
'பஜ கோவிந்தம்.. பஜ கோவிந்தம்...' M.S. குரலில் செல் ஃபோன் அழைத்தது.
'மாமா ..!'
' இவர் என்ன காலங்கார்த்தால கூப்பட்றார்?'
'ஹலோ மாமா... குட் மார்னிங் .. எப்படி இருக்கீங்க....!' என்றாள் மோகனா.
'ம்ம்... நான் இப்ப TRAIN ஏறிட்டேன். மதிய சாப்பாட்டுக்கு அங்க வருவேன். அது சரி.... அது என்ன.. டயல் டோன் ஒரு பாட்டு பாடுது.. மாத்து அத மொதல்ல' என்றபடி அவள் பதில் பேசும் முன் கட் செய்துவிட்டார்.
என்ன திடீர்னு கிளம்பி வராரு..!
டேய் ராகுல்.... என்னடா பாட்ட டயல் டோனா போட்ட!... என்றபடி பரபரத்தாள் மோகனா.
ராமனாதன், மோகனாவின் தாய் மாமா. கொஞ்சம் கெடுபிடி உள்ளவர். 13 வயது வித்தியாசத்தில் பிறந்த மோகனாவின் அம்மாவும் தனது தங்கையுமான சாவித்ரியிடம் அளவு கடந்த பாசம் உடையவர். அவர்களின் அப்பா, அம்மா இருவருமே 3 மாத இடைவெளியில் இறந்த போது சாவித்ரிக்கு 15 வயது, ராமனாதனுக்கு 27 வயது. அப்போதிலிருந்தே, தன் ஒரே தங்கைக்காகவே தன் வாழ் நாளை கழிக்கத்தொடங்கி விட்டார் ராமனாதன் தாம் திருமணமே செய்து கொள்ளவில்லை. சாவித்ரிக்கு தகுந்த வரனாகப் பார்த்து திருமணம் செய்து அவளை புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தாம் மட்டும் தனியாக வாழ ஆரம்பித்தார்.
'ஏங்க.... மாமா வந்துகிட்டிருக்காரு! இன்னும் 2 மணி நேரத்துல வந்திடுவாரு'
'2 மணி நேரத்துல தானே... நல்ல வேளை நான் அதுக்குள்ள ஆஃபீஸுக்கு கிளம்பிடுவேன். நீயாச்சு உங்க மாமாவாச்சு' என்ற படி குளிக்க கிளம்பினார் ரகு.
'பஜ கோவிந்தம்...' மீண்டும் MS.அழைக்க போய் எடுத்தால் அவள் அம்மா..
'என்னம்மா... மாமா திடீர்னு கிளம்பி வரேன்னு சொல்றாரு?'
'ஆமாண்டா தங்கம்... அதுக்கு தான் ஃபோன் பண்ணினேன். நல்லா கவனிச்சு அனுப்புடா செல்லம். என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுமையா இருடா' கெஞ்சும் குரலில் சொன்னாள் அவள் அம்மா.
அம்மாவுக்கு தன் அண்ணன் மேல் மரியாதையும், பாசமும் மட்டுமல்ல ஒருவித பக்தியே உண்டு. மோகனாவின் அப்பாவிற்கு கொஞ்ச நாள் கெட்ட சகவாசம் ஏற்பட்டுவிட்டது. பணம் எதுவும் வீட்டுக்குத் தராமல், சண்டை சச்சரவு என்று இருந்த நேரத்தில் ராமனாதன் தான் தோள் கொடுத்தார். மோகனாவுக்கும், அவளுடைய அக்கா கல்பனாவுக்கும் கல்யாணம் செய்துவைத்ததும் ராமனாதன் தான். தன் அண்ணனால்தான் தாம் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியுடன் இருப்பாள் மோகனாவின் அம்மா.
'சரிம்மா... வைய்யு ஃபோனை! சிடுடுத்தாள் மோகனா.
மோகனாவுக்கும் தன் மாமா செய்த தியகங்கள் தெரியாமல் இல்லை. ஆனால் அவர் ஒரு மாதிரி டைப். தான் தான் எல்லா விஷயத்தையும் சரியாக செய்வது போலவும், மற்றவர்கள் எல்லாரும் செய்வது அபத்தமான விஷயம் மாதிரியும் பேசுவார். யார் என்ன செய்தாலும் பாராட்டவே மாட்டார். அவரிடம் எப்படி பேசுவதென்றே தெரியாது. அவர் வந்தாலே வீடு அமைதியாயிடும். மனதில் குற்ற உணர்ச்சி மாதிரி ஒரு உணர்வு பிராண்டிக் கொண்டே இருக்கும்.
கெய்சர் போட்டு 'மாமா. வென்னீர் ரெடி.. நீங்க குளிக்க போகலாம்' என்றால், குளித்துவிட்டு வந்து, ஒன்று, 'வென்னீர் சூடே இல்ல..' என்பார். இல்லையென்றால்.. 'இப்படி கொதிக்குது தண்ணி. ஆனா விளாவ மட்டும் பக்கெட்டே இல்ல' என்பார். ஒரே பக்கெட்டிலேயே விளாவலாமே! அதை அவரிடம் சொல்ல முடியாது. 'ச்ச.! என்று ஒருவித வெறுப்பு உணர்வுதான் மனதில் தோன்றும்.
சாப்பாடு போடும் போதும் அப்படித்தான். என்ன சமையலாக இருந்தாலும், முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமலேயே சாப்பிடுவார். சரி, நாமாக கேட்போம் என்று 'மாமா, உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கா' என்றால் 'எல்லாம் ஜாஸ்தியாவே இருக்கு' என்பார். அது என்ன பதில் என்றே புரியாது. ஆனால் இரண்டு மூன்று முறை போட்டுக் கொள்வார். 'நன்றாக இருக்கிறது' என்று சொன்னால் என்னவாம்? சாப்பிடறதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல..!' என்று கோபம் கொப்பளிக்கும்.
போன முறை வந்த போது, அவர் தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு, வாக்கிங் போய்விட்டு, வீட்டுக்குள் நுழையும் போது தடியில்லாமல் வருவதைப் பார்த்து, 'மாமா.. உங்க வாக்கிங் ஸ்டிக் எங்க..?' என்று கேட்டாள். அது ஏதோ ஒரு அர்த்தமற்ற, அவசியமற்ற கேள்வி போல ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,'சேறாயிடுச்சுன்னு, கழுவி வெளில வச்சிருக்கேன். என்ன.. எங்க தடி ன்னு கேள்வி கேக்கற..?' என்றபடி ஒரு சிரிப்பு சிரித்ததும் மோகனாவுக்கு தன் மேல் சேற்றை வாரியிறைத்தது போல் ஒரு அருவருப்பு தோன்றியது. அவளுக்கு எப்படித் தெரியும் அவர் தடியை கழுவி வைத்தது. எங்காவது மறதியால் வைத்துவிட்டு வந்திருக்கப் போகிறாரே என்று தானே கேட்டாள்! 'ஏனடா கேட்டோம்! என்று உள்ளம் நொந்து போய் விட்டாள் மோகனா.
இன்று அவர் வர இருக்கிறார். இம்முறை என்ன பிரளயம் வெடிக்கப் போகிறதோ என்று கலக்கத்துடன் இருந்தாள் மோகனா. ரகுவுக்கு மாமாவைப் பற்றி தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அவரும், மாமாவும் சந்தித்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவுதான். மோகனா சொல்வதிலிருந்து ரகு, மாமாவுக்கு ஒரு உருவகம் கொடுத்து இருந்தார். அதனால் மாமாமேல் அவருக்கும் ஒருவித பயம் உண்டு. இந்த குடும்பத்திற்காக அவர் பாடுபட்டதும் ரகுவுக்கு தெரியுமாதலால் மாமாமேல் மரியாதையும் உண்டு. 'நீதான் பொறுமையா டீல் பண்ணணும்' என்று மோகனாவிடம் சொல்லிவிடுவார்.
மாமா வருவதற்குள் வீட்டில் இருக்கும் ஒரே கட்டிலை, வாசலுக்குப் பக்கத்து அறையில் ஜன்னலோரம் இழுத்துப்போட்டாள். அவருக்கு படுக்கை தையார் செய்துவிட்டு, வீட்டின் மற்ற இடங்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு, பரணிலிருந்து மாமா எப்போதும் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் தாமிர டம்ப்ளரையும் சொம்பையும் எடுத்தாள். ஸ்டூல் நொடித்ததோ, இவள் காலை சரியாக வைக்கவில்லையோ 'டமால்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு ஓடி வந்த ரகு, அவளுக்கு கை கொடுத்து எழுந்திருக்க உதவினார். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. 'அய்யோ.. அப்பா' என்று அழலாம் போலிருந்தது. 'என்னங்க பண்றது..? கால் ரொம்ப வலிக்குதே! மாமா வேற வராரு' என்று சொல்லும் போதே அழுகை பீறிட்டு வந்தது 'ஷ்...! அழுகைய நிறுத்து. டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடலாம்' என்றபடி ஆட்டோ கூட்டி வந்தார் ரகு.
கணுக்காலில் ஃப்ராக்சர் ஆகியிருந்தது. டாக்டர் கட்டு போட்டு, முழு ஓய்வு எடுக்கச் சொல்லி, மருந்து கொடுத்து அனுப்பினார்.
'ஏங்க.. மணி என்ன? மாமா வர்ர ட்ரெயின் எப்போ வரும்?' என்றாள் மோகனா.
'வர்ர நேரம் தாம்மா.... இரு வீட்டுக்குப் போயிடலாம். நான் இன்னிக்கு லீவ் சொல்லிட்டேன்' என்றார் ரகு.
ஆட்டோவில் வீடு திரும்பினர். மாமா அதற்குள் வீட்டிற்கு வந்திருந்தார். ராகுல் அவரிடம் அம்மா விழுந்ததையும், அப்பாவுடன் டாக்டரிடம் போயிருப்பதையும் சொல்லியிருந்தான். ஆட்டோ சத்தம் கேட்டதும் வாசல் வரை வந்த மாமா,'ஏன் பாத்து ஏறக்கூடாது? ஒரு ஸ்டூல் மேல கூட ஏறத் தெரியாதா உனக்கு? எல்லாத்துலயும் அஜாக்ரதை!' என்றதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள் மோகனா.
மாமாவும் வந்து கைத்தாங்கலாக அவள் இறங்குவதற்கு உதவினார். மெல்ல அவளை அலுங்காமல் இருவருமாக உள்ளே அழைத்துவந்ததும்,
'இந்தா மோகனா... இந்த கட்டில்ல உக்காரு'
என்று அவருக்காக தையார் நிலையில் இருந்த கட்டிலில் உட்கார்த்திவிட்டார்.
' மாமா... அது நீங்க படுத்துக்க...' என்று மோகனா சொன்னதும்
'நான் அங்க உள்ளாற படுப்பேன். நீ மொதல்ல உக்காரு' என்று சொல்லிவிட்டு,
'மாப்பிள்ள மோகனாவ அப்படியே படுக்க வைங்க. நா இதோ வரேன்' என்றபடி உள்ளே ஓடியவர் தாம் வாங்கி வந்திருந்த ஆரஞ்சை ஜூஸ் செய்து கொண்டு வந்து 'இந்தாம்மா.. இத மொதல்ல குடி' என்றார். 'மாப்பிள்ள... நீங்க காபி குடிக்கறீங்களா? ஜூஸ் தரட்டுமா? ராகுல் நீ என்ன கண்ணு சாப்பிட்ற..? என்று கேள்விகளை அடுக்கியதும், அழுகை பீறிட்டது மோகனாவுக்கு. ஆனால் உணர்ச்சி மட்டும் வேறாயிருந்தது. ரோஜா செடியின் முள்ளை மட்டுமே இத்தனை நாளும் பார்த்திருக்கிறேன். இவ்வளவு மென்மையான பூ இருப்பதைப் பார்க்கத் தவறியிருக்கிறேனே! சமையல் கட்டுக்குள் விரைந்த மாமாவைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மோகனா.
பஜ கோவிந்தம்.. பஜ கோவிந்தம்...' M.S. குரலில் செல் ஃபோன் அழைத்தது.
'மாமா ..!'
' இவர் என்ன காலங்கார்த்தால கூப்பட்றார்?'
'ஹலோ மாமா... குட் மார்னிங் .. எப்படி இருக்கீங்க....!' என்றாள் மோகனா.
'ம்ம்... நான் இப்ப TRAIN ஏறிட்டேன். மதிய சாப்பாட்டுக்கு அங்க வருவேன். அது சரி.... அது என்ன.. டயல் பண்ணினா ஒரு பாட்டு பாடுது.. மாத்து அத மொதல்ல' என்றபடி அவள் பதில் பேசும் முன் கட் செய்துவிட்டார்.
என்ன திடீர்னு கிளம்பி வராரு..!
டேய் ராகுல்.... என்னடா பாட்ட காலர் ட்யூன் போட்ட!... என்றபடி பரபரத்தாள் மோகனா.
ராமனாதன், மோகனாவின் தாய் மாமா. கொஞ்சம் கெடுபிடி உள்ளவர். 13 வயது வித்தியாசத்தில் பிறந்த மோகனாவின் அம்மாவும் தனது தங்கையுமான சாவித்ரியிடம் அளவு கடந்த பாசம் உடையவர். அவர்களின் அப்பா, அம்மா இருவருமே 3 மாத இடைவெளியில் இறந்த போது சாவித்ரிக்கு 15 வயது, ராமனாதனுக்கு 27 வயது. அப்போதிலிருந்தே, தன் ஒரே தங்கைக்காகவே தன் வாழ் நாளை கழிக்கத்தொடங்கி விட்டார் ராமனாதன் தாம் திருமணமே செய்து கொள்ளவில்லை. சாவித்ரிக்கு தகுந்த வரனாகப் பார்த்து திருமணம் செய்து அவளை புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தாம் மட்டும் தனியாக வாழ ஆரம்பித்தார்.
'ஏங்க.... மாமா வந்துகிட்டிருக்காரு! இன்னும் 2 மணி நேரத்துல வந்திடுவாரு'
'2 மணி நேரத்துல தானே... நல்ல வேளை நான் அதுக்குள்ள ஆஃபீஸுக்கு கிளம்பிடுவேன். நீயாச்சு உங்க மாமாவாச்சு' என்ற படி குளிக்க கிளம்பினார் ரகு.
'பஜ கோவிந்தம்...' மீண்டும் MS.அழைக்க போய் எடுத்தால் அவள் அம்மா..
'என்னம்மா... மாமா திடீர்னு கிளம்பி வரேன்னு சொல்றாரு?'
'ஆமாண்டா தங்கம்... அதுக்கு தான் ஃபோன் பண்ணினேன். நல்லா கவனிச்சு அனுப்புடா செல்லம். என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுமையா இருடா' கெஞ்சும் குரலில் சொன்னாள் அவள் அம்மா.
அம்மாவுக்கு தன் அண்ணன் மேல் மரியாதையும், பாசமும் மட்டுமல்ல ஒருவித பக்தியே உண்டு. மோகனாவின் அப்பாவிற்கு கொஞ்ச நாள் கெட்ட சகவாசம் ஏற்பட்டுவிட்டது. பணம் எதுவும் வீட்டுக்குத் தராமல், சண்டை சச்சரவு என்று இருந்த நேரத்தில் ராமனாதன் தான் தோள் கொடுத்தார். மோகனாவுக்கும், அவளுடைய அக்கா கல்பனாவுக்கும் கல்யாணம் செய்துவைத்ததும் ராமனாதன் தான். தன் அண்ணனால்தான் தாம் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியுடன் இருப்பாள் மோகனாவின் அம்மா.
'சரிம்மா... வைய்யு ஃபோனை! சிடுடுத்தாள் மோகனா.
மோகனாவுக்கும் தன் மாமா செய்த தியகங்கள் தெரியாமல் இல்லை. ஆனால் அவர் ஒரு மாதிரி டைப். தான் தான் எல்லா விஷயத்தையும் சரியாக செய்வது போலவும், மற்றவர்கள் எல்லாரும் செய்வது அபத்தமான விஷயம் மாதிரியும் பேசுவார். யார் என்ன செய்தாலும் பாராட்டவே மாட்டார். அவரிடம் எப்படி பேசுவதென்றே தெரியாது. அவர் வந்தாலே வீடு அமைதியாயிடும். மனதில் குற்ற உணர்ச்சி மாதிரி ஒரு உணர்வு பிராண்டிக் கொண்டே இருக்கும்.
கெய்சர் போட்டு 'மாமா. வென்னீர் ரெடி.. நீங்க குளிக்க போகலாம்' என்றால், குளித்துவிட்டு வந்து, ஒன்று, 'வென்னீர் சூடே இல்ல..' என்பார். இல்லையென்றால்.. 'இப்படி கொதிக்குது தண்ணி. ஆனா விளாவ மட்டும் பக்கெட்டே இல்ல' என்பார். ஒரே பக்கெட்டிலேயே விளாவலாமே! அதை அவரிடம் சொல்ல முடியாது. 'ச்ச.! என்று ஒருவித வெறுப்பு உணர்வுதான் மனதில் தோன்றும்.
சாப்பாடு போடும் போதும் அப்படித்தான். என்ன சமையலாக இருந்தாலும், முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமலேயே சாப்பிடுவார். சரி, நாமாக கேட்போம் என்று 'மாமா, உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கா' என்றால் 'எல்லாம் ஜாஸ்தியாவே இருக்கு' என்பார். அது என்ன பதில் என்றே புரியாது. ஆனால் இரண்டு மூன்று முறை போட்டுக் கொள்வார். 'நன்றாக இருக்கிறது' என்று சொன்னால் என்னவாம்? சாப்பிடறதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல..!' என்று கோபம் கொப்பளிக்கும்.
போன முறை வந்த போது, அவர் தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு, வாக்கிங் போய்விட்டு, வீட்டுக்குள் நுழையும் போது தடியில்லாமல் வருவதைப் பார்த்து, 'மாமா.. உங்க வாக்கிங் ஸ்டிக் எங்க..?' என்று கேட்டாள். அது ஏதோ ஒரு அர்த்தமற்ற, அவசியமற்ற கேள்வி போல ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,'சேறாயிடுச்சுன்னு, கழுவி வெளில வச்சிருக்கேன். என்ன.. எங்க தடி ன்னு கேள்வி கேக்கற..?' என்றபடி ஒரு சிரிப்பு சிரித்ததும் மோகனாவுக்கு தன் மேல் சேற்றை வாரியிறைத்தது போல் ஒரு அருவருப்பு தோன்றியது. அவளுக்கு எப்படித் தெரியும் அவர் தடியை கழுவி வைத்தது. எங்காவது மறதியால் வைத்துவிட்டு வந்திருக்கப் போகிறாரே என்று தானே கேட்டாள்! 'ஏனடா கேட்டோம்! என்று உள்ளம் நொந்து போய் விட்டாள் மோகனா.
இன்று அவர் வர இருக்கிறார். இம்முறை என்ன பிரளயம் வெடிக்கப் போகிறதோ என்று கலக்கத்துடன் இருந்தாள் மோகனா. ரகுவுக்கு மாமாவைப் பற்றி தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அவரும், மாமாவும் சந்தித்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவுதான். மோகனா சொல்வதிலிருந்து ரகு, மாமாவுக்கு ஒரு உருவகம் கொடுத்து இருந்தார். அதனால் மாமாமேல் அவருக்கும் ஒருவித பயம் உண்டு. இந்த குடும்பத்திற்காக அவர் பாடுபட்டதும் ரகுவுக்கு தெரியுமாதலால் மாமாமேல் மரியாதையும் உண்டு. 'நீதான் பொறுமையா டீல் பண்ணணும்' என்று மோகனாவிடம் சொல்லிவிடுவார்.
மாமா வருவதற்குள் வீட்டில் இருக்கும் ஒரே கட்டிலை, வாசலுக்குப் பக்கத்து அறையில் ஜன்னலோரம் இழுத்துப்போட்டாள். அவருக்கு படுக்கை தையார் செய்துவிட்டு, வீட்டின் மற்ற இடங்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு, பரணிலிருந்து மாமா எப்போதும் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் தாமிர டம்ப்ளரையும் சொம்பையும் எடுத்தாள். ஸ்டூல் நொடித்ததோ, இவள் காலை சரியாக வைக்கவில்லையோ 'டமால்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு ஓடி வந்த ரகு, அவளுக்கு கை கொடுத்து எழுந்திருக்க உதவினார். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. 'அய்யோ.. அப்பா' என்று அழலாம் போலிருந்தது. 'என்னங்க பண்றது..? கால் ரொம்ப வலிக்குதே! மாமா வேற வராரு' என்று சொல்லும் போதே அழுகை பீறிட்டு வந்தது 'ஷ்...! அழுகைய நிறுத்து. டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடலாம்' என்றபடி ஆட்டோ கூட்டி வந்தார் ரகு.
கணுக்காலில் ஃப்ராக்சர் ஆகியிருந்தது. டாக்டர் கட்டு போட்டு, முழு ஓய்வு எடுக்கச் சொல்லி, மருந்து கொடுத்து அனுப்பினார்.
'ஏங்க.. மணி என்ன? மாமா வர்ர ட்ரெயின் எப்போ வரும்?' என்றாள் மோகனா.
'வர்ர நேரம் தாம்மா.... இரு வீட்டுக்குப் போயிடலாம். நான் இன்னிக்கு லீவ் சொல்லிட்டேன்' என்றார் ரகு.
ஆட்டோவில் வீடு திரும்பினர். மாமா அதற்குள் வீட்டிற்கு வந்திருந்தார். ராகுல் அவரிடம் அம்மா விழுந்ததையும், அப்பாவுடன் டாக்டரிடம் போயிருப்பதையும் சொல்லியிருந்தான். ஆட்டோ சத்தம் கேட்டதும் வாசல் வரை வந்த மாமா,'ஏன் பாத்து ஏறக்கூடாது? ஒரு ஸ்டூல் மேல கூட ஏறத் தெரியாதா உனக்கு? எல்லாத்துலயும் அஜாக்ரதை!' என்றதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள் மோகனா.
மாமாவும் வந்து கைத்தாங்கலாக அவள் இறங்குவதற்கு உதவினார். மெல்ல அவளை அலுங்காமல் இருவருமாக உள்ளே அழைத்துவந்ததும்,
'இந்தா மோகனா... இந்த கட்டில்ல உக்காரு'
என்று அவருக்காக தையார் நிலையில் இருந்த கட்டிலில் உட்கார்த்திவிட்டார்.
' மாமா... அது நீங்க படுத்துக்க...' என்று மோகனா சொன்னதும்
'நான் அங்க உள்ளாற படுப்பேன். நீ மொதல்ல உக்காரு' என்று சொல்லிவிட்டு,
'மாப்பிள்ள மோகனாவ அப்படியே படுக்க வைங்க. நா இதோ வரேன்' என்றபடி உள்ளே ஓடியவர் தாம் வாங்கி வந்திருந்த ஆரஞ்சை ஜூஸ் செய்து கொண்டு வந்து 'இந்தாம்மா.. இத மொதல்ல குடி' என்றார். 'மாப்பிள்ள... நீங்க காபி குடிக்கறீங்களா? ஜூஸ் தரட்டுமா? ராகுல் நீ என்ன கண்ணு சாப்பிட்ற..? என்று கேள்விகளை அடுக்கியதும், அழுகை பீறிட்டது மோகனாவுக்கு. ஆனால் உணர்ச்சி மட்டும் மாறுபட்டிருந்தது. ஜூஸ் டம்பளரை வாங்கும்போது, கொஞ்சம் தளும்பி அவள் புடவையில் தெறித்துவிட்டது. ' அடாடாடாடா..! என்ன! ஒரு ஜூஸ் டம்ப்ளரைக் கையில புடிக்கத் தெரியல!' என்றபடி உள்ளேயிருந்து ஒரு துணி கொண்டு வந்து அவள் புடவையையும், வாயையும் துடைத்து விட்டார் மாமா. கண்ணீர் தளும்பும் கண்களுடன் ஒரு புன்னகையும் அவள் உதட்டில் பூத்தது. ரோஜா செடியின் முள்ளை மட்டுமே இத்தனை நாளும் பார்த்திருக்கிறேன். இவ்வளவு மென்மையான பூ இருப்பதைப் பார்க்கத் தவறியிருக்கிறேனே!
'மாமா ..!'
' இவர் என்ன காலங்கார்த்தால கூப்பட்றார்?'
'ஹலோ மாமா... குட் மார்னிங் .. எப்படி இருக்கீங்க....!' என்றாள் மோகனா.
'ம்ம்... நான் இப்ப TRAIN ஏறிட்டேன். மதிய சாப்பாட்டுக்கு அங்க வருவேன். அது சரி.... அது என்ன.. டயல் பண்ணினா ஒரு பாட்டு பாடுது.. மாத்து அத மொதல்ல' என்றபடி அவள் பதில் பேசும் முன் கட் செய்துவிட்டார்.
என்ன திடீர்னு கிளம்பி வராரு..!
டேய் ராகுல்.... என்னடா பாட்ட காலர் ட்யூன் போட்ட!... என்றபடி பரபரத்தாள் மோகனா.
ராமனாதன், மோகனாவின் தாய் மாமா. கொஞ்சம் கெடுபிடி உள்ளவர். 13 வயது வித்தியாசத்தில் பிறந்த மோகனாவின் அம்மாவும் தனது தங்கையுமான சாவித்ரியிடம் அளவு கடந்த பாசம் உடையவர். அவர்களின் அப்பா, அம்மா இருவருமே 3 மாத இடைவெளியில் இறந்த போது சாவித்ரிக்கு 15 வயது, ராமனாதனுக்கு 27 வயது. அப்போதிலிருந்தே, தன் ஒரே தங்கைக்காகவே தன் வாழ் நாளை கழிக்கத்தொடங்கி விட்டார் ராமனாதன் தாம் திருமணமே செய்து கொள்ளவில்லை. சாவித்ரிக்கு தகுந்த வரனாகப் பார்த்து திருமணம் செய்து அவளை புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தாம் மட்டும் தனியாக வாழ ஆரம்பித்தார்.
'ஏங்க.... மாமா வந்துகிட்டிருக்காரு! இன்னும் 2 மணி நேரத்துல வந்திடுவாரு'
'2 மணி நேரத்துல தானே... நல்ல வேளை நான் அதுக்குள்ள ஆஃபீஸுக்கு கிளம்பிடுவேன். நீயாச்சு உங்க மாமாவாச்சு' என்ற படி குளிக்க கிளம்பினார் ரகு.
'பஜ கோவிந்தம்...' மீண்டும் MS.அழைக்க போய் எடுத்தால் அவள் அம்மா..
'என்னம்மா... மாமா திடீர்னு கிளம்பி வரேன்னு சொல்றாரு?'
'ஆமாண்டா தங்கம்... அதுக்கு தான் ஃபோன் பண்ணினேன். நல்லா கவனிச்சு அனுப்புடா செல்லம். என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுமையா இருடா' கெஞ்சும் குரலில் சொன்னாள் அவள் அம்மா.
அம்மாவுக்கு தன் அண்ணன் மேல் மரியாதையும், பாசமும் மட்டுமல்ல ஒருவித பக்தியே உண்டு. மோகனாவின் அப்பாவிற்கு கொஞ்ச நாள் கெட்ட சகவாசம் ஏற்பட்டுவிட்டது. பணம் எதுவும் வீட்டுக்குத் தராமல், சண்டை சச்சரவு என்று இருந்த நேரத்தில் ராமனாதன் தான் தோள் கொடுத்தார். மோகனாவுக்கும், அவளுடைய அக்கா கல்பனாவுக்கும் கல்யாணம் செய்துவைத்ததும் ராமனாதன் தான். தன் அண்ணனால்தான் தாம் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியுடன் இருப்பாள் மோகனாவின் அம்மா.
'சரிம்மா... வைய்யு ஃபோனை! சிடுடுத்தாள் மோகனா.
மோகனாவுக்கும் தன் மாமா செய்த தியகங்கள் தெரியாமல் இல்லை. ஆனால் அவர் ஒரு மாதிரி டைப். தான் தான் எல்லா விஷயத்தையும் சரியாக செய்வது போலவும், மற்றவர்கள் எல்லாரும் செய்வது அபத்தமான விஷயம் மாதிரியும் பேசுவார். யார் என்ன செய்தாலும் பாராட்டவே மாட்டார். அவரிடம் எப்படி பேசுவதென்றே தெரியாது. அவர் வந்தாலே வீடு அமைதியாயிடும். மனதில் குற்ற உணர்ச்சி மாதிரி ஒரு உணர்வு பிராண்டிக் கொண்டே இருக்கும்.
கெய்சர் போட்டு 'மாமா. வென்னீர் ரெடி.. நீங்க குளிக்க போகலாம்' என்றால், குளித்துவிட்டு வந்து, ஒன்று, 'வென்னீர் சூடே இல்ல..' என்பார். இல்லையென்றால்.. 'இப்படி கொதிக்குது தண்ணி. ஆனா விளாவ மட்டும் பக்கெட்டே இல்ல' என்பார். ஒரே பக்கெட்டிலேயே விளாவலாமே! அதை அவரிடம் சொல்ல முடியாது. 'ச்ச.! என்று ஒருவித வெறுப்பு உணர்வுதான் மனதில் தோன்றும்.
சாப்பாடு போடும் போதும் அப்படித்தான். என்ன சமையலாக இருந்தாலும், முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமலேயே சாப்பிடுவார். சரி, நாமாக கேட்போம் என்று 'மாமா, உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கா' என்றால் 'எல்லாம் ஜாஸ்தியாவே இருக்கு' என்பார். அது என்ன பதில் என்றே புரியாது. ஆனால் இரண்டு மூன்று முறை போட்டுக் கொள்வார். 'நன்றாக இருக்கிறது' என்று சொன்னால் என்னவாம்? சாப்பிடறதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல..!' என்று கோபம் கொப்பளிக்கும்.
போன முறை வந்த போது, அவர் தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு, வாக்கிங் போய்விட்டு, வீட்டுக்குள் நுழையும் போது தடியில்லாமல் வருவதைப் பார்த்து, 'மாமா.. உங்க வாக்கிங் ஸ்டிக் எங்க..?' என்று கேட்டாள். அது ஏதோ ஒரு அர்த்தமற்ற, அவசியமற்ற கேள்வி போல ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,'சேறாயிடுச்சுன்னு, கழுவி வெளில வச்சிருக்கேன். என்ன.. எங்க தடி ன்னு கேள்வி கேக்கற..?' என்றபடி ஒரு சிரிப்பு சிரித்ததும் மோகனாவுக்கு தன் மேல் சேற்றை வாரியிறைத்தது போல் ஒரு அருவருப்பு தோன்றியது. அவளுக்கு எப்படித் தெரியும் அவர் தடியை கழுவி வைத்தது. எங்காவது மறதியால் வைத்துவிட்டு வந்திருக்கப் போகிறாரே என்று தானே கேட்டாள்! 'ஏனடா கேட்டோம்! என்று உள்ளம் நொந்து போய் விட்டாள் மோகனா.
இன்று அவர் வர இருக்கிறார். இம்முறை என்ன பிரளயம் வெடிக்கப் போகிறதோ என்று கலக்கத்துடன் இருந்தாள் மோகனா. ரகுவுக்கு மாமாவைப் பற்றி தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அவரும், மாமாவும் சந்தித்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவுதான். மோகனா சொல்வதிலிருந்து ரகு, மாமாவுக்கு ஒரு உருவகம் கொடுத்து இருந்தார். அதனால் மாமாமேல் அவருக்கும் ஒருவித பயம் உண்டு. இந்த குடும்பத்திற்காக அவர் பாடுபட்டதும் ரகுவுக்கு தெரியுமாதலால் மாமாமேல் மரியாதையும் உண்டு. 'நீதான் பொறுமையா டீல் பண்ணணும்' என்று மோகனாவிடம் சொல்லிவிடுவார்.
மாமா வருவதற்குள் வீட்டில் இருக்கும் ஒரே கட்டிலை, வாசலுக்குப் பக்கத்து அறையில் ஜன்னலோரம் இழுத்துப்போட்டாள். அவருக்கு படுக்கை தையார் செய்துவிட்டு, வீட்டின் மற்ற இடங்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு, பரணிலிருந்து மாமா எப்போதும் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் தாமிர டம்ப்ளரையும் சொம்பையும் எடுத்தாள். ஸ்டூல் நொடித்ததோ, இவள் காலை சரியாக வைக்கவில்லையோ 'டமால்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு ஓடி வந்த ரகு, அவளுக்கு கை கொடுத்து எழுந்திருக்க உதவினார். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. 'அய்யோ.. அப்பா' என்று அழலாம் போலிருந்தது. 'என்னங்க பண்றது..? கால் ரொம்ப வலிக்குதே! மாமா வேற வராரு' என்று சொல்லும் போதே அழுகை பீறிட்டு வந்தது 'ஷ்...! அழுகைய நிறுத்து. டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடலாம்' என்றபடி ஆட்டோ கூட்டி வந்தார் ரகு.
கணுக்காலில் ஃப்ராக்சர் ஆகியிருந்தது. டாக்டர் கட்டு போட்டு, முழு ஓய்வு எடுக்கச் சொல்லி, மருந்து கொடுத்து அனுப்பினார்.
'ஏங்க.. மணி என்ன? மாமா வர்ர ட்ரெயின் எப்போ வரும்?' என்றாள் மோகனா.
'வர்ர நேரம் தாம்மா.... இரு வீட்டுக்குப் போயிடலாம். நான் இன்னிக்கு லீவ் சொல்லிட்டேன்' என்றார் ரகு.
ஆட்டோவில் வீடு திரும்பினர். மாமா அதற்குள் வீட்டிற்கு வந்திருந்தார். ராகுல் அவரிடம் அம்மா விழுந்ததையும், அப்பாவுடன் டாக்டரிடம் போயிருப்பதையும் சொல்லியிருந்தான். ஆட்டோ சத்தம் கேட்டதும் வாசல் வரை வந்த மாமா,'ஏன் பாத்து ஏறக்கூடாது? ஒரு ஸ்டூல் மேல கூட ஏறத் தெரியாதா உனக்கு? எல்லாத்துலயும் அஜாக்ரதை!' என்றதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள் மோகனா.
மாமாவும் வந்து கைத்தாங்கலாக அவள் இறங்குவதற்கு உதவினார். மெல்ல அவளை அலுங்காமல் இருவருமாக உள்ளே அழைத்துவந்ததும்,
'இந்தா மோகனா... இந்த கட்டில்ல உக்காரு'
என்று அவருக்காக தையார் நிலையில் இருந்த கட்டிலில் உட்கார்த்திவிட்டார்.
' மாமா... அது நீங்க படுத்துக்க...' என்று மோகனா சொன்னதும்
'நான் அங்க உள்ளாற படுப்பேன். நீ மொதல்ல உக்காரு' என்று சொல்லிவிட்டு,
'மாப்பிள்ள மோகனாவ அப்படியே படுக்க வைங்க. நா இதோ வரேன்' என்றபடி உள்ளே ஓடியவர் தாம் வாங்கி வந்திருந்த ஆரஞ்சை ஜூஸ் செய்து கொண்டு வந்து 'இந்தாம்மா.. இத மொதல்ல குடி' என்றார். 'மாப்பிள்ள... நீங்க காபி குடிக்கறீங்களா? ஜூஸ் தரட்டுமா? ராகுல் நீ என்ன கண்ணு சாப்பிட்ற..? என்று கேள்விகளை அடுக்கியதும், அழுகை பீறிட்டது மோகனாவுக்கு. ஆனால் உணர்ச்சி மட்டும் மாறுபட்டிருந்தது. ஜூஸ் டம்பளரை வாங்கும்போது, கொஞ்சம் தளும்பி அவள் புடவையில் தெறித்துவிட்டது. ' அடாடாடாடா..! என்ன! ஒரு ஜூஸ் டம்ப்ளரைக் கையில புடிக்கத் தெரியல!' என்றபடி உள்ளேயிருந்து ஒரு துணி கொண்டு வந்து அவள் புடவையையும், வாயையும் துடைத்து விட்டார் மாமா. கண்ணீர் தளும்பும் கண்களுடன் ஒரு புன்னகையும் அவள் உதட்டில் பூத்தது. ரோஜா செடியின் முள்ளை மட்டுமே இத்தனை நாளும் பார்த்திருக்கிறேன். இவ்வளவு மென்மையான பூ இருப்பதைப் பார்க்கத் தவறியிருக்கிறேனே!
அடுத்த வேலையைக் கவனிக்க சமையல் கட்டுக்குள் விரைந்த மாமாவைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மோகனா.
லக்ஷ்மி ரவி,
94868 35904
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக