வெள்ளி, 1 ஏப்ரல், 2016

சௌமித்ரி (என் முதல் பெண்) ஆண்டுநிறைவு பாடல் -பொன்னில் வானம் போட்டது கோலங்களே !' படம் - 'வில்லுபாட்டுக்கரன்'

கண்ணே, பொன்னே, மல்லிகை பூச்சரமே .....! - நீ
பிரம்மன் தூரிகை காட்டிய  ஓவியமே..!
கண்மணியே, பொன்சிலையே,  கற்கண்டு  தேன் சுவையே....
                                                                                             (கண்ணே)

ஓடியே உனை அணைத்து முத்தம் கன்னங்களில் கொடுத்தேன்...!
தேடிய சுகம் இதுதான்.. இது தெய்வம் தந்த விருந்து....
பூப்போல் உன் உள்ளம்தான்... காண்கையில் மனம் துள்ளும்தான் ...
ஆனந்தம் ஆனந்தம்தான்........
                                                                                               (கண்ணே )


தாம் தகிட தீம் என்று நடனம் ஆட வேண்டும்......
தா .. தநிசபா ... ... என்று பா ட்டு பா ட வேண்டும்....
பார் முழுதும் பறந்து திரிந்து களித்திருக்க வேண்டும்...
நீ பல கலைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
பாடம் கற்று, பட்டம் பெற்று, பரிசு பெற வேண்டும்....
பூ முடித்து  புவிதனிலே பவனி வர வேண்டும்....
பூ போல்  தினம் சிரித்து ...... அன்பாய்  எல்லோரையும் நடத்து....
கனிபோல் இனித்திருந்து..... உன்பால் எல்லோரையும் திருப்பு....
பூப் போல் உன் உள்ளம்தான்...... காண்கையில்  மனம் துள்ளும் தான்....
ஆனந்தம் ஆனந்தம் தான்....
                                                                                                    (கண்ணே)


'

1 கருத்து: