செவ்வாய், 4 டிசம்பர், 2018

வீரசுதந்திரம்


                          
Image result for image of bharathiyar

எட்டயபுரம் பெற்றெடுத்த இணையற்ற கவிஞரவர்!                 நற்றமிழில் நாட்டமுள்ள ஈடில்லாக் கலைஞரவர்!         1              

பாட்டின் துணைகொண்டு, பகுத்தறிவை வளர்த்தவர்!
நாட்டின் கரம்பிடித்து நெறிப்படுத்த நினைத்தவர்!                  2

முறுக்குமீசை முண்டாசுடன், முற்போக்குக் காரரவர்!
செறிவுமிக்க கருத்துரைக்கும், கற்பனையின் சிற்பியவர்!           3

அந்நியர்கள் ஆட்சியினை, வன்மையாக எதிர்த்தவர்!
பெண்ணடிமைத் தனம்கண்டு, பொங்கியெழுந்து நின்றவர்!         4

கண்ணெனவே தாய்நாட்டைக் கருதிடவே உரைத்தவர்!
கண்ணியமாய் வாழ்வதுவே, கடமையென மொழிந்தவர்!          5

அறியாமை இருளகற்ற, அகலாக ஒளிர்ந்தவர்!
தீண்டாமைப் பேயகற்ற, தீயாக கனன்றவர்!                       6

சாதி, மதபேதத்தின், வேரறுக்க விழைந்தவர்!
நீதிநெறி, சமதர்மம், நிலைப்பதற்கு உழைத்தவர்!                 7

மூடப்பழக்க வழக்கங்களை, முற்றாக வெறுத்தவர்!
மூண்டெழுந்த அறப்போரில், மீளாத் துயரமுற்றவர்!              8

விதவைகளின் மறுமணத்தை விருப்பமுடன் ஏற்றவர்!
விரல்நுனியால் புரட்சியினை, வெடித்திடவே செய்தவர்!           9

அடிமைத்தளை அகல்வதற்கு ஆக்ரோஷப் பட்டவர்!
விடுதலைதான் வேண்டுமென்று, வீரகோஷ மிட்டவர்!            10

என் மக்கள், என் நாடெனும் எண்ணத்தை விதைத்தவர்!
வெள்ளையனை வெளியேற்ற, வந்தே மாதரம் என்றவர்!         11

சுதந்திரத்தை சுவாசமென்று சித்தரித்த செம்மலவர்!
பதவியாசை பெற்றிடாத, பண்பான ‘பாரதி’யவர்.!- ஆம்            12
பதவியாசை பெற்றிடாத, பண்பான ‘பாரதி’யவர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக