திங்கள், 27 ஜூன், 2016

தாயும், மகளும்

         "இந்த அம்மாவை புரியவும் இல்ல.... புடிக்கவும் இல்ல....." ராதாவின் மனதில் கோபம் கொப்பளித்தது.
          திருமணம் ஆகி 6 மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அம்மா வீட்டிற்க்கு தான் மட்டும் போய் 2 நாட்கள் இருந்துவிட்டு தன் கணவன் வீடு திரும்பி இருந்தாள்  ராதா. 2 நாட்களுமே  ராதாவுக்குப் பிடித்த சமையலாக -  வாய்க்கு ருசியாக செய்து போட்டிருந்தாள் அம்மா.
           இன்று தன் வீட்டில் புதினா சட்னி செய்து - அது அம்மா செய்திருந்ததைப் போலவே இருந்ததால், மகிழ்ச்சியோடு அம்மாவுக்குப் போன் செய்தால்..... அம்மா துளி கூட பாராட்டாமல், "அச்சச்சோ!!! ராதா.... புதினா உன் மாமியாருக்கு அலர்ஜியாச்சே....! உளுத்தம்பருப்பு தாளித்தால் உன் கணவருக்குப் பிடிக்காதே! என்கிறாள்.
            இந்த அம்மாவை புரியவும் இல்ல...... புடிக்கவும் இல்ல....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக