ஞாயிறு, 19 ஜூலை, 2020

சுந்தரும், வாசுகியும்

'நேத்திக்குக் கூட ஒரு சின்ன சண்டை. ஏன் தான் இப்பெல்லாம் சுந்தர் மேல கோபம் வர்ரதுன்னு தெரியல. ' வாசுகியின் மனதுக்குள் இந்த கேள்வி எழுந்து தன் மேலயே வருத்தம் வந்தது.

'நான் சொல்றதுக்கெல்லாம்  இப்பெல்லாம் உடனே மறுப்பு சொல்றா....எப்படி இருப்பா முன்னாடியெல்லாம்'  மனதுள் புழுங்கினான் சுந்தர். 
 'இனிமே சண்டையே போடக்கூடாது'  'வாசுகி.... வா வெளில போய் ஏதாவது பழம் வாங்கிட்டு வரலாம்' என்றான்.
உடனே சுறுசுறுப்பாக  வாசுகியும் கிளம்பினாள்.
டூ வீலரில்  புறப்பட்டனர்.
'இந்த வண்டீல பழம் நல்லாயிருக்கு... இங்க நிறுத்துங்க'

'இங்க வேண்டாம். அந்த கடையில வாங்கலாம்' என்றான்.

வாசுகிக்கு புறு புறு என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நான் சொன்னா அத கேக்கக் கூடாது'.. 'உம்மென்று பேசாமல் வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் சுந்தர் மேல் பாய்ந்தாள். 'உங்களுக்கு கொய்யாப்பழம் பிடிக்குமே... அந்த வண்டீல இருந்தது நல்ல பெரிசு பெரிசா இருந்ததுன்னு தானே அங்க நிறுத்த சொன்னேன்! ஏன் நான் சொன்ன இடத்துல நிறுத்தினா என்ன... ஏன் வேற கடைக்குப் போனீங்க'

'ஏய்.. சும்மா நிறுத்தறியா..  நீ சொன்ன பழ வண்டிக்குப் பக்கத்துல ரெண்டு நாய் படுத்திருந்தது.நீ நாய் னா பயப்படுவியேன்னு வேற கடைக்குப் போனா.... சும்மா பேசிகிட்டே போறியே!' சுந்தரும் கத்தினான்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக