என்னனு சொல்றது..?
ஏதுனு சொல்றது...?
அதிகாலை கண்முளிச்சு,
அடுப்படில நொளஞ்சேன்னா,
நடுசாமம் ஆகும்வர
நடந்துகிட்டே தா இருப்பேன்.
காப்பித்தண்ணீ வச்சுகிட்டே
காய்கறிய வெட்டிபுட்டு
காலப் பணியாரம்
கலர்கலரா செஞ்சுடுவேன்.
ஏத்தி, இறக்கி வச்சு
போட்டுப் பரிமாறி,
தொடைச்சு சுத்தம் செஞ்சா,
சுளுவா மணி எட்டாவும்.
விடிஞ்சது தெரியாம
ஒறங்கும் பிள்ளைகள
எழுப்பிக் குளிப்பாட்டி,
உடுப்ப மாட்டிவிட்டு,
எழுதிப் படிக்கவச்சு,
எததையோ ஊட்டிவிட்டு
ஏட்டுபைய மாட்டிவிட்டு
பள்ளிக்குக் கிளப்போணும் .
மாசத்துல பத்துநா
புதுபேனா வாங்கிடுங்க!- ஆனா
எழுதி கிறுக்கணும்னா,
எதொன்னும் அம்படாது
மூடி தொலஞ்சிருக்கும்
மொன ஒடஞ்சிருக்கும்
தேடித் தாரங்குள்ள
தாவு தண்ணி தீந்துபோவும்.
ஆட்டோ கிளம்புச்சின்னா
அப்பாடான்னு ஆகிப்போகும்
வீட்டை சரி செய்ய
ஒன்னேகா மனிவேணும்.
வீடு முச்சூடும்
போர் நடந்த களமாட்டம்
வாரி எறஞ்சிருக்கும்
வகை வகையா சாமாங்க!
பொறவு...
குளிச்சு தலைமுழுகி
தொவச்சு ஒலரவச்சு
பெருக்கித் தொடச்சேன்னா,
பிற்பகலும் நெருங்கியிருக்கும்.
சோத்த வடிச்சுவச்சு,
கொழம்பு, பொறியல் செஞ்சு,
மொராக் கடஞ்சுகிட்டு,
தொவையல் ஒண்ணும் அரச்சுடுவேன்,
பக்குவமா பரிமாறி,
பாத்திரத்த ஒழிச்சுபோட்டு,
ஒருவா சாப்ட்டேன்னா...
அப்படியே ஒறங்கிடுவேன்.
அஞ்சு நிமிச ஒறக்கம்தான்
ஆனந்தமா எனக்குப்படும்
அரக்க, பரக்க எந்திரிச்சு,
டிக்காசன் வைக்க ஓடுவேன் .
படிச்சு, களைக்கும் புள்ளேங்க
பசியோட திரும்பி வரும்.
புடிச்ச டிபன் ஒண்ண
படபடன்னு செஞ்சிடணும்.
பள்ளிக்கூட உடுப்பு மாத்தி,
தல சீவி பொட்டிட்டு,
தங்கமான ஸ்கூல் நிகழ்வ
தலையோடந்தம் கேட்டிடுவேன்,
ஓடி விளையாட,
ஓரிடமும் இங்கில்ல
கேரம் ஆடிடுவோம்,
தாயம் ஆடிடுவோம்.
நா படிச்ச ஹிந்திய
நாடு பூரா பரப்பிடவோ,
வெட்டியா நானில்லைன்னு
வெவரம் வெளக்கிடவோ,
ஆழ்ந்து அனுபவிச்சு
அழகா நா சொல்லித்தர...
அற்புத நேரமிது,
ஆனந்த போதது.
அதுக்கடுத்து வீட்டுப்பாடம்!
முடிக்க வக்குங்குள்ள
அடியும், திட்டும் விழும்
படிக்க சொல்லிட்டு அடுக்களைக்கு ஓடுவேன்
ரவைக்கு சோறுதண்ணி
நிறைவா செய்யோணும்
நிரவியும் செய்யோணும்.
நேரமும் கொஞ்சமில்லை - நிக்கவும் நேரமில்லை!
ஆக்கி முடிச்சாச்சு
சாப்டு படுத்தாச்சு
கண்ணு சொருகி நிக்கும் - கணவன்
என் மொகம் பாத்து சிரிக்கும்.
அப்பாடியோய்....!
அசந்து கண் மூடினா,
அலாரம் சத்தம் போடும்
அஞ்சு மணி ஆயிடிச்சுன்னு !

ஏதுனு சொல்றது...?
அதிகாலை கண்முளிச்சு,
அடுப்படில நொளஞ்சேன்னா,
நடுசாமம் ஆகும்வர
நடந்துகிட்டே தா இருப்பேன்.
காப்பித்தண்ணீ வச்சுகிட்டே
காய்கறிய வெட்டிபுட்டு
காலப் பணியாரம்
கலர்கலரா செஞ்சுடுவேன்.
ஏத்தி, இறக்கி வச்சு
போட்டுப் பரிமாறி,
தொடைச்சு சுத்தம் செஞ்சா,
சுளுவா மணி எட்டாவும்.
விடிஞ்சது தெரியாம
ஒறங்கும் பிள்ளைகள
எழுப்பிக் குளிப்பாட்டி,
உடுப்ப மாட்டிவிட்டு,
எழுதிப் படிக்கவச்சு,
எததையோ ஊட்டிவிட்டு
ஏட்டுபைய மாட்டிவிட்டு
பள்ளிக்குக் கிளப்போணும் .
மாசத்துல பத்துநா
புதுபேனா வாங்கிடுங்க!- ஆனா
எழுதி கிறுக்கணும்னா,
எதொன்னும் அம்படாது
மூடி தொலஞ்சிருக்கும்
மொன ஒடஞ்சிருக்கும்
தேடித் தாரங்குள்ள
தாவு தண்ணி தீந்துபோவும்.
ஆட்டோ கிளம்புச்சின்னா
அப்பாடான்னு ஆகிப்போகும்
வீட்டை சரி செய்ய
ஒன்னேகா மனிவேணும்.
வீடு முச்சூடும்
போர் நடந்த களமாட்டம்
வாரி எறஞ்சிருக்கும்
வகை வகையா சாமாங்க!
பொறவு...
குளிச்சு தலைமுழுகி
தொவச்சு ஒலரவச்சு
பெருக்கித் தொடச்சேன்னா,
பிற்பகலும் நெருங்கியிருக்கும்.
சோத்த வடிச்சுவச்சு,
கொழம்பு, பொறியல் செஞ்சு,
மொராக் கடஞ்சுகிட்டு,
தொவையல் ஒண்ணும் அரச்சுடுவேன்,
பக்குவமா பரிமாறி,
பாத்திரத்த ஒழிச்சுபோட்டு,
ஒருவா சாப்ட்டேன்னா...
அப்படியே ஒறங்கிடுவேன்.
அஞ்சு நிமிச ஒறக்கம்தான்
ஆனந்தமா எனக்குப்படும்
அரக்க, பரக்க எந்திரிச்சு,
டிக்காசன் வைக்க ஓடுவேன் .
படிச்சு, களைக்கும் புள்ளேங்க
பசியோட திரும்பி வரும்.
புடிச்ச டிபன் ஒண்ண
படபடன்னு செஞ்சிடணும்.
பள்ளிக்கூட உடுப்பு மாத்தி,
தல சீவி பொட்டிட்டு,
தங்கமான ஸ்கூல் நிகழ்வ
தலையோடந்தம் கேட்டிடுவேன்,
ஓடி விளையாட,
ஓரிடமும் இங்கில்ல
கேரம் ஆடிடுவோம்,
தாயம் ஆடிடுவோம்.
நா படிச்ச ஹிந்திய
நாடு பூரா பரப்பிடவோ,
வெட்டியா நானில்லைன்னு
வெவரம் வெளக்கிடவோ,
ஆழ்ந்து அனுபவிச்சு
அழகா நா சொல்லித்தர...
அற்புத நேரமிது,
ஆனந்த போதது.
அதுக்கடுத்து வீட்டுப்பாடம்!
முடிக்க வக்குங்குள்ள
அடியும், திட்டும் விழும்
படிக்க சொல்லிட்டு அடுக்களைக்கு ஓடுவேன்
ரவைக்கு சோறுதண்ணி
நிறைவா செய்யோணும்
நிரவியும் செய்யோணும்.
நேரமும் கொஞ்சமில்லை - நிக்கவும் நேரமில்லை!
ஆக்கி முடிச்சாச்சு
சாப்டு படுத்தாச்சு
கண்ணு சொருகி நிக்கும் - கணவன்
என் மொகம் பாத்து சிரிக்கும்.
அப்பாடியோய்....!
அசந்து கண் மூடினா,
அலாரம் சத்தம் போடும்
அஞ்சு மணி ஆயிடிச்சுன்னு !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக