ஞாயிறு, 29 மே, 2016

நல்லதோர் வீணை செய்தே!

மூட்டைத் தூக்கி, பொதியும் சுமந்து
முன்னுக்கு வந்தவன் முனியப்பன்.!
தன்  போல் பிள்ளையும் தவிக்கா திருக்கப்
பள்ளியில் சேர்த்திட முடிவு செய்தான்.

நோட்டுப் புத்தகம், பேனா என்று,
 பார்த்துப் பார்த்து வாங்கித் தந்தான்!
'புத்தக மூட்டை' தூக்கிய மகனை,
பார்த்தே ரத்தக் கண்ணீர் விட்டான்.

'நல்லதொரு வீணை செய்ய எண்ணி
நலங்கெட புழுதியில் எறிந்தேனோ...?
புலம்பித் திரிந்தான்! வருந்தி அழுதான்!
படிப்பறிவில்லா அறிவிலி முனியன்!.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக