செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

'தெறி' பட பாடல் 'தாய்மை வாழ்கென' - 18..2.2018. அப்பா, அம்மாவின் சதாபிஷேகம்

சிம்மக்குரலுடன் யானை பலத்துடன்,
நாயகன் இவராரோ!
கண்கள் கூர்மையும் எண்ணத்தூய்மையும்
கொண்டவர் இவர் யாரோ.?
அந்த நாள் கொண்ட குறிக்கோளினை,
இந்த நாளும் மாற்றாமல்..
அன்பு கோட்டையை ராணி கை கோர்த்து
ஆட்சி செய்பவர் யாரோ...?  (சிம்மக்)


திரு நாள் மிக நல்ல நாள் இன்று
கூடியாடியே மகிழ்வோம்!
நாயகன் இவர் நாயகி எங்கள்
தாத்தா பாட்டியென உரைப்போம்!
இறைவா உன்னை பணிவோம் இன்று
மறவாதிரு மனமே!
இனிதாகவே துணையாய் இரு
தொழுவோம் அனுதினமே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக