திங்கள், 4 ஏப்ரல், 2016

தரங்கிணி நிச்சயதார்த்தம் - 'புல்வெளி, புல்வெளி தன்னில்' - பாட்டு. "ஆசை" பட பாடல்.

தரங்கிணி, தரங்கிணி -  இன்று
அன்புடன், செல்லமாய் நாங்கள் 
பாடிடும் பாட்டிதைக் கேளம்மா...
முத்து சூரியன் சூரியன் ஒன்று 
மெல்லமாய், மெல்லமாய் வர 
மலர்ந்திடும் தாமரை நீயம்மா.....
இதயம்.... இடம் மாறுதோ கூறம்மா .....!
இதழின் புன்னகை இதைக் கூறுதம்மா ...! -இன்று 
பறக்க தோணுதா...? - நீரில் 
மிதக்க தோணுதா...?
                                 (தரங்கிணி...)

ஜில், ஜில், ஜில், ஜில்,ஜில்,ஜில், உந்தன் நெஞ்சில்...
வண்ணமிகுந்த வானவில்லைத் தந்தது யாரு...?
தில், தில், தில், தில், தில், தில், உந்தன் மனதில்...
சந்தோஷப் பூ மழையைப் பெய்தது யாரு... ?
விழிகளில் தெரிகின்ற இவர் உருவம்....
இதயத்தின் .அடி வரை ஊடுருவும் !
செவிகளில் விழுகின்ற இவர் குரலோ ...
தித்தித்திடும் தேனாய் மாறிவிடும்...!
உந்தன் மனம் - அதன் நிறம்..!
உந்தன் கனா - அதன் குணம்...!
அம்மம்மா.............!
தோழன் கிடைத்துவிட்டான் பாரடி...! - நீயும் 
தோகை விரித்து இன்று ஆடடி...!
                                                     (தரங்கிணி )

முத்து,முத்து முத்து, முத்து  என - உந்தன் உள்ளம் 
முத்துக்குமார் பெயரைத் தான் தினமும் சொல்லும் !
கிணி, கிணி , கிணி , கிணி  என அவரின் உள்ளம் 
தரங்கிணி பெயரைத்தான்  நித்தம் சொல்லும்..!
இனிதான மண வாழ்க்கை ஒப்பந்தம்....
இறைவனின் அருள் என்றும் உமக்கிருக்கும்...!
துணை என பெரியோர்கள் உடனிருக்க....
தவழட்டும் தவழட்டும் வசந்தம் என்றும்....!
சோலை தென்றல்....- அதன் சுகம்...!
தாழம்பூவும் ..... அதன் மணம் ...!
அம்மம்மா.........
வாழ்வில் கிடைத்திருக்க வேண்டுகிறோம் - உங்கள் 
வாழ்க்கை வளம் கொழிக்க வாழ்த்துகிறோம்....!
                                                                  (தரங்கிணி)

4 கருத்துகள்: