செவ்வாய், 5 ஏப்ரல், 2016

தரங்கிணி (என் 2வது தங்கை) கல்யாணம் - "மின்சார கனவு' - படம். 'தங்கத்தாமரை மலரே' பாடல்

 முத்துக்குமரா..! உனக்கு. - ஓர் கவிதை..!.
காதைக் கொடுத்து கேள் நீ - என் பாட்டை.
உள்ளம் உந்தன் உள்ளம் - என் நாளும்
இவளின் சொந்தம்.
இவை எல்லாம் இந்தப் பெண்ணாலே...!
                                                   (முத்துக்குமரா)

பருப்பு சாம்பார் கறியும் கூட்டும் பண்ணவேண்டும்...
மறுப்பு ஏதும் சொல்லிடாமல் ஊட்டவேண்டும்...!
கருத்த கூந்தல்  எண்ணெய்  தேய்த்துவிடவும் வேண்டும்! - இவள்
விரும்பும்போது காலைப் பிடித்து விடவும் வேண்டும்...
கோ ழி கூவும் முன்னே எழுந்திருக்க வேண்டும்...!
கோலம் போட்ட பின்னே பால் காய்ச்ச வேண்டும்!
Bed coffee கலந்து வந்து Good Morning சொல்ல வேண்டும்....
                                                      (முத்துக்குமரா)

கழுத்து நிறைய நகைகளை நாளும் பூட்ட வேண்டும்
அழகு கண்ணே என்றே சொல்லி போற்ற வேண்டும்.
புகழ்ந்து பேசி பூவை தலையில் சூட்ட வேண்டும் - இவள்
அழைக்கும் முன்னே கையை கட்டி நிற்க வேண்டும்....!
மழை பெய்யும் நாளில் குடையாக வேண்டும்...
குளிரெடுக்கும் போது போர்வையாக வேண்டும்....!
மொத்தத்தில் நல்ல கணவன் என்ற பெயரை எடுக்க வேண்டும்.
                                                     (முத்துக்குமரா)




2 கருத்துகள்: