மனங்களின்,
மகிழ்ச்சியின் மணம் இன்று பெருகும்...
இரு மனம் ஒன்றின் மீது ஒன்றாய் இணையும்....
இணைந்து. - இசைத்து, சிறகினை விரித்து
பறக்கத் துடிக்குதிந்த குயிலினம் இரண்டு
விண் வரை உயரே பறக்கும்....
இசை வெள்ளம் எங்கும் பரவும் - நம்
இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.....
(மனங்களின்)
நிலவினைக் கண்டதும் உடனே மலர்ந்திடும்
வெண்ணிற முல்லைப் பூக்கள்....
முல்லையின் வருகையால் மெல்லமாய் சிரித்திடும்
தண்ணொளி சந்திர பிம்பம்.....
அதுபோல் இன்று - மலர்ந்தன ரெண்டு
மனம் போல் என்றும் - மகிழ்வுகள் நன்று......
கனா படி நடக்கும்; நடக்கும்;
எண்ணம் போல் இனிக்கும்; இனிக்கும்;
எந்நாளும் வசந்தம் உங்கள்
வாழ்வினைத் தேடியே வீசிவரும்......
(மனங்களின்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக