வந்ததுய்யா…… வந்தது……
‘எதிர் வீட்டுல
இருக்கு… பக்கத்து வீட்டுல இருக்கு… உங்க வீட்டுல இருக்கா?’ ங்கற ஒரு விளம்பரம் மாதிரி
‘இங்க இருக்கு, அங்க இருக்குன்னு பாத்துட்டிருக்கும்போதே அது எங்க வீட்டுக்கு வந்துவிட்டது.
சைனாலேர்ந்து கிளம்பி, அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் இத்துனூண்டு கிருமிக்கு எப்படி
என் மேல ஒரு மோகம் வந்ததுன்னு தெரியலெ. விடாம காய்ச்சல் இருந்துட்டே இருந்தது. உடனேயே
ஹோம் ஐசொலேஷனை நான் கடைபிடிக்க ஆர்ம்பிச்சேன். அப்ப கூட ‘இது அதுவா இருக்காது. இது
வேறதான்னு பிளட் டெஸ்ட் குடுத்தேன். ‘டெங்கு’, ‘டைஃபாய்ட்’, எல்லாத்துக்கும் ‘நெகடிவ்’
‘நெகடிவ்’னு வந்தபோதும். ‘கொரோனாவும் நெகடிவ்’ தான்னு பாஸிட்டிவ்வா தான் நான் நம்பினேன்.
அதனாலயோ என்னவோ அது என்னை ஏமாத்தலை. ஆமாம். ‘கொரோனா பாஸிட்டிவ்”
எப்படி…? நான்
எங்குமே போகாமல் வீட்டிலேதான் இருந்தேன். எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தலையாய
கடமையா கடைபிடிச்சுட்டுதான் இருந்தேன். அப்போதான் என் மாமியார் வயோதிகத்தின் காரணமா
இறந்தாங்க. அப்போகூட எங்க ரிலேட்டிவ்ஸ் ரொம்ப பேர் வரலை. ஆனாலும் அக்கம்பக்கம். நண்பர்கள்னு
கொஞ்ச பேர் வந்தாங்க. எப்படியோ, எங்கிருந்து வந்ததோ…. வந்துவிட்டது. ஜுரத்துடன், இருமலும்
சேர்ந்துகொள்ள பயம் வந்துவிட்டது.
பங்களூரிலிருந்து
எங்கள் மகள் இருவரும், வொர்க் ஃப்ரம் ஹோம்’ அடிப்படையில் வீட்டிற்கு வந்துள்ளனர். ஒரு
வயது பேத்தியும் வீட்டில் இருந்ததால், அரசு ‘கொரோனா முகாம்’ல டெஸ்ட் குடுத்துட்டு வந்தோம்.
ரெண்டு நாள்ள முனிஸிபாலிட்டியிலிருந்து, ‘உடனே இங்க வாங்கம்மா. உங்களுக்கு ‘கொரோனா
பாஸிட்டிவ்’ என்ற ஃபோன் வந்தது. தீண்டத்தகாத
ஒரு வஸ்து போல் ஆகிவிட்டது போன்ற உணர்வு தோன்றியது.
அரசு மருத்துவமனையில்
வேகன்ஸி இல்லை. உடனே என் கணவர் ஒரு தனியார் மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றார். அவருடன்
காரில் போகும் போது ‘அவருக்குத் தொற்று ஏற்பட்டு விடக்கூடாதே! வீட்டில் குழந்தைகள்,
பேத்தி எல்லோரும் நலமாக இருக்க்வேண்டுமே!’ இப்படி ஒரே கவலை மயம்.
இதில் என் மாமியார்
இறந்து முதல் நாள் ஈமச்சடங்கும், இரண்டாம் நாள் காரியங்களும்தான் முடிந்திருக்கிறது.
அப்படி அப்படியே எல்லாத்தையும் விட்டுவிட்டு நான் பாட்டிற்கு ஆஸ்பத்ரியில்.
சும்மா சொல்லக்கூடாது.
அங்கு டாக்டர், ட்யூட்டி டாக்டர், ஸிஸ்டர்கள் எல்லோரும் எனக்கு தெய்வமாகத் தெரிந்தார்கள்.
டாக்டர், வீடியோ காலில் தினமும் பேசுவதோடு, ட்ரீட்மென்ட் பற்றியும், மருந்துகள் பற்றியும்
விளக்கிச் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.
‘நம் உடல் அமைப்பு ரொம்பவும் ஆச்சர்யமானது.
என் உடம்புக்குள் ஒரு வைரஸ் நுழைந்திருக்கிறது. உடனே வெள்ளை அணுக்கள் சுறுசுறுப்பாகி,
அதோடு சண்டை போட்டு துரத்த முயற்சிக்கிறது, இந்த புதுவித வைரஸும் வலிமையாக எதிர்சண்டை
போடுகிறது. அதனால் வெள்ளை அணுக்கள் விடாமல் அதைத் துரத்த போராடும் போராட்டத்தில், சில
உள்ளுறுப்புகளையும் அது தாக்குகிறது. அதனால் ‘ஸ்டீராய்ட்’ கொடுத்து முதலில் வெள்ளை
அணுக்களின் வேலையை நிறுத்துகிறார்கள். அதற்குப் பிறகு, நமக்குத் தெரிந்த பாரஸிட்டமால்
டைப் மருந்துகள் தாம். எனக்கு லங்க் டேமேஜ் ரொம்ப ஆகாததால் 7 நாட்களில் டிஸ்சார்ஜ்’
இந்த விஷயங்களையெல்லாம்
டாக்டரே என்னிடம் வீடியோ காலில் கூறினார். ‘கொரோனா ஐசோலேட்டட் வார்டுக்கு உறவினர்கள்
வர அனுமதியில்லை. ஆனாலும், நல்ல உணவு, நல்ல கவனிப்பு, ‘எப்படியோ போடா மாதவா…. ஒரு வாரம்
சொகுசாத்தான் இருந்துட்டு வந்திருக்கேன்.
அதற்குள் என் வீட்டில்
இருந்தவர்க்ளுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது, அதில், என் கணவர், மாப்பிள்ளையைத்
தவிர பெண்கள் இருவர், பேத்தி என்று மூன்று பேருக்கும் பாஸிட்டிவ். ஆனால் வயது, இன்ஃபெக்ஷன்
ரேட் அடிப்படையில் அவர்களுக்கு ஹோம் க்வாரண்டைன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘தூண்’ போல்
நின்று என் கணவர் எங்கள் எல்லோரையும் கவனித்திருக்கிrறார்.
‘கொரோனா’ ‘கொரோனா’
ன்னு உலகமே முழங்கும் போது ‘என்னதான் அது?’ ன்னு, தெரிஞ்சுக்க ஒரு விக்டிம்மா இருந்தேனாக்கும்’
அப்படீன்னு பெருமை பட்டுக்கலாம்.
இப்படியே ஓஓஓஓஓஓடிப்
போனது 2020. 2021 ஏ வருக வருக…. திடமான மனதுடனும், தெளிவான பார்வையுடனும் புன்னகைத்து
உன்னை வரவேற்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக