானை மேல் இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கும் பாப்பான் சோறு மேல்.
24. யானையும், யானையும் மோதும் போது இடையில் அகப்பட்ட கொசுபோல.
25. யானையைத் தேட, குடத்துக்குள் கைவிட்டதைப் போல.
26. யானையை விற்று பூனைக்கு வைத்தியம் பார்ப்பதைப் போல.
27. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
28. யானை வாய்க் கரும்பு போல.
29. யானையின் வேகம் அடங்கும் அங்குசத்தில்.
இந்துக்களின் முதன்மைக் கடவுளான 'வினாயகர்' யானை முகம் கொண்டவர்.
'ஐந்து கரத்தனை, யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
என்று வினாயகர் துதி பாடி, வழிபடுகிறோம்.
யானை ஒருமுறை குளத்து நீரில் குளிக்க இறங்குகையில், அதன் காலை முதலை ஒன்று கவ்வ, 'ஆதிமூலமே!' என்று இறைவனை உதவிக்கு அழைக்க, உடனே மகாவிஷ்ணு, விரைந்து வந்து தன் சக்கரத்தால் முதலையை இரு துண்டுகளாக்கினார் என்று ஒரு புராணக் கதை உண்டு.
குறத்தியான வள்ளியை மணம் முடிக்க விரும்பிய முருகன், கிழ வேடமிட்டு, வள்ளி இருந்த வனத்திற்குப் போய், அவளிடம் யாசகம் கேட்க, திணைமாவைத் தருகிறாள். அதனை உண்ணும்போது விக்கல் ஏற்படுகிறது. உடனே வள்ளி, முருகனை, ஒரு நீர்ச்சுனைக்கு அழைத்துச் செல்கிறாள். காட்டில் வாழும் வள்ளிக்கு, யானை மட்டுமே பயப்படுத்தும் மிருகம் என்பதை அறிந்து கொண்டு, 'யானை அண்ணா' என்று பெருங்குரலெடுத்து அழைக்க, உடனே பிள்ளையார் யானை உருகொண்டு அவ்விடம் வந்து, முருகன் வள்ளி திருமணத்தை நிகழ்த்தினார்.
யானையைப் பற்றிய பழமொழிகள்.
1. யானை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.
2. யானை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும்.
3. யானை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?
4. யானை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.
5. யானை உண்ட விளாங்கனியைப் போல.
6. யானை ,ஒரு திட்டி வாசலில் நுழைவதைப் போல.
7. யானை ஒரு குட்டி போடுவதும், பன்னி பல குட்டி போடுவதும்.ஒன்றாகுமா?
8. யானை தன்னைக் கட்ட சங்கிலியை தானே எடுத்துக் கொடுத்தாற் போல.
9. யானை கண்ட குருடர் அடித்துக் கொண்டதைப் போல.
10. யானை காணாமற் போனால் குண்டுச் சட்டியில் தேடினால் அகப்படுமா?
11. யானை குட்டி போடும் என்று பார்த்தால் லத்தியல்லவா போடுகிறது?
12. யானை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்பதா?
13. யானைக்கில்லை கானலும், மழையும்.
14. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
15. யானைக்கு சிட்டுக்குருவி மத்தியஸ்தம் செய்தாற்போல்
16. யானைக்கு தீனியிடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
17. யானைக்கும் அடி சறுக்கும்.
18. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
19. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல.
20. யானை யைப் பார்க்க வெள்ளெழுத்தா?
21.யானை போன வழியிலே ஆட்டுக்குட்டியா போக முடியாது?
22. யானை மேல் இருக்கிற பாரத்தை பூனை மேல் இடலாமா?
23.யானை மேல் இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கும் பாப்பான் சோறு மேல்.
24. யானையும், யானையும் மோதும் போது இடையில் அகப்பட்ட கொசுபோல.
25. யானையைத் தேட, குடத்துக்குள் கைவிட்டதைப் போல.
26. யானையை விற்று பூனைக்கு வைத்தியம் பார்ப்பதைப் போல.
27. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
28. யானை வாய்க் கரும்பு போல.
29. யானையின் வேகம் அடங்கும் அங்குசத்தில்.