வியாழன், 28 ஜூலை, 2016

அபி - சித்தார்த், தங்கள் பையன்கள் ஸ்ரீவத்சனுக்கும், ஸ்ரீசரணுக்கும், மற்றும், சித்தார்த்தின் அண்ணா தன் பையன் ஸ்ரீநிகேதனுக்கும் ஜூன் 9, 10 தேதிகளில் நிகழ்த்திய உபநயனத்தில் பாடிய பாடல்.'மாலை சாற்றினார்' மெட்டு.

பூணல் கல்யாணம்! - மும்மூர்த்தி
பூணல் கல்யாணம்!
ஸ்ரீநிகேதன், ஸ்ரீவத்சன், ஸ்ரீசரணின் கல்யாணம்...
                                             (பூணல் கல்யாணம்)

வேத மந்த்ரமும், -சூழும்
ஹோம தூபமும்,
பாதுகாத்து, பேணிகாத்து
பக்கபலமாய் நின்றிடும்...(வேத)
மார்பினை சுற்றிவரும்
முப்புரிநூல் தாத்பர்யம்.
                                      (பூணல் கல்யாணம்)

காயத்ரி மந்த்ரம் - நித்ய
சந்தியாவந்தனம்!
பாரம்பரிய சின்னம் - இதை
பெருமையோடு நோக்கணும் (காயத்ரி)
தேவர்கள் ஆசியும்,
உறவுகளின் வாழ்த்துடனும்
                                     (பூணல் கல்யாணம்)



1 கருத்து: