இனிய அக்கா அத்திம்பேர்,
வாசமுள்ள மலர்ச்செண்டு
வசந்தத்தைப் பரப்புதல் போல்
நேசமுள்ள நீவீர் எங்கள்
நெஞ்சத்துள் நிறைந்துள்ளீர்!
ஒன்றல்ல இரண்டல்ல...
உபகா ரங்கள்.
ஓராயிரம் சொல்வேன்
உதா ரணங்கள்!
உபசாரக் கவிதை என்று
ஒருபோதும் எண்ணாதீர்!
உள்ளத்து உணர்ச்சிகளின்
வெளிப்பாட்டு கவிதையிது!
வார்த்தைகள் நடத்தும்
அணிவகுப்பல்ல - இது
எண்ணப் பிரவாகத்தின்
ஊர்வலங்கள்.
எந்தன் கவிதைகளால்
என்னை அறிந்திருப்பீர்! - என்
நெஞ்சில் இடம் பிடித்த
இனிய ஜோடி நீவீர் என..
எதை வெளிப்படுத்த எழுதுகின்றேன்?
என்றே எனக்குப் புரியவில்லை! - எனினும்
எழுத்துக்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கி எடுத்து வந்து
பாசத்தில் போட்டெடுத்து
பக்குவமாய் பாட்டெழுதி,
படையல்போல் உங்களிடம்
பதமாக சமர்ப்பிக்கிறேன்.
லக்ஷ்மி ரவி.
வாசமுள்ள மலர்ச்செண்டு
வசந்தத்தைப் பரப்புதல் போல்
நேசமுள்ள நீவீர் எங்கள்
நெஞ்சத்துள் நிறைந்துள்ளீர்!
ஒன்றல்ல இரண்டல்ல...
உபகா ரங்கள்.
ஓராயிரம் சொல்வேன்
உதா ரணங்கள்!
உபசாரக் கவிதை என்று
ஒருபோதும் எண்ணாதீர்!
உள்ளத்து உணர்ச்சிகளின்
வெளிப்பாட்டு கவிதையிது!
வார்த்தைகள் நடத்தும்
அணிவகுப்பல்ல - இது
எண்ணப் பிரவாகத்தின்
ஊர்வலங்கள்.
எந்தன் கவிதைகளால்
என்னை அறிந்திருப்பீர்! - என்
நெஞ்சில் இடம் பிடித்த
இனிய ஜோடி நீவீர் என..
எதை வெளிப்படுத்த எழுதுகின்றேன்?
என்றே எனக்குப் புரியவில்லை! - எனினும்
எழுத்துக்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கி எடுத்து வந்து
பாசத்தில் போட்டெடுத்து
பக்குவமாய் பாட்டெழுதி,
படையல்போல் உங்களிடம்
பதமாக சமர்ப்பிக்கிறேன்.
லக்ஷ்மி ரவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக