வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அபி(என் துரை சித்தப்பா பெண்) நிச்சயதார்த்தம். பாடல் : கனன கனன படம்: லகான்(ஹிந்தி)

மனங்களின்,
மகிழ்ச்சியின் மணம்  இன்று பெருகும்...
இரு மனம் ஒன்றின் மீது ஒன்றாய் இணையும்....
இணைந்து. -  இசைத்து, சிறகினை விரித்து 
பறக்கத் துடிக்குதிந்த குயிலினம் இரண்டு 
விண் வரை உயரே பறக்கும்....
இசை வெள்ளம் எங்கும் பரவும் - நம் 
இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.....
                                         (மனங்களின்)


நிலவினைக் கண்டதும் உடனே மலர்ந்திடும் 
வெண்ணிற முல்லைப் பூக்கள்....
முல்லையின் வருகையால் மெல்லமாய் சிரித்திடும்
 தண்ணொளி  சந்திர பிம்பம்.....
அதுபோல் இன்று - மலர்ந்தன ரெண்டு 
மனம் போல் என்றும் - மகிழ்வுகள் நன்று......
கனா படி நடக்கும்; நடக்கும்;
எண்ணம் போல் இனிக்கும்; இனிக்கும்;
எந்நாளும் வசந்தம் உங்கள் 
வாழ்வினைத் தேடியே வீசிவரும்......
                                        (மனங்களின்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக