வானத்து நிலவதுக்கு உளமாற லாலி!
மலர்ந்துள்ள மல்லிகைக்கும் மனமாற லாலி! பொன்னூஞ்சலில் அமர்ந்த மல்லி நிலாவே...
ஜெகம் போற்ற வாழ்ந்திடவே நாங்கள் பாடும் லாலி.....
(வானத்து)
கல்யாண ராமனுக்கு வைதேகி போலே.
அரிச்சந்தர ராஜாவுக்கு சந்திரமதி போலே..
சத்தியவானுக்கு சாவித்ரியை போலே..
(திருவள்ளுவருக்கு வாசுகியும் நீயே!)
ஜெயராமனுக்கு என்றும் மாதங்கியும் நீயே!
(வானத்து)
அழகான தமயந்திக்கு நளராஜன் போலே..
அன்பான சம்யுக்தைக்கு ப்ருத்விராஜன் போலே......
எங்கள் மாதங்கிக்கு ஜெயராமன் நீயே...
அன்பான கணவனும் நல்ல நண்பன் நீயே..
(வானத்து )
THIS IS MY FIRST SONG SUNG DURING MY COUSIN LATHA'S WEDDING. IT IS WRITTEN IN THE TUNE OF A CINE SONG 'VARAM THANDHA SAMIKKU'.
பதிலளிநீக்கு