வெள்ளி, 1 ஏப்ரல், 2016

மாதங்கி கல்யாணம் - M.S.சுப்பலக்ஷமி பாடிய பாரதியார் பாடலான ' நெஞ்சுக்கு நீதியும் பாடல்

நெஞ்சுக்கு நெஞ்சென மாற்றம் நிகழ்த்திடும் ஜோடி புறாக்க்களிங்கே...!
ஊஞ்சலில் ஆடியே உலகை மறந்திடும்  உன்னத காட்சி இங்கே .......!
கொஞ்சி மகிழ்ந்திட குலவிக் களித்திட காலமும்  வந்ததிங்கே.....! (கொஞ்சி மகிழ்ந்திட)
வாஞ்சையுடன் இருப்பார் அவர் பேர் ஜெயராம்.. ஜெயராம்....ஜெயராம்....
வாஞ்சையுடன் இருப்பார் அவர் பேர்  ஜெயராம்!

பண்ணிசைத்து நல்ல பாட்டிசைத்து பாவை பாசத்துடன் இருப்பாள் .....!
அன்பு ஒன்றே வாழ்க்கை மூலம் என்றே இவள் அறிந்துணர்ந்தே  நடப்பாள் ..!
கண்ணினைப்போல்  உன்னை காத்திடுவாள் என்றும் பொன்னைப்  போல் போற்றிடுவாள்  (கண்ணினைப்போல்)
பெண்ணின் பெயர் இதுதான் அறிவீர் மாதங்கி... மாதங்கி...மாதங்கி....
பெண்ணின் பெயர் இதுதான் அறிவீர் மாதங்கி...

வெள்ளை மலர் மீது வண்டு அமர்ந்திங்கு தேன் என்றும் உண்ண வேண்டும்.
கள்ளம் கபடமற்ற காதலினால் என்றும் கட்டுண்டிருக்க வேண்டும்!
நல்ல பொருத்தம் இது என்றே இந்த நாடே புகழவேண்டும்..
நல்ல பொருத்தம் இது என்றே இந்த பாரே புகழவேண்டும்..
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே, வாழ்கவே,வாழ்கவே..வாழ்கவே..!
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே, வாழ்கவே,வாழ்கவே.....!








2 கருத்துகள்: