இயற்கையின் சீற்றத்திற்கு
இரையானது இந்தியா !
இழந்தது தன் பிள்ளைகளை!
பெருகி வரும் மக்கள் தொகையைப்
பொறுக்காமல் நடுங்கியதோ!?
அணு குண்டு ஆங்காங்கே வெடிப்பதனால்
சினம் கொண்டு நொறுங்கியதோ..!?
பொய், புரட்டு, வஞ்சகத்தால்
வாய் விட்டுக் கதறியதோ...!?
பூமித்தாயே...!
எதனால்...?
எதற்காக இந்த நிலநடுக்கம்...?
மகாத்மா பிறந்த மண்ணில்,
குடியரசு தினத்தன்று
ஏனிந்த நிலநடுக்கம்...?
புரிந்துவிட்டது.....
பூஜிக்க மறந்துவிட்டோம்....
தாய்நாட்டை
நேசிக்க மறுத்துவிட்டோம்!
வயல்வெளி அழித்து
விண்முட்டும் வீடமைத்தோம்...!
மலைகளைப் பெயர்த்து
மண்ணாக்கினோம்....!
காடுகளை வெட்டிக்
காசாக்கினோம்..!
கடல் நீரையும்
களங்கம் செய்தோம்....
சுய நல வேலிக்குள்
தேச நலனைத்
தூசியக்கினோம்...!
அதனால்தானோ தாயே!
அலறி வெடித்துவிட்டாய்...?
தவறுகளுக்கு தண்டனை அவசியமே....!
அதற்காக...
அறியாத அப்பாவி அடிபடுவதா...!
வஞ்சகமற்ற பிஞ்சுகள் பலியாவதா...!
தவறு செய்துவிட்டாய் தாயே...!
அறிவுறுத்த மறந்து
அடித்து நொறுக்கிவிட்டாய்...
இழந்து தவிப்போர் ஒருபுறமிருக்க,
இருப்பதை.... கிடைப்பதை
சுருட்டுவோரும் அதிகரிப்பர்.
பூசல்களும், வன்முறைகளும்
புற்றீசல் போலப் புறப்பட்டுவிடும்.
என்ன செய்வோம்...?
புதைந்து கிடப்போரை
பொறுக்கி எடுத்து...
இறந்து போனோரை
குவியலாய் எரித்துவிட்டு,
அனாதையாய் ஆனோரை
அன்புடனே அரவணைத்து...
அடிபட்டுத் துடிப்போரின்
வலி தீர மருந்திட்டு....
இன்னும்.... இன்னும்....
உறவினரைத் தொலைத்தோர்,
பசிக் கொடுமையால் தவிப்போர்,
வீடிழந்தோர், மாற்றுடைகூட இல்லாதோர்,
என்ன செய்வோம்....?
பாரதத் தாயே....!
இடிந்து விழுந்த குஜராத்தை
எழுப்பி நிறுத்த...
எத்தனை நாட்கள்
ஆகுமோ இனி....?
இருப்பினும்....
அன்புள்ளம், பண்புள்ளம் கொண்ட
நம் தேசத்துப் பெருமக்கள்
உழைத்துச் சேமித்த
மணித்துளிகள் சிலவற்றை
சேவைக்காய் அனுப்பிவைத்தார்..
அனைவருக்கும் எம் நன்றி!
இன்றுதான்
தைர்யம் பிறந்தது!
தெளிவு தொடர்ந்தது!
ஒன்றுபட்டுச் செயலாற்றி,
எப்பாடு பட்டாகிலும்
எழுப்பி நிறுத்திவிடுவோம் குஜராத்தை!
இழந்து தவிப்போர் ஒருபுறமிருக்க,
இருப்பதை.... கிடைப்பதை
சுருட்டுவோரும் அதிகரிப்பர்.
பூசல்களும், வன்முறைகளும்
புற்றீசல் போலப் புறப்பட்டுவிடும்.
என்ன செய்வோம்...?
புதைந்து கிடப்போரை
பொறுக்கி எடுத்து...
இறந்து போனோரை
குவியலாய் எரித்துவிட்டு,
அனாதையாய் ஆனோரை
அன்புடனே அரவணைத்து...
அடிபட்டுத் துடிப்போரின்
வலி தீர மருந்திட்டு....
இன்னும்.... இன்னும்....
உறவினரைத் தொலைத்தோர்,
பசிக் கொடுமையால் தவிப்போர்,
வீடிழந்தோர், மாற்றுடைகூட இல்லாதோர்,
என்ன செய்வோம்....?
பாரதத் தாயே....!
இடிந்து விழுந்த குஜராத்தை
எழுப்பி நிறுத்த...
எத்தனை நாட்கள்
ஆகுமோ இனி....?
இருப்பினும்....
அன்புள்ளம், பண்புள்ளம் கொண்ட
நம் தேசத்துப் பெருமக்கள்
உழைத்துச் சேமித்த
மணித்துளிகள் சிலவற்றை
சேவைக்காய் அனுப்பிவைத்தார்..
அனைவருக்கும் எம் நன்றி!
இன்றுதான்
தைர்யம் பிறந்தது!
தெளிவு தொடர்ந்தது!
ஒன்றுபட்டுச் செயலாற்றி,
எப்பாடு பட்டாகிலும்
எழுப்பி நிறுத்திவிடுவோம் குஜராத்தை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக