தரங்கிணி, தரங்கிணி - இன்று
அன்புடன், செல்லமாய் நாங்கள்
பாடிடும் பாட்டிதைக் கேளம்மா...
முத்து சூரியன் சூரியன் ஒன்று
மெல்லமாய், மெல்லமாய் வர
மலர்ந்திடும் தாமரை நீயம்மா.....
இதயம்.... இடம் மாறுதோ கூறம்மா .....!
இதழின் புன்னகை இதைக் கூறுதம்மா ...! -இன்று
பறக்க தோணுதா...? - நீரில்
மிதக்க தோணுதா...?
(தரங்கிணி...)
ஜில், ஜில், ஜில், ஜில்,ஜில்,ஜில், உந்தன் நெஞ்சில்...
வண்ணமிகுந்த வானவில்லைத் தந்தது யாரு...?
தில், தில், தில், தில், தில், தில், உந்தன் மனதில்...
சந்தோஷப் பூ மழையைப் பெய்தது யாரு... ?
விழிகளில் தெரிகின்ற இவர் உருவம்....
இதயத்தின் .அடி வரை ஊடுருவும் !
செவிகளில் விழுகின்ற இவர் குரலோ ...
தித்தித்திடும் தேனாய் மாறிவிடும்...!
உந்தன் மனம் - அதன் நிறம்..!
உந்தன் கனா - அதன் குணம்...!
அம்மம்மா.............!
தோழன் கிடைத்துவிட்டான் பாரடி...! - நீயும்
தோகை விரித்து இன்று ஆடடி...!
(தரங்கிணி )
முத்து,முத்து முத்து, முத்து என - உந்தன் உள்ளம்
முத்துக்குமார் பெயரைத் தான் தினமும் சொல்லும் !
கிணி, கிணி , கிணி , கிணி என அவரின் உள்ளம்
தரங்கிணி பெயரைத்தான் நித்தம் சொல்லும்..!
இனிதான மண வாழ்க்கை ஒப்பந்தம்....
இறைவனின் அருள் என்றும் உமக்கிருக்கும்...!
துணை என பெரியோர்கள் உடனிருக்க....
தவழட்டும் தவழட்டும் வசந்தம் என்றும்....!
சோலை தென்றல்....- அதன் சுகம்...!
தாழம்பூவும் ..... அதன் மணம் ...!
அம்மம்மா.........
வாழ்வில் கிடைத்திருக்க வேண்டுகிறோம் - உங்கள்
வாழ்க்கை வளம் கொழிக்க வாழ்த்துகிறோம்....!
(தரங்கிணி)
பதிலளிநீக்குThis song is in the tune of " pul veli pulveli thannil"
Excellent Writing Lakshmi. No one can match you in this skill. You have made all our marriages very memorable and sweet. You are awesome :) Love you loads.
பதிலளிநீக்குThank you tharang.☺
பதிலளிநீக்குThank you tharang.☺
பதிலளிநீக்கு