வியாழன், 28 ஏப்ரல், 2016

விவசாயம்

உலகத்துத் தொழில்கள் அனைத்தி லுமே...
உழவுத் தொழிலே முதன்மை பெரும் !
உண்ணும் உணவுப் பொருளை யெல்லாம்
உற்பத்தி செய்திது அள்ளித் தரும்!
               
                      நன்மை செய்திடும் பூச்சி பல        
                      நிறையவே இருக்கும் மண் ணுக்குள்!
                     ரசாயன பூச்சிக் கொல்லிகளால்,
                     நசுங்கியே மாளும் சில கணங்களுக்குள்.


இயற்கை முறைவிவ சாயத் தால்
இருக்கும் பூச்சிகள் அழிவ தில்லை!
செயற்கை மருந்தைத்  தவிர்ப் பதனால்
சீரிய விளைச்சல் பெற்றிட லாம்!

                    மனிதர்க்கு இருக்கின்ற கண் போல
                    பயிருக்கு மண் வளம் அவசியமே!
                   இலை, தழை பசுந்தாள் உரம்போட
                   மண் வளம் நன்கு அதிகரிக்கும்!

நிதர்சன உண்மையை உணர்ந் திடுங்கள்!
நல்ல மகசூல் பெற்றிடு ங்கள்..
உடல்நலம் பேண  இதுஒன்றே
உகந்த முறை என செயல்படுங்கள்.

Image result for free image of paddy field

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக