வியாழன், 28 ஜூலை, 2016

தரங்கிணி நாத்தனார் தீபாவின் பையன்கள் வ்யோம், ரித்விக் பூணலுக்கு 'அழகே.. அழகு' மெட்டில் எழுதிய பாடல்.

அழகோ... அழகு...!
எல்லாம் அழகு..!
வ்யோமும், ரித்வியும்
அழகோ... அழகு...!
வேஷ்டி மட்டுமா பட்டில்...? - துண்டும்
பட்டில் இடையில் கட்டி...
நெற்றி நிறைய வெள்ளை - விபூதி
பட்டை பட்டையாய் தீட்டி....
புதுவிதமாகவே மேக்கப் போட்டு...
விதவிதமாகவே மாலைகள் சூட்டி...
பூணல் கல்யாண வைபோகம் இங்கே...
வ்யோமும், ரித்விக்கும் ஹீரோக்கள் இங்கே...!
கமதநிஸா.. கரிசா.....
கமதநிஸா... நிரிஸா ...

வேதமந்திரங்கள் ஒலித்திட....
ஹோமதூபமும் சூழ்ந்திட...
நாதஸ்வரமும் கேட்டிட...
மேளசத்தமும்  முழங்கிட....
சிறுவர்கள் கூடிக்களித்திட
அனைவரும் பேசி மகிழ்ந்திட
உறவினர்களும் கூடிட
பெரியோர்கள் ஆசி வழங்கிட
மகிழ்ச்சி வெள்ளம் எங்கும்
பெருகி பாய்ந்து ஓட....
ரித்விக் வ்யோமும் வாழ்க!
வாழ்க! வாழ்க! வாழ்க!

கமதநிஸா கரிஸா..
கமதநிஸா  நிரிஸா !
                    (அழகோ! அழகு!)

1 கருத்து: