ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சௌமித்ரி (என் முதல் பெண்) கல்யாணம். படம் ; பாரதியார் பாடல் ; மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி என்ற.... எங்கள் பொண்ணு...!
குணத்தில் தான் மின்னும் பொன்னு!
மனம் போல .... மாலை கொண்டு
ஜோடி சேர்ந்து - இவள்
கடலின் அலையைப் போலே சிரிக்கிறாள்...-இன்று
மகிழ்ச்சி பெருக்கெடுக்க இருக்கிறாள்....
                                        (கிளி என்ற)

கார்த்திகை மாதம், அகல் ஏற்றும் அந்தி நேரம்
வீதி தோறும் ஒளி வெள்ளம் வீசிய நேரம்..
அழகான பொம்மை... அவனியிலே அவதரித்தாள்.
தனக்கிணை யாரும் இன்றி.... இளவரசி வாழ்ந்து வந்தாள் !
தங்கை தனைப் பெற்றே -  இவள்
ஆனந்தப் பட்டாள்.!
வம்பும், விளையாட்டும் தன் வாடிக்கையாய் கொண்டாள்.
பல வண்ண.... பூக்கள் கொண்ட செண்டைப் போல
அழகு குடும்பம் எங்கள் குடும்பமே...! - இதில்
இவள் மனதை  கவர்ந்த மலர் இணையுதே...!
                                        (கிளி என்ற)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக