வெள்ளி, 17 ஜூலை, 2020

அக்கூ குருவி


17.07.2020. மத்தியமர்
அக்கூ….. அக்கூ…… ன்னு குரல் கொடுக்கும் குருவியப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? கரெக்டா ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் பாதி வரை ஒரு குருவி காலையிலும், மாலையிலும் மட்டும் அக்கூ…. அக்கூ…..ன்னு கத்தும். மகாதானபுரத்தில் என்னோட ஸ்கூல் வயசுல நாங்க கேட்டு ரசித்து, வியந்திருக்கிறோம். அங்கெல்லாம் ‘அக்கூ’ கத்த ஆரம்பிச்சுடுத்து… காவிரில தண்ணி வந்துடும்’னு’ சொல்வார்கள், அதே மாதிரி ஜூன்12ம் தேதி மேட்டூர் அணை திறப்பார்கள். அந்த குருவியோட அக்கா ஆத்தோட அடிச்சுண்டு போனதுனால ‘அக்கூ… அக்கூ..’ ன்னு கூப்பிடறதுன்னு அதுக்கு ஒரு கதை கூட சொல்லுவாங்க. மகாதானபுரத்துல சின்ன காவேரி, பெரிய காவேரி ன்னு ரெண்டு காவேரி இருக்கும். பெரிய காவேரி தான் அகண்ட காவேரி. அதுதான் மெயின் நதி சின்ன காவேரி ங்கறது மாயனூர் பெட்ரெகுலேட்டர் லேர்ந்து விவசாயத்த்துக்காக திறந்துவிடப்படற தண்ணீர். சின்ன காவேரியும் ஓரளவு அகலமாவே இருக்கும்.
கும்பகோணத்துலயும் காவிரி உண்டு அக்கூ குருவி இங்கயும் அதே மாசத்துல எங்கேயிருந்தோ வந்துடும் ‘அக்கூ’ அக்கூ’ னு கூவும். சரி காவேரில அக்கா அடிச்சுண்டு போன கதைதான் போலயிருக்கு இங்கயும்னு நினைச்சிப்பேன். இப்ப தஞ்சாவூர்லயும் அதே மாசத்துல கத்தறது. இங்க காவிரியின் கிளை நதியான வெட்டாறுதான் உண்டு.
எனக்கு இந்த குருவியைப் பத்தின ஆர்வம் அதிகமாயிருக்கு. இந்த குருவி எங்கிருந்து இந்தப் பகுதிகளுக்கு மைக்ரேட் ஆகி வர்ரது? ஒரு சமயத்துல, ஒரு குருவியோட குரல்தான் கேக்கும். நிறைய குருவிகள் ஒரே சமயத்துல கத்தி நான் கேட்டதில்ல. மத்யானம் அந்த குரல் கேட்கறதில்ல. கார்த்தாலயும், சாயங்காலமும் கேக்கறது. சில சமயம் குரல் வர்ர மரத்த கூர்ந்து பாத்தா குயில் போல தோணும். ஆனா நிச்சயமா தெரியல. யாராவது இந்த குருவி பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லுங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக