திங்கள், 30 மே, 2016

வாழ்க்கைக் கவிதை

கட்டிய புடவையுடன்
கரம் பிடித்துச் செல்லுங்கள்.
கஞ்சிதான் உணவென்றாலும்,
கூரைதான் நிழலென்றாலும் ,
கலங்கிடவேண்டாம்.
கவிதையாய் வாழ்ந்திருக்க
காசு மட்டுமா அவசியம்?
அல்ல! அல்ல!
காதல்தான் பொக்கிஷம்!
நன்றி! வணக்கம்!
என்று கூறி இருக்கையில் சிவநேசன் அமர்ந்ததும்,.கரகோஷம் வானைப் பிளந்தது. "கைகொடுங்க சிவா! வரதக்ஷணை வந்காதீங்கன்னு நீங்க சொல்லும் முறையே தனிதான்." "அருமை சிவநேசன்" இப்படியாக பாராட்டு மழையில் நனைந்தபடி தன வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தான். கதவைத் திறந்த அவன் அன்பு மனைவி லதா, "விழா நல்லா  நடந்ததாங்க....?"
என்று கேட்டாள்.
       அவளது கேள்விக்கு பதிலேதும் கூறாமல்,  உங்க அப்பாகிட்டேயிருந்து  தகவல் ஏதாவது உண்டா..? என்று கேட்டு அவள் முகத்தைப் பார்த்தான். "ஒண்ணும் இல்லீங்க" பயந்தபடி கூறினாள் லதா.
"பொங்கலுக்கு இன்னும் 3 நாள் தானே இருக்கு? இந்த வருஷாமாவது முன்கூட்டியே பொங்கல் சீர் செய்யலாம்னு தோணுதா உங்கப்பனுக்கு? என்ன நெனைச்சிட்டிருக்கரு மனசுல? என்று சரமாரியாக சாடத் தொடங்கினான் சிவநேசன்.
    "கவிதைக்குப் பொய் அழகு' என்பது இதுதானோ....!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக