இந்துக்களின் முதன்மை தெய்வமான 'விநாயகர்' யானை முகம் கொண்டவர்.
'ஐந்து கரத்தனை, யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
என்று விநாயகர் துதி பாடி வழிபடுகின்றோம்.
யானை ஒருமுறை குளத்து நீரில் குளிக்க இறங்குகையில் அதன் காலை முதலை ஒன்று கவ்வ 'ஆதிமூலமே' என்று கூவி யானை இறைவனை உதவிக்கு அழைக்க, உடனே மகாவிஷ்ணு, விரைந்து வந்து தன் சக்கரத்தால் முதலையை இரு துண்டுகளாக்கினார் என்று ஒரு புராணக் கதை உள்ளது.
குறத்தியான வள்ளியை மணம் முடிக்க விரும்பிய முருகன், கிழ வேடமிட்டு வள்ளி இருந்த வனத்திற்குப் போய் அவளிடமிருந்த திணை மாவை உண்ணும்போது விக்கல் ஏற்படுகிறது. உடனே வள்ளி, முருகனை ஒரு நீர்ச்சுனைக்கு அழைத்துச் செல்கிறாள். காட்டில் வாழும் வள்ளிக்கு யானை மட்டுமே பயப்படுத்தும் மிருகம் என்பதை அறிந்துகொண்டு 'யானை அண்ணா' என்று பெருங்குரலெடுத்து அழைக்க, உடனே, பிள்ளையார் யானை உரு கொண்டு அவ்விடம் வந்து, வள்ளி முருகன் திருமணத்தை நிகழ்த்தினார்.
பழமொழிகள்.
1. யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே!
2. வெண்கல கடைக்குள் யானை புகுந்தார் போல
3. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!
4. யானையும், எறும்பும் போல.... (உருவத்திற்கு ஒப்பிடுதல்)
5. கோயில் யானை போல....( அசைந்து மெதுவாக வருவதற்கு ஒப்பிடுதல்)
6. யானைக்கு அர்ரம்! குதிரைக்கு குர்ரம் !
7. யானை தன் தலை மேலே தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வது போல .
8. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெரும்; பூனை கறுத்தால்......
9. யானை தொட்டாலும் மரணம் வரும்.
10.யானை முன்னே முயல் முக்கியது போல!
11.யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்திற்கு ஏமாந்தது போல!
12. யானை வாய்க் கரும்பும்,பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்ப வராது.
13. யானை விற்றால் யானை லாபம்! பானை விற்றால் பானை லாபம்.!
14. யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்பதுபோல்.
15. யானை வாய்க் கரும்பு போல
16. காட்டிலே யானையைக் காட்டி, வீட்டிலே பெண்ணைக் கொடுப்பது போல!
'ஐந்து கரத்தனை, யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
என்று விநாயகர் துதி பாடி வழிபடுகின்றோம்.
யானை ஒருமுறை குளத்து நீரில் குளிக்க இறங்குகையில் அதன் காலை முதலை ஒன்று கவ்வ 'ஆதிமூலமே' என்று கூவி யானை இறைவனை உதவிக்கு அழைக்க, உடனே மகாவிஷ்ணு, விரைந்து வந்து தன் சக்கரத்தால் முதலையை இரு துண்டுகளாக்கினார் என்று ஒரு புராணக் கதை உள்ளது.
குறத்தியான வள்ளியை மணம் முடிக்க விரும்பிய முருகன், கிழ வேடமிட்டு வள்ளி இருந்த வனத்திற்குப் போய் அவளிடமிருந்த திணை மாவை உண்ணும்போது விக்கல் ஏற்படுகிறது. உடனே வள்ளி, முருகனை ஒரு நீர்ச்சுனைக்கு அழைத்துச் செல்கிறாள். காட்டில் வாழும் வள்ளிக்கு யானை மட்டுமே பயப்படுத்தும் மிருகம் என்பதை அறிந்துகொண்டு 'யானை அண்ணா' என்று பெருங்குரலெடுத்து அழைக்க, உடனே, பிள்ளையார் யானை உரு கொண்டு அவ்விடம் வந்து, வள்ளி முருகன் திருமணத்தை நிகழ்த்தினார்.
பழமொழிகள்.
1. யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே!
2. வெண்கல கடைக்குள் யானை புகுந்தார் போல
3. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!
4. யானையும், எறும்பும் போல.... (உருவத்திற்கு ஒப்பிடுதல்)
5. கோயில் யானை போல....( அசைந்து மெதுவாக வருவதற்கு ஒப்பிடுதல்)
6. யானைக்கு அர்ரம்! குதிரைக்கு குர்ரம் !
7. யானை தன் தலை மேலே தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வது போல .
8. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெரும்; பூனை கறுத்தால்......
9. யானை தொட்டாலும் மரணம் வரும்.
10.யானை முன்னே முயல் முக்கியது போல!
11.யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்திற்கு ஏமாந்தது போல!
12. யானை வாய்க் கரும்பும்,பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்ப வராது.
13. யானை விற்றால் யானை லாபம்! பானை விற்றால் பானை லாபம்.!
14. யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்பதுபோல்.
15. யானை வாய்க் கரும்பு போல
16. காட்டிலே யானையைக் காட்டி, வீட்டிலே பெண்ணைக் கொடுப்பது போல!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக