மனிதர்களின் வாழ்நாள் பருவங்களில் ' விடலைப் பருவம்' என்பதைப் பற்றிய வ்யாக்யானங்கள் அநேகம் உண்டு. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் இப்பருவம், சம்மந்தப்பட்டவர்களை படாதபாடுபடுத்தும் என்பதும் எல்லோரும் அறிந்ததே! அதனால், இப்பருவம் பற்றி நான் இப்போது பேசப் போவது இல்லை.
ஆனால், நான் பேசவிருக்கும் 'இப்பருவமும்' விடலைப் பருவம் போன்றே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றே நான் உணர்கிறேன். முதலில் அத்தகு முக்கியத்துவம் நிறைந்த பருவத்திற்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டுமே...! என்னவென்று வைக்கலாம்...? "சுடலைப் பருவம்' என்று வைப்போமா..? அல்லது 'கடலைப் பருவம்' என்றா..? சரி... சரி.... காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. காலம் கடத்தாமல் 'கடலைப் பருவம்' என்றே இப்பருவத்திற்கு பெயர் வைத்துவிடுவோம்.
என்ன தோழிகளே...! 'கடலைப் பருவம்' நாம் இருக்கும் இப்பருவம் பற்றியதுதான்.
சிறு வயது முதலே, ஆடிப் பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியவாறு எதிர்காலம் என்பதை - என்னவோ எட்டிப் பிடிக்க முடியாத - ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைந்த பட்டாம்பூச்சியாய் பாவித்து - எட்டி எட்டிப் பிடிக்க எத்தனித்தபடி என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறோம்.
முதலில், படித்தோம் - பரிசுகள் பெற்றோம்!
பின்னர் தோழியரோடு களித்தோம் - கதை பேசி சிரித்தோம்!
பிறகு மணம் முடித்தோம் - மகிழ்ச்சிக் கடலில் திளைத்தோம்.!
படிப்பிற்கும், திருமணத்திற்கும் இடையில் ஒரு சிலர் பணியில் அமர்கின்றனர். பதவிப் பொறுப்பைப் பெறுகின்றனர். பணியினுடனே மணம் முடிக்கின்றனர்.
எப்படியோ.... மணம் ஆனபின், புது புது உறவுகள்...! மக்கட்ச்செல்வம்...!
மழலைப் பேச்சு, விஷமம், விளையாட்டு என்று, கண்ணெதிரே உயிர் ஒன்று உருவாகி, வளர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
அடுத்து, பிள்ளைகளின் பள்ளிப் பருவம் ! அப்போது நம் பள்ளிப் பருவம் மனத் திரையில் நிழலாட, நாமும் பிள்ளையோடு - பிள்ளையாய் பள்ளிப்பருவத்தில் பயணிப்பதுபோல உணர்கிறோம். மகனோ.... மகளோ..... அவர்களை நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக நினைக்கிறோம். அவர்களோடு சேர்ந்து மீண்டும் ஆடிப்பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியபடி..........
இருங்கள்! இருங்கள்!
நாம் இத்தனைக் காலமாய் ஒரு விஷயத்தை மறந்தே போனோமே...!நாம் ஏறெடுத்தும் பார்க்காத 'அது' என்னவோ எட்ட எட்ட அடிவைத்து, ஏறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆம்! நம் வயதைத்த்த்தான் சொல்கிறேன். அதற்குள் நாற்பதைக் கடந்துவிட்டோமே...! விருப்பமே இல்லாமல் பற்பல மாற்றங்களுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கிறோமே...!
இன்று நம் மகள் இளமைப் பொலிவுடன், அழகுச் சிலையாய் பரிமளிக்கையில், நம் கல்லூரி நாட்கள் நம் கண் முன்னே வந்து, 'நாம் தான் நம் எதிரில் இருக்கும் நம் மகள்' என்ற மாய எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால்.... ஆனால்........ கண்ணாடி பிரதிபலிக்கும் நம் பிம்பமோ, பீதியளிப்பதாய் உள்ளது.
காதோரம் வெள்ளி முடிகள் வெளிப்பட்டு மெல்ல சிரிக்கின்றன.
கொத்துக் கொத்தாய் தலைமுடி கொட்டி ஆங்காங்கே வழுக்கை விழத்தொடங்கியுள்ளது.
தரையில் அமர்ந்து எழுகையில் சிரமம் தெரிகிறது.
மாடிப் படி ஏறி இறங்கினாலோ...... மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது.
வெய்யில் தகிக்கிறது...... குளிர் நடுக்குகிறது....
ஜுரம்,தலைசுற்றல் என்று மருத்துவரிடம் போனால்....... உப்பைக் குறை! உரைப்பைக் குறை! சர்க்கரையைத் தவிர்! எண்ணையில் பொறித்ததை எந்நாளும் உண்ணாதே! உடற்பயிற்ச்சி செய்! நடை பழகு! என்ற எண்ணற்ற கட்டளைகளை இயல்பாக அடுக்குகிறார்.
தலைவலி என்று கண் டாக்டரிடம் போனால், 'அ, ஆ, இ,ஈ, A,B,C,D என்று படிக்கச்சொல்கிறார். நாமும் நம் பள்ளி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தபடி படித்தால்... அல்லது படிக்க முயற்சி செய்தால்... கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, புறையென்று ஏதாவது சொல்லி கண் கவசமாய் கண்ணாடியைப் பரிந்துரைக்கிறார்.
இவை உடல் ரீதியான பிரச்சனைகள் என்றால் மன ரீதியான பிரச்சனைகளோ மிக பிரும்மாண்டமாக இருக்கின்றன.
நம்மைவிட சற்றே மூத்த நம் கணவர்களுக்கும் இதே பிரச்சனைகள் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தாலும், மனம் என்னவோ மணம் ஆன புதிதில் இருந்தவரோடு நிகழ்கால கணவனை ஒப்பிட்டு - ஒப்பிட்டு . நிதர்சனத்தை ஏற்க மறுக்கிறது.
குழந்தைகள் என்னடா என்றால்... நவீன விஞ்ஞான வளர்ச்சியின் ஞானம் கிடைக்கப் பெற்றதாலோ என்னவோ, 'அம்மா, உனக்கு இதெல்லாம் புரியாது' என்று கூறி நம்மை சென்ற தலைமுறையின் சின்னமாக்குகின்றனர்.
நாம் அவர்களின் நல்ல தோழிகளாக இருப்பதாக கர்வத்தோடு நினைத்துக்கொண்டிருக்கையில் அவர்களோ......' அம்மா, என் friends முன்னாடி நீ இப்படி நடந்துக்கணும், அப்படி பேசணும், இப்படியெல்லாம் பேசக்கூடாது'
என்றெல்லாம் கூறி நம்மைத் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.
ஜிமிக்கி, கொலுசு போன்ற நகைகளைப் போட்டுக்கொள்ளலாமா? கூடாதா.....? நாயகன் கமல் கூறுவது போல நாம் 'சின்னவளா...? பெரியவளா ...? என்ற கேள்வி அடிக்கடி அடிமனதில் எழும்பிக்கொண்டே இருக்கிறதே...!
என்ன தோழிகளே! நான் சொல்லும் 'கடலைப் பருவம்' உங்களுக்குப் புரிகிறது தானே...? நீங்களும் இப்பருவக் கோளாறுகளை அனுபவிக்கிறீர்கள்தானே...?
ஒன்றும் பெரிய விஷயம் இல்லைங்க....! நாற்பதை கடந்திருக்கிறோம் அவ்வளவுதான். இருப்பினும் ' எதிர்காலம்' எதிர்காலம்' என்றோமே அந்த எதிர்காலமே நிகழ்காலமானது புரியத்தொடங்கி நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
காலச் சக்கரம் ஏன் இப்படி குடு குடு வென்று ஓடி கலக்கத்தை ஏற்படுத்துகிறது....?
'ஏ காலச்சக்கரமே......! கொஞ்சம் மெதுவாக சுழலமாட்டாயா....? அல்லது நீ சுழலும்படி சுழலேன் ! எங்களிடம் ஏன் உன் தாக்கத்தை ஏற்படுத்துகின்றாய்...?



ஆனால், நான் பேசவிருக்கும் 'இப்பருவமும்' விடலைப் பருவம் போன்றே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றே நான் உணர்கிறேன். முதலில் அத்தகு முக்கியத்துவம் நிறைந்த பருவத்திற்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டுமே...! என்னவென்று வைக்கலாம்...? "சுடலைப் பருவம்' என்று வைப்போமா..? அல்லது 'கடலைப் பருவம்' என்றா..? சரி... சரி.... காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. காலம் கடத்தாமல் 'கடலைப் பருவம்' என்றே இப்பருவத்திற்கு பெயர் வைத்துவிடுவோம்.
என்ன தோழிகளே...! 'கடலைப் பருவம்' நாம் இருக்கும் இப்பருவம் பற்றியதுதான்.
சிறு வயது முதலே, ஆடிப் பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியவாறு எதிர்காலம் என்பதை - என்னவோ எட்டிப் பிடிக்க முடியாத - ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைந்த பட்டாம்பூச்சியாய் பாவித்து - எட்டி எட்டிப் பிடிக்க எத்தனித்தபடி என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறோம்.
முதலில், படித்தோம் - பரிசுகள் பெற்றோம்!
பின்னர் தோழியரோடு களித்தோம் - கதை பேசி சிரித்தோம்!
பிறகு மணம் முடித்தோம் - மகிழ்ச்சிக் கடலில் திளைத்தோம்.!
படிப்பிற்கும், திருமணத்திற்கும் இடையில் ஒரு சிலர் பணியில் அமர்கின்றனர். பதவிப் பொறுப்பைப் பெறுகின்றனர். பணியினுடனே மணம் முடிக்கின்றனர்.
எப்படியோ.... மணம் ஆனபின், புது புது உறவுகள்...! மக்கட்ச்செல்வம்...!
மழலைப் பேச்சு, விஷமம், விளையாட்டு என்று, கண்ணெதிரே உயிர் ஒன்று உருவாகி, வளர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
அடுத்து, பிள்ளைகளின் பள்ளிப் பருவம் ! அப்போது நம் பள்ளிப் பருவம் மனத் திரையில் நிழலாட, நாமும் பிள்ளையோடு - பிள்ளையாய் பள்ளிப்பருவத்தில் பயணிப்பதுபோல உணர்கிறோம். மகனோ.... மகளோ..... அவர்களை நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக நினைக்கிறோம். அவர்களோடு சேர்ந்து மீண்டும் ஆடிப்பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியபடி..........
இருங்கள்! இருங்கள்!
நாம் இத்தனைக் காலமாய் ஒரு விஷயத்தை மறந்தே போனோமே...!நாம் ஏறெடுத்தும் பார்க்காத 'அது' என்னவோ எட்ட எட்ட அடிவைத்து, ஏறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆம்! நம் வயதைத்த்த்தான் சொல்கிறேன். அதற்குள் நாற்பதைக் கடந்துவிட்டோமே...! விருப்பமே இல்லாமல் பற்பல மாற்றங்களுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கிறோமே...!
இன்று நம் மகள் இளமைப் பொலிவுடன், அழகுச் சிலையாய் பரிமளிக்கையில், நம் கல்லூரி நாட்கள் நம் கண் முன்னே வந்து, 'நாம் தான் நம் எதிரில் இருக்கும் நம் மகள்' என்ற மாய எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால்.... ஆனால்........ கண்ணாடி பிரதிபலிக்கும் நம் பிம்பமோ, பீதியளிப்பதாய் உள்ளது.
காதோரம் வெள்ளி முடிகள் வெளிப்பட்டு மெல்ல சிரிக்கின்றன.
கொத்துக் கொத்தாய் தலைமுடி கொட்டி ஆங்காங்கே வழுக்கை விழத்தொடங்கியுள்ளது.
தரையில் அமர்ந்து எழுகையில் சிரமம் தெரிகிறது.
மாடிப் படி ஏறி இறங்கினாலோ...... மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது.
வெய்யில் தகிக்கிறது...... குளிர் நடுக்குகிறது....
ஜுரம்,தலைசுற்றல் என்று மருத்துவரிடம் போனால்....... உப்பைக் குறை! உரைப்பைக் குறை! சர்க்கரையைத் தவிர்! எண்ணையில் பொறித்ததை எந்நாளும் உண்ணாதே! உடற்பயிற்ச்சி செய்! நடை பழகு! என்ற எண்ணற்ற கட்டளைகளை இயல்பாக அடுக்குகிறார்.
தலைவலி என்று கண் டாக்டரிடம் போனால், 'அ, ஆ, இ,ஈ, A,B,C,D என்று படிக்கச்சொல்கிறார். நாமும் நம் பள்ளி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தபடி படித்தால்... அல்லது படிக்க முயற்சி செய்தால்... கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, புறையென்று ஏதாவது சொல்லி கண் கவசமாய் கண்ணாடியைப் பரிந்துரைக்கிறார்.
இவை உடல் ரீதியான பிரச்சனைகள் என்றால் மன ரீதியான பிரச்சனைகளோ மிக பிரும்மாண்டமாக இருக்கின்றன.
நம்மைவிட சற்றே மூத்த நம் கணவர்களுக்கும் இதே பிரச்சனைகள் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தாலும், மனம் என்னவோ மணம் ஆன புதிதில் இருந்தவரோடு நிகழ்கால கணவனை ஒப்பிட்டு - ஒப்பிட்டு . நிதர்சனத்தை ஏற்க மறுக்கிறது.
குழந்தைகள் என்னடா என்றால்... நவீன விஞ்ஞான வளர்ச்சியின் ஞானம் கிடைக்கப் பெற்றதாலோ என்னவோ, 'அம்மா, உனக்கு இதெல்லாம் புரியாது' என்று கூறி நம்மை சென்ற தலைமுறையின் சின்னமாக்குகின்றனர்.
நாம் அவர்களின் நல்ல தோழிகளாக இருப்பதாக கர்வத்தோடு நினைத்துக்கொண்டிருக்கையில் அவர்களோ......' அம்மா, என் friends முன்னாடி நீ இப்படி நடந்துக்கணும், அப்படி பேசணும், இப்படியெல்லாம் பேசக்கூடாது'
என்றெல்லாம் கூறி நம்மைத் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.
ஜிமிக்கி, கொலுசு போன்ற நகைகளைப் போட்டுக்கொள்ளலாமா? கூடாதா.....? நாயகன் கமல் கூறுவது போல நாம் 'சின்னவளா...? பெரியவளா ...? என்ற கேள்வி அடிக்கடி அடிமனதில் எழும்பிக்கொண்டே இருக்கிறதே...!
என்ன தோழிகளே! நான் சொல்லும் 'கடலைப் பருவம்' உங்களுக்குப் புரிகிறது தானே...? நீங்களும் இப்பருவக் கோளாறுகளை அனுபவிக்கிறீர்கள்தானே...?
ஒன்றும் பெரிய விஷயம் இல்லைங்க....! நாற்பதை கடந்திருக்கிறோம் அவ்வளவுதான். இருப்பினும் ' எதிர்காலம்' எதிர்காலம்' என்றோமே அந்த எதிர்காலமே நிகழ்காலமானது புரியத்தொடங்கி நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
காலச் சக்கரம் ஏன் இப்படி குடு குடு வென்று ஓடி கலக்கத்தை ஏற்படுத்துகிறது....?
'ஏ காலச்சக்கரமே......! கொஞ்சம் மெதுவாக சுழலமாட்டாயா....? அல்லது நீ சுழலும்படி சுழலேன் ! எங்களிடம் ஏன் உன் தாக்கத்தை ஏற்படுத்துகின்றாய்...?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக