ஞாயிறு, 26 ஜூன், 2016

'கரண்டி யுத்தம்' - சண்டித்தனம் பண்ணுவது மைசூர் பாகா, ரவா லாடுவா....? மங்கையார் மலர்.

முறுக்கிக் கொண்டு முருகன் சேர்ந்த இடம் தான் பழனி!
முறுகிப்போன இப்பதார்த்தம் சேரும் இடமோ கழுநீர்!
வாயில் போட்டால் மெல்லக் கரைந்திடும் இப்பண்டம்,
பாகு முறிந்து போனாலோ பரிகாசம்தான் பண்ணும்.
பல்லை பதம் பார்த்து 'பாறாங்கல்' பட்டம் பெரும்.
கைதவறி காலில் விழ 'கருங்கல்' என்றே கரிக்கப்படும்.
வீடுகட்ட வாங்கப்பட்ட 'செங்கல்' என்றும் சித்தரிக்கப்படும்.
நெய்யை நிறைய குடித்துவிட்டு நைய்யாண்டிதான்  செய்யும்.
அன்று முதல் இன்று வரை.......
தண்ணி (தண்ணீர்) காட்டி சண்டி பண்ணும்
ராங்கிக்காரி மைசூர்பாகு தான்.!  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக