'நான்' - எனில்
நான்தான் என்றிருந்தேன்.
'நான்' - எனில்
நானேதான் என்றிருந்தேன்.
'நான்' - எனில்
நான்தானே என்றுகூட இருந்தேன்.
பின்
'நான்' - எனில்
எனைச் சுற்றியுள்ள
ஏனையோருமோ என்றிருந்தேன்.
'நான்'
நானே இல்லாமல்
மற்றவராய் மாறிப்போனேனோ
என்றிருந்தேன்.
ஆனால்-
என் உடல் உபாதைகளுக்கு,
எவருமே
உடந்தையோ-
உடன்படவோ-
உணர்ந்துகொள்ளவோ
இல்லை யெனும்போது
'நான்' எனில்
நான்தான்!
நானேதான்!.....
நான்தானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக