வியாழன், 28 ஏப்ரல், 2016

இயற்கை விவசாயம். பாடல் ; தங்க தாமரை மலரே! படம் : மின்சார கனவு.

உழவர் பெருங்குடி மக்களே! - வாருங்களே!
உண்மை ஒன்றை இன்று, கேளுங்களே!
செய்யும் தொழிலே தெய்வம்!                
சொன்னார் முன்னோர் அன்று!
எந்நாளும் இதனைக் காப்போமே!
                                 (உழவர்)

இயற்கை முறையில் விவசாயம்தான் செய்ய வேண்டும்!
இருக்கும் நல்ல பூச்சிகளைக் காக்கவேண்டும்!
செயற்கை பூச்சி கொல்லிகளைத் தவிர்க்க வேண்டும்!
சிறந்த முறையில் மகசூல் பெற்றே வாழ வேண்டும்!
இலை, தழை, பசுந்தாள் உரம் போட வேண்டும்!
சாண எரு, கம்போஸ்ட் தினம் போட  வேண்டும்!
வளமான மண்ணை நமது சந்ததிக்கு விடவும் வேண்டும்!
                                 (உழவர்)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக