
முறுக்கிக்கொண்டு முருகன் சேர்ந்த இடம்தான் பழனி!
முறுகிப்போன இப்பதார்த்தம் சேரும் இடமோ கழுநீர்!
வாயில் போட்டால் மெல்லக் கரைந்திடும் இப்பண்டம்
பாகு முறிந்து போனாலோ பரிகாசம்தான் பண்ணும்!
பல்லைப் பதம் பார்த்து 'பாறாங்கல்' பட்டம் பெறும்!
கைதவறி காலில் விழ 'கருங்கல்' என்றே கரிக்கப்படும்!
தூளாகிப் பொடிபொடியாய் அள்ளி எடுக்க வைக்கும்!
நெய்யை நிறைய குடித்துவிட்டும் நையாண்டித் தனம் செய்யும்!
தண்ணி(தண்ணீர்) காட்டி (காட்ட) சண்டிபண்ணும்
ராங்கிக்காரிதான் இந்த மைசூர்பாகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக