காரில் பயணம் செய்யும்போது FMரேடியோவை ஒலிக்கச்செய்து கேட்டுக்கொண்டே பிரயாணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் FM ல் கேட்ட ஒரு கதை என்னைச் சிந்திக்கச் செய்தது.
அந்தக் கதை என்னவென்றால், 'ராணுவத்தில் இருக்கும் ஒரு மகன் தன் தந்தைக்குப் ஃபோன் செய்கிறார். "அப்பா இன்னும் இரு தினங்களில் நான் ஊருக்கு வருகிறேன். ராணுவப் பணியில் என்னோடு வேலை செய்யும் ஒருவர், சமீபத்தில் எல்லையில் நடந்த ஒரு போரில், ஒரு கையையும் காலையும் இழந்துவிட்டார். அவரை நான் என்னுடன் அழைத்து வருகிறேன்." என்று கூறுகிறார். "ஓரு கை ஒரு கால் இழந்தவரை எப்படியப்பா நீ அழைத்து வரமுடியும்?" என்று அப்பா கேட்கிறார். "விவரங்களை நான் பிறகு சொல்கிறேன் அப்பா" என்று மகன் கூறுகிறார். இரு தினங்களுக்குப் பிறகு மீண்டும் மகனிடமிருந்து அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைப்பு வருகிறது. "அப்பா.... நான் ஊருக்கு வரவில்லை. ஒரு காப்பகத்தில் சேர்ந்துள்ளேன். ஒரு கை ஒரு காலை இழந்தது நான் தான். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் நண்பனை நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்' என்று சொன்னதும், நீங்கள் 'எப்படியப்பா நீ அழைத்து வர முடியும்?' என்று கேட்டீர்கள். இப்படி அன்பு இல்லாத உங்களோடு கை கால் இழந்த நான் எப்படி என் வாழ் நாள் முழுதும் இருக்க முடியும்?" என்று கேட்கிறார்.
இத்துடன் கதை முடிந்து விடுகிறது. அன்பு என்பது அனைவருக்கும் முக்கியமானது. என்று கூறி கதை நேரத்தை நிறைவு செய்கிறார் நிகழ்ச்சி பங்கேற்பாளர்.
இதைக் கேட்டதும் என் மனதுள் பலவித கேள்விகள். சரி.. அன்பு என்பது என்ன?
இக் கதையின் அப்பாவை அன்பில்லாதவர் என்று கூறிவிட முடியுமா? ஒருவேளை அவர், 'எப்படியப்பா நீ அவரை அழைத்து வர முடியும்?' என்று கேட்ட கேள்விக்கு முன், 'அச்சச்சோ' என்று இரக்கப் பட்டிருக்க வேண்டுமோ? அது இரக்கம் என்றல்லவா வகைப்படுத்தப் படும்! எப்படி அன்பு என்று அதை வரையறை செய்வது?
ஓரு வேளை அந்த அப்பா, மகன் எடுத்த முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டு, 'அப்படியாப்பா! அழைத்து வாயேன்' என்று கூறியிருந்தால் அவர் அன்புடையவர் அவாரோ? அதெப்படி?...... அவரைக் கீழ்ப்படிபவர் என்றோ மறுத்துக் கூறாதவர் என்றோ எதிர்த்து சொல்லாதவர் அல்லது எதிர்ப்புக் காட்டாதவர் என்றோ வேண்டுமானால் வகைப்படுத்தலாம். 'அன்பு' என்று எப்படி இதைக் கூறுவது?
இல்லையென்றால் அந்தத் தந்தை, 'அழைத்து வா மகனே! மிக்க சந்தோஷம்' என்று கூறியிருக்கலாம். இது 'இன்சொல் பேசல்' என்றல்லவா வகைப்படுத்தப்படும். இதுதான் 'அன்பு' என்று எப்படி முடிவெடுப்பது? அவர் வாயளவில் இப்படிக் கூறி, மனதளவில் எதிர்மறை எண்ணத்தைக்கூட கொண்டிருக்கலாம்.
மகன், ஒரு கை ஒரு கால் இழந்த நண்பரை அழைத்து வருகிறார் என்றதும் அவர் மனதில் எத்தனையோ கேள்விகள் தோன்றியிருக்கலாம். நண்பரைத் தங்க வைக்க வீட்டில் எப்படி மாற்றங்களையோ, ஏற்பாடுகளையோ செய்யலாம்? என்ற எண்ணவோட்டம் ஓடியிருக்கலாம்.
அவருக்குத் தனது மற்றும் தன் மனைவியின் வயோதிகம் மனக்கண் முன் தோன்றியிருக்கலாம். மகனுடன் வரும் அவரின், கை கால் இழந்த நண்பரை எப்படிப் பராமரிக்கலாம் என்ற நினைவுகள் அரும்பியிருக்கலாம்.
மகன் தன் நண்பரை, தாம் கூட்டிக்கொண்டு வந்து தாமே கூட்டிச் சென்றுவிடுவாரா அல்லது தன் பெற்றோர்களிடம் விட்டுச் செல்வதாக உள்ளாரா? அல்லது அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அங்கு அவரை ஒப்படைக்க உள்ளாரா? இது போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாமல், அந்தத் தந்தை, 'கூட்டி வா! நேரில் பேசிக்கொள்ளலாம்' என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். அப்படியும் இதை 'அன்பு' என்று வரையறை செய்து விடலாமா? உண்மையில் 'அன்பு' என்பது என்ன?
'அன்புடைமை' என்று ஒரு அதிகாரமே உருவாக்கியிருக்கும் வள்ளுவர் அன்பு பற்றி என்ன கூறுகிறார்?
இந்தக் குறளில், 'அன்புடையவர்' அன்பில்லாதர்' பற்றிய விளக்கம் கூறியுள்ளார் வள்ளுவர். அது என்னவென்றால்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக