கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே !
என் பாட்டைக் கேள் நீ
உண்மைகள் சொல்வேன்!
ஸ்ருதியோடு லயம் போலவே...
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாண)
மாலை இடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
அன்பென்னும் சிறையில் கைதாகுமே...!
சோலைக் குயில் ரெண்டும் இஷ்டப்படி எங்கும்
இசை பாடித் திரியும் பொற்காலமே...!
அழகான மனைவி, அன்பான துணைவி..
அமைந்தாலே பேரின்பமே...!
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே...!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி..
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி...
சந்தோஷ சாம்ராஜ்யமே.....!
(கல்யாண)
எங்கெங்கோ பிறந்து எங்கெங்கோ வளர்ந்து
இந்நாளில் ஒன்றாய் இணைந்தாய் அம்மா...!
கண் இரண்டு என்று இருந்தாலும் காட்சி
ஒன்றாக வேண்டும் கேள் நீ அம்மா...!
விட்டுக் கொடுத்தல், தட்டிக் கொடுத்தல்
இருந்தாலே பேரின்பமே...!
நல்ல துணையாக இருந்திடல் வேண்டும்
முல்லை பூ போலே சிரித்திடல் வேண்டும் !
உல்லாசம் நீடிக்குமே...!
(கல்யாண)
'
என் பாட்டைக் கேள் நீ
உண்மைகள் சொல்வேன்!
ஸ்ருதியோடு லயம் போலவே...
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாண)
மாலை இடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
அன்பென்னும் சிறையில் கைதாகுமே...!
சோலைக் குயில் ரெண்டும் இஷ்டப்படி எங்கும்
இசை பாடித் திரியும் பொற்காலமே...!
அழகான மனைவி, அன்பான துணைவி..
அமைந்தாலே பேரின்பமே...!
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே...!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி..
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி...
சந்தோஷ சாம்ராஜ்யமே.....!
(கல்யாண)
எங்கெங்கோ பிறந்து எங்கெங்கோ வளர்ந்து
இந்நாளில் ஒன்றாய் இணைந்தாய் அம்மா...!
கண் இரண்டு என்று இருந்தாலும் காட்சி
ஒன்றாக வேண்டும் கேள் நீ அம்மா...!
விட்டுக் கொடுத்தல், தட்டிக் கொடுத்தல்
இருந்தாலே பேரின்பமே...!
நல்ல துணையாக இருந்திடல் வேண்டும்
முல்லை பூ போலே சிரித்திடல் வேண்டும் !
உல்லாசம் நீடிக்குமே...!
(கல்யாண)
'
பதிலளிநீக்குThis song I used to sing in all the marriages. it is in the tune of "Kalyana malai". But in the original song second paragraph is different and it is not in the happy mood. So, I reconstruct those lines in my own wordings.