எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...! லா லா லா...!
எங்கள் மனதில் என்றும் இல்லை தேய்பிறை ! லா லா லா !
கிளி கூட்டம் போலெங்கள் கூட்டமே..!
ஆனந்தக் களியாட்டம்.....
அன்பின் ஆலயம்..
(எங்கள்)
பெற்றோர் பாசம், நேசமெல்லாம்
புக்ககம் வந்தும் பெற்றுவிட்டேன்..!
பிள்ளைபோல பார்க்கும் இந்த
பெரியோர் கால்தொட்டுப் போற்றுகிறேன்..!
மூவர் இங்கே, அறுவர் ஆனோம்....
அன்பெனும் கயிற்றினில் கட்டுண்டோம்....!
பறக்கையிலே சிரமம் என்றால
சிறகினைத் தரவும் தயங்க மாட்டோம்....!
பூந்தோட்டத்து பட்டுப் பூச்சியாய்
பாடித் திரிகின்றோம்...!
கூடிக் களிக்கின்றோம்.!
(எங்கள்)
எங்கள் சொந்தம் பார்த்தாலே..!
சொர்க்கம் சொக்கிப் போகுமே...!
எங்கள் நட்பைப் பார்த்தாலே...!
நாடே சுற்றிப் போடுமே...!
அண்ணனுடன் பிறக்கவில்லை - ஆனால்
எனக்கு அண்ணனுண்டு...
அக்காக்கள் எனக்கு இல்லை
அந்தக் குறையும் இருக்கவில்லை !
ஏ,....... ஆண்டவா இது நீடிக்க
வேண்டிக்கொள்கின்றேன்....
பிரார்தித்துக்கொள்கின்றேன்...!
(எங்கள்)
எங்கள் மனதில் என்றும் இல்லை தேய்பிறை ! லா லா லா !
கிளி கூட்டம் போலெங்கள் கூட்டமே..!
ஆனந்தக் களியாட்டம்.....
அன்பின் ஆலயம்..
(எங்கள்)
பெற்றோர் பாசம், நேசமெல்லாம்
புக்ககம் வந்தும் பெற்றுவிட்டேன்..!
பிள்ளைபோல பார்க்கும் இந்த
பெரியோர் கால்தொட்டுப் போற்றுகிறேன்..!
மூவர் இங்கே, அறுவர் ஆனோம்....
அன்பெனும் கயிற்றினில் கட்டுண்டோம்....!
பறக்கையிலே சிரமம் என்றால
சிறகினைத் தரவும் தயங்க மாட்டோம்....!
பூந்தோட்டத்து பட்டுப் பூச்சியாய்
பாடித் திரிகின்றோம்...!
கூடிக் களிக்கின்றோம்.!
(எங்கள்)
எங்கள் சொந்தம் பார்த்தாலே..!
சொர்க்கம் சொக்கிப் போகுமே...!
எங்கள் நட்பைப் பார்த்தாலே...!
நாடே சுற்றிப் போடுமே...!
அண்ணனுடன் பிறக்கவில்லை - ஆனால்
எனக்கு அண்ணனுண்டு...
அக்காக்கள் எனக்கு இல்லை
அந்தக் குறையும் இருக்கவில்லை !
ஏ,....... ஆண்டவா இது நீடிக்க
வேண்டிக்கொள்கின்றேன்....
பிரார்தித்துக்கொள்கின்றேன்...!
(எங்கள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக