எட்டயபுரம் பெற்றெடுத்த இணையற்ற கவிஞரவர்! நற்றமிழில் நாட்டமுள்ள ஈடில்லாக் கலைஞரவர்! 1
பாட்டின் துணைகொண்டு,
பகுத்தறிவை வளர்த்தவர்!
நாட்டின் கரம்பிடித்து
நெறிப்படுத்த நினைத்தவர்!
2
முறுக்குமீசை முண்டாசுடன்,
முற்போக்குக் காரரவர்!
செறிவுமிக்க கருத்துரைக்கும்,
கற்பனையின் சிற்பியவர்! 3
அந்நியர்கள் ஆட்சியினை,
வன்மையாக எதிர்த்தவர்!
பெண்ணடிமைத் தனம்கண்டு,
பொங்கியெழுந்து நின்றவர்! 4
கண்ணெனவே தாய்நாட்டைக்
கருதிடவே உரைத்தவர்!
கண்ணியமாய் வாழ்வதுவே,
கடமையென மொழிந்தவர்! 5
அறியாமை இருளகற்ற,
அகலாக ஒளிர்ந்தவர்!
தீண்டாமைப் பேயகற்ற,
தீயாக கனன்றவர்! 6
சாதி, மதபேதத்தின்,
வேரறுக்க விழைந்தவர்!
நீதிநெறி, சமதர்மம்,
நிலைப்பதற்கு உழைத்தவர்! 7
மூடப்பழக்க வழக்கங்களை,
முற்றாக வெறுத்தவர்!
மூண்டெழுந்த அறப்போரில்,
மீளாத் துயரமுற்றவர்! 8
விதவைகளின் மறுமணத்தை
விருப்பமுடன் ஏற்றவர்!
விரல்நுனியால்
புரட்சியினை, வெடித்திடவே செய்தவர்!
9
அடிமைத்தளை அகல்வதற்கு
ஆக்ரோஷப் பட்டவர்!
விடுதலைதான் வேண்டுமென்று,
வீரகோஷ மிட்டவர்! 10
என் மக்கள், என்
நாடெனும் எண்ணத்தை விதைத்தவர்!
வெள்ளையனை வெளியேற்ற,
வந்தே மாதரம் என்றவர்! 11
சுதந்திரத்தை சுவாசமென்று
சித்தரித்த செம்மலவர்!
பதவியாசை பெற்றிடாத,
பண்பான ‘பாரதி’யவர்.!- ஆம் 12
பதவியாசை பெற்றிடாத,
பண்பான ‘பாரதி’யவர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக